en
Feedback
Seithikathir - Tamil News

Seithikathir - Tamil News

Open in Telegram

Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014

Show more

📈 Analytical overview of Telegram channel Seithikathir - Tamil News

Channel Seithikathir - Tamil News (@seithikathir) in the Tamil language segment is an active participant. Currently, the community unites 10 521 subscribers, ranking 18 143 in the News & Media category and 39 435 in the India region.

📊 Audience metrics and dynamics

Since its creation on невідомо, the project has demonstrated rapid growth, gathering an audience of 10 521 subscribers.

According to the latest data from 14 June, 2026, the channel demonstrates stable activity. Although there has been a change in the number of participants by -266 over the last 30 days and by -5 over the last 24 hours, overall reach remains high.

  • Verification status: Not verified
  • Engagement rate (ER): The average audience engagement rate is 13.34%. Within the first 24 hours after publication, content typically collects 4.22% reactions from the total number of subscribers.
  • Post reach: On average, each post receives 1 405 views. Within the first day, a publication typically gains 444 views.
  • Reactions and interaction: The audience actively supports content: the average number of reactions per post is 5.

📝 Description and content policy

The author describes the resource as a platform for expressing subjective opinions:
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014

Thanks to the high frequency of updates (latest data received on 15 June, 2026), the channel maintains relevance and a high level of publication reach. Analytics show that the audience actively interacts with content, making it an important point of influence in the News & Media category.

10 521
Subscribers
-524 hours
-507 days
-26630 days
Posts Archive
முழு கட்டுரையை வாசிக்க: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/26100
முழு கட்டுரையை வாசிக்க: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/26100

📢 Seithikathir Tamil News WhatsApp Channel தமிழ்நாடு, இந்தியா, உலக செய்திகள் மற்றும் முக்கிய அரசியல் அப்டேட்களை உடனுக்குடன் பெற Seithikathir WhatsApp சேனலை பின்தொடருங்கள். 👉 https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ✅ Follow ✅ Share ✅ Stay Updated நன்றி! 🙏 @⁨all⁩

📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

கட்டுரை படிக்க: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/25736
கட்டுரை படிக்க: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/25736

📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

🔴 இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்! கருத்து பதிவு: ஜி.எஸ். பாலமுருகன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்த மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளுடன், முதல்வர் விஜய் வெற்றி பெற்று பின்னர் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றில் அ.தி.மு.க. வென்ற நான்கு தொகுதிகளிலும் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். திருச்சி கிழக்கு தொகுதியின் அரசியல் சூழல் வேறுபட்டதாக இருந்தாலும், இந்த இடைத்தேர்தல் முழுமையாக மக்கள் தீர்ப்பின் மதிப்பைப் பற்றிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. ஆளும் கட்சியான த.வெ.க.வுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இது மிக முக்கியமான இடைத்தேர்தல். குறிப்பாக அ.தி.மு.க.வுக்கு. தொகுதிக்கு நல்லது செய்வார்கள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளாமல், வெறும் 20 நாட்களிலேயே எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து, அதிகாரம், பதவிக்காக ஆளும் கட்சியில் இணைந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டிய தருணம் இது. வாக்காளர்கள் ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல; ஒரு கட்சி, கொள்கை மற்றும் சின்னத்திற்கும் சேர்த்துதான் வாக்களிக்கிறார்கள். மக்களின் விருப்பத்திற்கும், தேர்தல் தீர்ப்புக்கும் மாறாக நடந்துகொள்ளும் போக்குக்கு இந்த இடைத்தேர்தலில் பதில் அளிக்கப்பட வேண்டும். ராஜிநாமா செய்தவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால், அக்கட்சியில் இருந்தே பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதுதான் தார்மீக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் சரியான அணுகுமுறையாக இருக்கும். எதிர்க்கட்சிகள், குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசியல் வேறுபாடுகளை தாண்டி ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். இது வெறும் அரசியல் அல்ல; தேர்தல் ஒழுக்கம் பற்றிய சோதனை. நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு தி.மு.க. ஆதரவு வழங்க வேண்டும். ஏற்கனவே, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட, பொது வேட்பாளர் யோசனையை முன்வைத்துள்ளார். இதனால், அ.தி.மு.க. நிறுத்தும் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் எந்தக் கட்சிக்கும் தயக்கம் இருக்கக் கூடாது. ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் வி.சி.க., வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளும் கூட, எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா விவகாரத்தை விமர்சித்துள்ளன. எனவே, பொது வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் அந்தக் கட்சிகளும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுதான் ஜனநாயக நாகரீகம். ஏற்கனவே, தி.மு.க. - அ.தி.மு.க. இணைந்து செயல்பட முயன்றதாக பேசப்பட்ட நிலையில், ஒருவேளை அ.தி.மு.க. நிறுத்தும் பொது வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தால், அந்த அரசியல் அணுகுமுறையை வாக்காளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் இந்த இடைத்தேர்தல் வெளிப்படுத்தும். பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தாலும் விமர்சனங்கள் எழும். “ஆளும் கட்சியை தடுக்க இரு திராவிடக் கட்சிகளும் கைகோர்க்கின்றன” என்று பிரச்சாரம் செய்யப்படும். ஆனால் அதற்கு, “மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பின் மதிப்பை காக்கவே இணைந்து குரல் கொடுக்கிறோம்” என்று எதிர்க்கட்சிகள் பதிலளிக்க வேண்டும். அந்த விளக்கம் பொதுமக்களிடையே எடுபடும். ஏனெனில் பொதுமக்கள், அதிகார அரசியலை விட நியாய அரசியலையே அதிகம் மதிக்கிறார்கள். இன்று ஒன்றாக நிற்கவில்லை என்றால், நாளை இதே நிலை மற்ற கட்சிகளுக்கும் ஏற்படலாம். ஆனால், இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற பழைய அரசியல் வாதத்தை முன்வைத்து அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் களம் காணாமல் பின்வாங்கினால், அது தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் எதிர்கால பாதை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பும். அந்த நம்பிக்கை உடையத் தொடங்கினால், எதிர்க்கட்சிகளின் இடமே குறைந்து போகும். இல்லையெனில் நாளை எதிர்க்கட்சிகளே தேவையற்றதாகிவிடும். இடைத்தேர்தலில் ராஜிநாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களே மீண்டும் போட்டியிட்டாலும் சரி, அல்லது த.வெ.க. சார்பில் புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் சரி, அந்த வேட்பாளர்கள் 'டெபாசிட்' இழக்கும் அளவுக்கு மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். அதுதான் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலாக அமையும். அப்படியான தீர்ப்புதான் இனி இதுபோன்ற அரசியலை யாரும் எளிதாக முயற்சிக்க முடியாத சூழலை உருவாக்கும்.

மேலும், ஒரு வாக்காளர் எந்த தொகுதியில் வாக்கு வைத்திருக்கிறாரோ அங்கு மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார். அப்படியிருக்க, போட்டியிடும் வேட்பாளர்களும் அந்த தொகுதியை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். “இறக்குமதி வேட்பாளர்” அரசியலுக்கும் முடிவு கட்ட வேண்டும். ஒரு ஜனநாயக அமைப்பில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவுகள் வெறும் எண்கணித அரசியலாக மாறிவிட்டால், தேர்தல் முறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான தேர்தலாக மட்டும் பார்க்கப்படாது. த.வெ.க.வின் வளர்ச்சி, அ.தி.மு.க.வின் அமைப்பு வலிமை, மற்றும் தி.மு.க.வின் நிலைப்பாடு என பெரிய கேள்விக்கான சோதனையாகவும் அவை மாறக்கூடும். தேர்தல் நடைமுறைகள் மாறுவது ஒருபுறம் இருக்கட்டும். ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கும் அரசியல் நடைமுறைகளுக்கு மக்கள் சரியான பதிலை அளிக்க வேண்டிய அவசியமும் உருவாகியுள்ளது. வாக்காளர்களின் நம்பிக்கையை மீறும் அரசியல் நகர்வுகளுக்கு மக்களே ஜனநாயக ரீதியாக பதிலளிக்கும் போது மட்டுமே, இதுபோன்ற 'கூத்துகள்' எதிர்காலத்தில் கட்டுப்படுத்தப்படும். எனவே, தற்போதைய நிகழ்வுகளை தனிப்பட்ட கட்சி பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், இந்திய தேர்தல் மற்றும் ஜனநாயக அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் சம்பவமாக அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதிக்கப்படாத ஜனநாயகம், இறுதியில் மக்கள் நம்பிக்கையையே இழக்கும்.

