ar
Feedback
உழவனின் தேடல் ©

உழவனின் தேடல் ©

الذهاب إلى القناة على Telegram

குழுவின் விதிமுறைகள் 1.விவசாய பதிவுகளுக்கள் மட்டுமே அனுமதி. 2.விவசாய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 3.அரசியல் மற்றும் ஜாதி மதம் மற்றும் ஆன்மிக பதிவுகளுக்கு அனுமதி இல்லை. 4.வாழ்த்துக்கள் மற்றும் காலை&இரவு வணக்கும் அனுமதி இல்லை. @Ulavanintetal

إظهار المزيد
1 408
المشتركون
لا توجد بيانات24 ساعات
لا توجد بيانات7 أيام
-730 أيام
أرشيف المشاركات
முருங்கையில் பழ ஈயை கட்டுப்படுத்த முருங்கை நடவு 4 – 5 மாதங்களில் பிஞ்சு எடுக்கும் சமையத்தில் பழ ஈக்கள் தாக்கி இருக்கும். மழை பெய்தால் பிஜின் வடிய ஆரம்பிக்கும். காய் வெடிக்கும், காய் சுருங்கி காய்ந்து விடும். மகசூல் பாதிப்பு வரும் இவற்றை கட்டுப்படுத்த முருங்கையில் பழ ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி வைத்து ஆண் ப{ச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் 20 கிராம் கருவாட்டை நன்றாக பொடிசெய்து அவற்றை தண்ணீரில் கலந்து பாலுத்தின் கவரில் வைத்து ஒரு ஏக்கருக்கு 10 இடத்தில் கட்டிவிட பழ ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம். முருங்கை ஒரு அயல்மகரந்தை சேர்கை பயிர் அவற்றில் நிறைய தேன் வண்டுகள் காலை நேரத்தில் வரும் அதனால் மாலைநேரத்தில் மருந்து தெளிக்கலாம். முருங்கையில் ஆண்பூக்கள் அதிகம் இருக்கும் அவற்றை தவிர்க்க காய்கறி நுண்ணுட்ட சத்துக்களை இடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 கிலோ காய்கறி நுண்ணூட்டத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும்பொழுது இடவேண்டும் மேலும் தொடர்புக்கு 9952305745

வேலை வாய்ப்பைத் தரும் அசோலா! https://pachaiboomi.net/98865-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=98865-2 இன்றைய காலத்தில் குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் தரக்கூடிய தொழில்களை அனைவரும் தேடி வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுகின்றனர். அத்தகைய சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாகத் திகழ்வது அசோலா வளர்ப்பு. சிறிய தொட்டியில் தொடங்கி நல்ல வருமானம் தரக்கூடிய இந்தப் பசுமைத் தொழில், இன்று பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அசோலா என்பது, நீர் நிலைகளில் மிதந்து வளரக்கூடிய பெரணி வகையைச் சார்ந்த தாவரமாகும். முற்றிலும் நீரை மட்டுமே […]

