The Seithikathir®
WELCOME! SUPPORT OUR JOURNALISM! • The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world. WE THANK YOU FOR YOUR TRUST IN US.
نمایش بیشتر15 113
مشترکین
-224 ساعت
-167 روز
-7730 روز
- مشترکین
- پوشش پست
- ER - نسبت تعامل
در حال بارگیری داده...
معدل نمو المشتركين
در حال بارگیری داده...
00:16
Video unavailableShow in Telegram
குட்டியானைக்கு பாலூட்டி, தடவி கொடுத்த தாய் யானை.
கோவை மருதமலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு தொடர் சிகிச்சையால் அளிப்பதால் சற்று உடல்நிலை தேறியது.
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலம் குன்றிய தாய் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை; தெம்பு பெற்று எழுந்த நின்ற தாயை வாஞ்சையுடன் கொஞ்சிய குட்டி யானை.
👍 5🥰 1
தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு.
ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு.
கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்.
மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
👍 16
Photo unavailableShow in Telegram
ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை
டெல்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை
திமுக எம்.பி., டி.ஆர்.பாலு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்
😁 32👍 5👎 3
பள்ளிகளை ஜூன் 6ல் தொடங்குவதற்கு பதிலாக ஒரு வார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழக அரசு மாநிலத்தில் நிலவும் கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளி மாணவச் செல்வங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது.
வெயிலால் சில நேரம் வெப்பமும், சில நேரம் கடும் வெப்பமும் பொது மக்களையும், கால்நடைகளையும் பாதிக்கிறது. எனவே வெயில் காலமான இப்பொழுது மாநிலத்தின் பலப்பகுதிகளில் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். கடுமையான வெப்பத்தால் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் அவர்களது பணிகளில் சரிவர ஈடுபட முடியவில்லை. அது மட்டுமல்ல குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் தடை ஏற்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அதிக வெப்ப நிலையால் மாணவர்கள், மாணவிகள், பெண்கள், முதியோர் மயங்கி விழுந்ததும், சில இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் வருத்தத்துக்குரியது.
குறிப்பாக டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலப்பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழலில் வெளி மாநிலங்களில் வெப்ப நிலை சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு பள்ளிச்செல்லும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் கவனத்தில் கொண்டு ஜூன் 6 ல் பள்ளிகளில் வகுப்புகளை தொடங்குவதற்கு பதிலாக ஒரு வார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
ஜி.கே.வாசன் MP, தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
• https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
👍 11❤ 1
Photo unavailableShow in Telegram
ஜூன் 2வது வாரம் பள்ளிகளை திறக்கலாம்- டாக்டர் ராமதாஸ்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் திறப்பை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை அரசு தீர்மானிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்.
👍 37👎 17👏 2
2வது நாள் தியானத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி.
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 2 வது நாள் தியானத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி.
👎 31❤ 30🤣 9👍 3
கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய நமஸ்காரம் செய்த பிரதமர் மோடி…
👍 29👎 29❤ 6🤣 1
Photo unavailableShow in Telegram
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்.
தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என அறியப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்.
அவர் இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், உள்துறை நடவடிக்கை.
2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் நடவடிக்கை.
திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை பணியிடை நீக்கம்.
👎 50👍 18❤ 3👏 1