🔴 நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த அரசியலை நினைத்துவிட்டால்... கட்டுரையாளர்: ஜி.எஸ். பாலமுருகன். “மக்கள் என்ன வெறும் ஓட்டு போடும் இயந்திரம் என்று அரசியல் கட்சிகள் எண்ணத் தொடங்கிவிட்டனவா?” தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகள் புதிதல்ல. ஆனால் மக்கள் ஓட்டு போட்ட மை கூட இன்னும் அழியாத நிலையில், மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்களில் சிலர் ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்திருப்பது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடத் தயாராக இருக்கும் இந்த ராஜினாமா நாடகம், தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் மறுசீரமைப்பின் அறிகுறியாகவும், ஜனநாயக நெறிமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பும் சம்பவமாகவும் மாறியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இந்திய தேர்தல் அமைப்பில் பெரும்பாலான வாக்காளர்கள் தனிநபர்களைவிட கட்சி, சின்னம், கூட்டணி மற்றும் தலைமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்களிக்கின்றனர். அப்படியிருக்க, ஒரு சின்னத்தில் வெற்றி பெற்று வெகு சில நாட்களிலேயே மற்றொரு சின்னத்தில் மீண்டும் தேர்தல் களத்தை சந்திக்கத் தயாராக இருப்பது, மக்கள் என்ன வெறும் ஓட்டு போடும் இயந்திரம் என்று அரசியல் கட்சிகள் எண்ணத் தொடங்கிவிட்டனவா என்ற தீவிரமான கேள்வியை எழுப்புகிறது. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா நிகழ்வின் பின்னணியில் அதிகார சமநிலை மற்றும் கூட்டணி கணிதம் தொடர்பான காரணிகள் உள்ளன. தற்போது த.வெ.க. தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவை நம்பியே ஆட்சி தொடர்கிறது. இதனால், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை எண்ணிக்கை ரீதியாக சமநிலைப்படுத்தும் முயற்சிதான் இது. வடமாநிலங்களில் மட்டுமே காணப்பட்ட இதுபோன்ற போக்குகள், அரசியல்மயமான தமிழகத்திலும் தென்படத் தொடங்கியுள்ளது காலத்தின் கோலம். • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க.வின் எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆனால் ராஜினாமா செய்து மீண்டும் வேறு சின்னத்தில் போட்டியிடும் நடைமுறை அப்போது உருவாகவில்லை. இதனால், தற்போதைய நிகழ்வு புதிய மற்றும் ஆபத்தான போக்கை உருவாக்கியுள்ளது. இது வெறும் கட்சி தாவல் அல்ல; எதிர்கால திசையை சோதிக்கும் நகர்வாகவும் இது மாறியுள்ளது. இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது தேர்தல் சட்டங்களில் உள்ள குறைபாடுகளாகும். ஒரு எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற பிறகு அவர் அந்தக் கட்சியின் பிரதிநிதியாக செயல்பட வேண்டுமா? அல்லது எந்த நேரத்திலும் கட்சி மாறும் சுதந்திரம் இருக்க வேண்டுமா? என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. தேர்தல் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு தற்போதைய சூழலில் வெளிப்படையாக தெரிகிறது. ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் அரசியலில் வேரூன்றத் தொடங்கினால், ஜனநாயகத்தின் அடிப்படை அர்த்தமே கேள்விக்குறியாகிவிடும். அப்படியான சூழல் உருவாகும் போது, தேர்தல் நடைமுறைகள், மக்கள் தீர்ப்பு மற்றும் பிரதிநிதித்துவ அரசியல் ஆகியவற்றின் அவசியம் என்ன என்ற கேள்வியும் எழத் தொடங்குகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற உடனடியாக ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணையும் எம்.எல்.ஏ.க்களுக்கு கடுமையான தகுதி நீக்க விதிகள் கொண்டு வர வேண்டும். 10 அல்லது 15 ஆண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடை, அரசியல் சலுகைகள் மற்றும் ஓய்வூதிய உரிமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல், இத்தகைய சூழல்களில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக, இரண்டாவது இடம் பிடித்த வேட்பாளரை வெற்றியாளராக அறிவிக்கும் நடைமுறையையும் பரிசீலிக்க வேண்டும். அல்லது நோட்டாவையே மக்கள் அதிருப்தியின் குறியீடாக அங்கீகரிக்க வேண்டும். தொகுதி காலியாகும் சூழலில் தேர்தல் ஆணையம் நிர்வாக பிரதிநிதியாக ஐ.ஏ.எஸ். அளவிலான அதிகாரியை நியமிக்கும் நடைமுறையையும் பரிசீலிக்கலாம். இத்தகைய மாற்றங்கள் கொண்டு வந்தால் மட்டுமே ராஜினாமா அரசியலுக்கு கட்டுப்பாடு ஏற்படும். மேலும், ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நடைமுறையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