🛑 வெண்டையில் சிவப்பு நாவாய் பூச்சி தாக்குதலா? கவனம் விவசாயிகளே! 🔴 சிவப்பு நாவாய் பூச்சி (Red Cotton Bug) வெண்டைச் செடிகளில் சாற்றை உறிஞ்சி மகசூலையும் காய்களின் தரத்தையும் கடுமையாக பாதிக்கும் முக்கிய பூச்சியாகும். 🐞 வாழ்க்கைச் சுழற்சி: ✅ முட்டை → குடம்பி (Nymph) → முதிர்ந்த பூச்சி ✅ ஒரு பெண் பூச்சி 50–100 முட்டைகள் இடும். ✅ முழு வாழ்க்கைச் சுழற்சி 40–47 நாட்களில் நிறைவடைகிறது. ⚠️ ஏற்படுத்தும் சேதங்கள்: • வெண்டைக்காய்களின் சாற்றை உறிஞ்சி வளர்ச்சியைத் தடுக்கிறது. • காய்களில் கருப்பு புள்ளிகள் தோன்றும். • காய்களின் தரம் மற்றும் சந்தை மதிப்பு குறையும். • பூஞ்சை மற்றும் பாக்டீரியா தாக்குதலுக்கு வழிவகுத்து காய்கள் அழுகும். • இளம் காய்கள் உதிர்ந்து மகசூல் இழப்பு ஏற்படும். 🌱 இயற்கை கட்டுப்பாட்டு முறைகள்: ✔️ அறுவடைக்குப் பின் வயலைச் சுத்தமாக வைத்தல். ✔️ ஆழ உழவு செய்து மண்ணில் உள்ள முட்டைகளை அழித்தல். ✔️ அதிகாலையில் பூச்சிகளை சேகரித்து அழித்தல். ✔️ வேப்பெண்ணெய் கரைசல் (1 லிட்டர் தண்ணீருக்கு 3–5 மி.லி) தெளித்தல். ✔️ மூலிகை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துதல். 🌿 இயற்கை முறைகளை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான வெண்டை மகசூலைப் பெறலாம். 📢 விவசாய நண்பர்களே, இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள். மேலும் இயற்கை விவசாயம் மற்றும் பயிர் பாதுகாப்பு தகவல்களுக்கு எங்கள் பக்கத்தைப் பின்தொடருங்கள்! 🌱🚜 #வெண்டை #சிவப்புநாவாய்பூச்சி #OkraPest #NaturalFarming #OrganicFarming #விவசாயம் #பூச்சிக்கட்டுப்பாடு #நஞ்சில்லாவிவசாயம் #Farmers #AgriTipsTamil 🌿

UHD வேளாண் வணிகம் June 2026 Original Pdf File

வேளாண் வணிகம் June 2026
வேளாண் வணிகம் June 2026

பசுமை விகடன் 10.05.26.pdf3.51 MB

#ஆப்பிள்விவசாயி அதிக வெப்பம் பதிவாகும் ஆந்திராவின் #அனந்தபூர் மாவட்டத்தில் ... வெப்ப மண்டல பகுதியில் விளையும் இஸ்ரேல் ஆப்பிளின் ஒரு வகையை தேர்ந்தெடுத்து விளைவித்து சாதித்த வெற்றி விவசாயி திரு RV.ரமண ரெட்டி அவர்களுடன்.. காஷ்மீரில் விளையும் ஆப்பிளின் சுவை நிறம் எடை அனைத்தும் இங்கும் ஒன்றாக உள்ளது.. தென்னிந்திய பழங்கள் திருவிழா மற்றும் உணவு காடு வளர்ப்பில் இவற்றின் அனுபவத்தை பகிர உள்ளார் . வாருங்கள் அனைவரும். மேலும் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் #ஆப்பிள்செடிகளும் வழங்கப்பட உள்ளது முன்பதிவு அவசியம் 94425 90079 94425 90081 பகிர்வு https://www.facebook.com/share/p/1H8aqNiSjq/?mibextid=oFDknk

