உழவனின் தேடல் ©
前往频道在 Telegram
குழுவின் விதிமுறைகள் 1.விவசாய பதிவுகளுக்கள் மட்டுமே அனுமதி. 2.விவசாய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 3.அரசியல் மற்றும் ஜாதி மதம் மற்றும் ஆன்மிக பதிவுகளுக்கு அனுமதி இல்லை. 4.வாழ்த்துக்கள் மற்றும் காலை&இரவு வணக்கும் அனுமதி இல்லை. @Ulavanintetal
显示更多1 408
订阅者
无数据24 小时
无数据7 天
-330 天
帖子存档
1 408
🌾 ஜூலை 9 முதல் 13 வரை கோவையில் நடைபெறும் அக்ரி இண்டெக்ஸ் 2026 கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் கருத்தரங்குகள் ஒரே இடத்தில்! 🚜🌱
1 408
😱 தோட்டா துளைக்காத ஆடை முதல் விமான ஓடுதளம் வரை🌴பனை மரத்தில் மரைந்திருக்கும் உட்பொருள்
https://www.facebook.com/share/v/19Bj8wSaiK/
1 408
நலமும் தரும் வளமும் தரும் நுண் கீரைகள்!
https://pachaiboomi.net/674537-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=674537-2
உடல் நலம் தரும் நுண்கீரை வகைகளை, பொருள் வளம் தரும் வகையில் வணிக நோக்கில் உற்பத்தி செய்து, அதில் சாதித்தும் வருகிறார், எம்.ஏ.,எம்.எட்.,எம்.பில்., படித்த, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருவதிகையைச் சேர்ந்த அ.சாமுண்டீஸ்வரி. இவர், தனது அனுபவம் குறித்து நம்மிடம் கூறியதாவது: நுண்கீரை உற்பத்தி விதைத்து 5 முதல் 7 நாட்களுக்குள் அறுவடை செய்து விடுவதால், இதை நுண்கீரை என்கிறோம். ஓமம், கருஞ்சீரக நுண்கீரை உற்பத்திக்கு 21 நாட்களாகும். நுண்கீரை உற்பத்திக்கு மண் தேவையில்லை, அதிகளவில் […]
1 408
கால்நடை மருத்துவத்தில் கவனம் பெறும் பிரண்டை!
https://pachaiboomi.net/453245-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=453245-2
தமிழகக் கிராமங்களில் வேலியோரங்களில் இயல்பாக வளரும் ஒரு செடி தான் பிரண்டை (Cissusquadrangularis). பொதுவாக, சமையலில் துவையல், இரசம் போன்றவற்றில் பயன்படும் இந்த மூலிகை, பாரம்பரியக் கால்நடை மருத்துவத்திலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலங்காலமாக மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் மருந்தாகப் பயன்பட்டு வரும் பிரண்டை, இப்போது மீண்டும் விஞ்ஞான உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா, உலகின் மிகப்பெரிய கால்நடை வளமிக்க நாடுகளில் ஒன்று. சமீபத்திய மதிப்பீட்டின்படி, நாட்டில் 300 மில்லியனுக்கும் அதிகமான பசுக்கள் மற்றும் எருமைகள் உள்ளன. […]
1 408
தானியங்களைக் காக்கும் ரேடியோ அலைத் தொழில் நுட்பம்!
https://pachaiboomi.net/8975567-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=8975567-2
இந்தியா, உலகின் மிகப்பெரிய தானிய உற்பத்தி நாடுகளில் ஒன்று. 2024-25-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உணவுத் தானிய உற்பத்தி 353.96 மில்லியன் டன்னாகப் பதிவாகியுள்ளது. இதில், அரிசி உற்பத்தி 149 மில்லியன் டன்னையும், கோதுமை உற்பத்தி 117 மில்லியன் டன்னையும் கடந்துள்ளது. ஆனால், இத்தனை பெரிய உற்பத்தி இருந்தாலும், தானியங்களைப் பாதுகாப்பாகச் சேமிப்பது, இந்தியாவுக்கு இன்னும் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. சேமிப்புக் காலத்தில் பூச்சித் தாக்குதல், ஈரப்பதம், பூஞ்சை வளர்ச்சி மற்றும் தரக்குறைவு காரணமாக, இந்தியாவில் ஆண்டுதோறும் […]
1 408
மானாவாரி நிலக்கடலைப் பயிரைத் தாக்கும் நோய்கள்!
https://pachaiboomi.net/564738-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=564738-2
நிலக்கடலை முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதைப் பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்கிப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இவற்றின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தினால் தான் நல்ல மகசூலை எடுக்க முடியும். எனவே, இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு விவசாயப் பெருமக்களிடம் அவசியம் இருக்க வேண்டும். இவ்வகையில், இங்கே நிலக்கடலைப் பயிரைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம். முன்பருவ இலைப்புள்ளி நோய் (செர்கோஸ்போரா அரசிடிகோலா) அறிகுறிகள்: விதைத்து ஒரு மாதம் கழித்து இந்நோய் தோன்றும். […]
1 408
இலவச மரக்கன்றுகள் விவசாய நிலத்திற்கு மட்டும்🌳 வழங்கப்படும்
குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும்.
தொடர்புக்கு:
6384663384 /8838453877
இந்த பதிவை முடிந்தவரை அனைத்து விவசாயிகளுக்கும்💚 தெரியப்படுத்தவும் ❤️❤️🤌🏻
1 408
முருங்கையில் பழ ஈயை கட்டுப்படுத்த
முருங்கை நடவு 4 – 5 மாதங்களில் பிஞ்சு எடுக்கும் சமையத்தில் பழ ஈக்கள் தாக்கி இருக்கும். மழை பெய்தால் பிஜின் வடிய ஆரம்பிக்கும். காய் வெடிக்கும், காய் சுருங்கி காய்ந்து விடும். மகசூல் பாதிப்பு வரும்
இவற்றை கட்டுப்படுத்த
முருங்கையில் பழ ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி வைத்து ஆண் ப{ச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
20 கிராம் கருவாட்டை நன்றாக பொடிசெய்து அவற்றை தண்ணீரில் கலந்து பாலுத்தின் கவரில் வைத்து ஒரு ஏக்கருக்கு 10 இடத்தில் கட்டிவிட பழ ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
முருங்கை ஒரு அயல்மகரந்தை சேர்கை பயிர் அவற்றில் நிறைய தேன் வண்டுகள் காலை நேரத்தில் வரும் அதனால் மாலைநேரத்தில் மருந்து தெளிக்கலாம்.
முருங்கையில் ஆண்பூக்கள் அதிகம் இருக்கும் அவற்றை தவிர்க்க காய்கறி நுண்ணுட்ட சத்துக்களை இடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 கிலோ காய்கறி நுண்ணூட்டத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும்பொழுது இடவேண்டும்
மேலும் தொடர்புக்கு 9952305745