குமுதம் மண்வாசனை June 2026

குமுதம் மண்வாசனை June 2026
குமுதம் மண்வாசனை June 2026

photo content

🌱 *விவசாயிகள் கவனிக்க வேண்டிய முக்கிய உண்மை!* பெரும்பாலான விவசாயிகள் இலைகள் மஞ்சளாக மாறினால், "இன்னும் உரம் கொடுக்க வேண்டும்" என்று நினைக்கிறார்கள். ஆனால் வேர்கள் முதலில் கேட்பது உரமல்ல... *ஆக்சிஜன்தான்!* ஒரு செடி தண்ணீரில் நின்றுகொண்டே இருக்கலாம்... ஆனால் அதே நேரத்தில் தாகத்தால் வாடியும் போகலாம். இது முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் மண்ணின் உயிரியல் செயல்பாட்டைப் புரிந்துகொண்டால் அதன் உண்மை விளங்கும். 💧 *தண்ணீர் மட்டும் வேர்களுக்கு உணவாகாது.* 🌬️ *ஆக்சிஜன்தான் தண்ணீர் கொண்டு வரும் சத்துக்களை வேர்கள் பயன்படுத்த உதவுகிறது.* சிறப்பாக வளரும் பயிருக்கும், வளர்ச்சி குன்றும் பயிருக்கும் இடையிலான வித்தியாசம் பல நேரங்களில் நாம் மேலிருந்து சேர்க்கும் உரங்களில் இல்லை... அது மண்ணின் அடிப்பகுதியில் காற்று செல்லும் திறனில்தான் இருக்கிறது. மண்ணின் துளை இடைவெளிகள் (Pore Spaces) தண்ணீரால் நிரம்பிவிட்டால்: • வேர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காது • ATP எனும் ஆற்றல் உற்பத்தி குறைகிறது • சத்துக்கள் உறிஞ்சும் திறன் மந்தமாகிறது • நுண்ணுயிர் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன • வளர்ச்சி நின்று, உயிர் பிழைப்பதே முக்கியமாகிறது அதனால்தான் அதிகமாக பாசனம் செய்யப்பட்ட வயல்கள் வெளியில் பசுமையாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் *"பசி மற்றும் தாகம்"* கொண்ட நிலையில் இருக்கக்கூடும். 🌿 *ஆரோக்கியமான மண் என்பது அதிக தண்ணீரை பிடித்து வைப்பது அல்ல.* 🌿 *தேவையான அளவு தண்ணீரையும், தேவையான அளவு காற்றையும் சமநிலைப்படுத்தும் மண்ணே ஆரோக்கியமான மண்.* புத்திசாலி விவசாயிகள் தண்ணீரை மட்டும் நிர்வகிப்பதில்லை... அவர்கள் *வேர்களுக்கு ஆக்சிஜன் செல்லும் பாதைகளையும் உருவாக்குகிறார்கள்.* 🔍 *உங்கள் வயலில் பின்வரும் அறிகுறிகள் இருக்கிறதா?* • மண்ணில் ஈரம் இருந்தும் செடிகள் வாடுதல் • போதுமான உரம் இருந்தும் இலைகள் மஞ்சளாகுதல் • நீர் பாய்ச்சிய பிறகும் செடிகள் மெதுவாக மீளுதல் இப்படி இருந்தால் பிரச்சினை சத்து பற்றாக்குறை அல்ல... *வேர்கள் மூச்சுத்திணறுவதும் காரணமாக இருக்கலாம்!* எதிர்காலத்தில் அதிக மகசூலை பெற வேண்டுமெனில், மேலும் உரம் சேர்ப்பதற்குப் பதிலாக மண் எப்படி "மூச்சு விடுகிறது" என்பதைப் புரிந்துகொள்வதே முக்கியம். ❓ *உங்கள் வயலில் என்ன அனுபவம்?* போதுமான ஈரப்பதமும் உரச்சத்தும் இருந்தும் பயிர்கள் பாதிக்கப்பட்டதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உங்கள் கருத்தில் மண்ணின் அடியில் என்ன நடந்துகொண்டிருந்தது?

பந்தல் அவரை. சாகுபடி உத்திகள் ரகம் - பந்தல் அவரை. ஆங்கூர் விதை 427 விதை அளவு - 2 கிலோ விதை நேர்த்தி - ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை ஆரிய அரிசி வடிகஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உளர்த்தி பிறகு விதைக்க வேண்டும் . உயிர் உர விதை நேர்த்தி 200 கிராம் ரைசோபியம் 200 கிராம் பாஸ்போபாக்டீரியா இரண்டையும் ஆறிய அரிசி வடி கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்திற்குள் நடவு செய்யவேண்டும். நிலம் தயாரித்தல் மண் நன்றாக பொடியாகும் அளவிற்கு உழவு போட வேண்டும். கடைசி உழவின் போது 5 டன்கள் தொழுஉரம் போடவேண்டும். வாய்க்கால் அமைத்தல் 10 அடிக்கு ஒரு வாய்க்கால் அமைக்க வேண்டும். உயிர் உரம் 2 கிலோ ரைசோபியம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா, 1 கிலோ டிரைக்கோடிடர்மா விரிடி, ஒரு கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றை 50 கிலோ ஆறிய எருவில் கலந்து வயலில் ஈரம் இருக்கும்போது விதைக்க வேண்டும். நுண்ணுரம் பயறுவகை நுண்ணுரம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ 20 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின் போது போடவேண்டும். பயிர் இடைவெளி வரிசைக்கு வரிசை 10 அடி செடிக்கு செடி 2 அடி என்ற இடைவெளியில் நடவுசெய்ய வேண்டும். நீர் நிர்வாகம் 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் காய் அறுவடைக்கு முதல் நாள் தண்ணீர் விட்டுத்தான் அறுவடை செய்ய வேண்டும். காய் அறுவடை செய்த பின் மறுநாளே தண்ணீர் பாய்ச்ச வேண்டும் .பூக்கும் பருவம் காய்க்கும் பருவம் போன்ற காலங்களில் தண்ணீர் அதிகமாக தேவைப்படும். களை நிர்வாகம் அவரை செடியில் களையில்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். களையில்லாமல் இருப்பதால் மகசூல் அதிகரிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். உர நிர்வாகம் ஒரு ஏக்கருக்கு ஊட்டமேற்றிய தொழுவுரம் 200 கிலோ போடலாம் வைத்து மண் அணைக்க வேண்டும் இரண்டாம் மேலுரம் தொழுவுரம் 200 கிலோ போடலாம் செடி மிகவும் பச்சையாக இருந்தால் உரத்தின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதலுக்கு தாக்கப்பட்ட இலையின் மேல் எறும்பு இருக்கும். இலையின் உள் பகுதி மடங்கி இருக்கும். மஞ்சள் அட்டை ஒரு ஏக்கருக்குமஞ்சள் அட்டை ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் கட்டி சாறுஉறிஞ்சும் பூச்சியின் தாக்குதலை குறைக்கலாம் அல்லது இரசாயன முறையில் கட்டுப்படுத்த பத்து லிட்டர் தண்ணீருக்கு தாவர இலைச்சாறு 500 மில்லி கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் காய்ப்புழு தென்பட்டால் பிவேரியா பேசியான 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து மாளைவேலையில் தெளிக்கலாம் குறிப்பு . ஒரு குழியில் 2 - 3 விதைகளை நடவின் போது போட வேண்டும். முளைத்தவுடன் நன்றாக உள்ள ஒரு செடியினை விட்டு மற்றவற்றை நீக்கி விடவேண்டும். முதலில் வரும் கொடியை ஒரு குச்சியால் படர விட வேண்டும். கொடி பந்தலில் போய் தொடும் போது நுனியினை கிள்ளிவிட வேண்டும். கிளைகளை ¼ இஞ்ச் அடி அளவில் வெட்டி விட வேண்டும். இதனால் கொடிகள் பந்தலில் சீராக பரவி வளரும். பந்தலின் கீழே உள்ள முதல் தண்டில் வளரும் கிளைகளை அகற்றி விடவேண்டும். பூக்கும் பருவத்தில் பூக்கொத்துக்கள் இருக்கும் கிளையில் ஒரு கங் விட்டு வெட்டி விட வேண்டும். இதனை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். வாரம் ஒரு முறை காய் அறுவடை செய்யலாம். • பயிர் பாதுகாப்பு: காய்ப்புழுக்கள், அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சி விரட்டிகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்து தெளிக்கலாம். அறுவடை: பூத்த 15-20 நாட்களில் காய்கள் அறுவடைக்குத் தயாராகும். தொடர்ந்து காய்களைப் பறிப்பதன் மூலம் அடுத்தடுத்த காய்ப்பு தூண்டப்படும் உயிர்உரங்கள் மற்றும் தகவல் தேவைக்கு தொடர்புகொள்ள 9942202230 9952305745