📢 செய்திகள் இனி செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

📢 தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் மாநில தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி பரபரப்பான தேர்தல் முடிவுகள்... உடனுக்குடன் உங்கள் செய்திக்கதிரில்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழு:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

⚡️ அன்பு நண்பர்களுக்கு... செய்திக்கதிர் டெலிகிராம் செய்தி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. செய்திகளை தொடர்ந்து பெற விரும்புவோர், செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளவும். 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழு:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

⚡️ அன்பு நண்பர்களுக்கு... செய்திக்கதிர் டெலிகிராம் செய்தி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. செய்திகளை தொடர்ந்து பெற விரும்புவோர், செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளவும். 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழு:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

⚡️ அன்பு நண்பர்களுக்கு... செய்திக்கதிர் டெலிகிராம் செய்தி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. செய்திகளை தொடர்ந்து பெற விரும்புவோர், செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளவும். 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழு:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

🔴 சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்! ✍️ ஜி.எஸ். பாலமுருகன் இந்தியாவில் ‘டேட்டிங்’ செயலிகளை சுமார் 40 லட்சம் பேர் பயன்படுத்தி வருவதும், அவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்களாக இருப்பதும், பெண்களின் பங்களிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 148 சதவிகிதம் அதிகரித்திருப்பதும் சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அனைத்து ‘டேட்டிங்’ பயன்பாடுகளும் தவறானவை அல்ல என்றாலும், ‘டேட்டிங்’ செயலிகளின் பயன்பாடு அதிகரித்து, திருமணத்தை மீறிய உறவுகள் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுவது சமூகத்தின் தற்போதைய பாதை கவலைக்கிடமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இளம் வயது இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே இவ்வகை செயலிகளின் பரவல், சமூக ஒழுக்கம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறது. திருமணம், வேலைவாய்ப்பு, குடும்ப வாழ்க்கை போன்ற அடிப்படை நிலைகள் சரியாக அமையாதது போன்ற காரணங்களுடன், மது, போதைப் பொருள் பழக்கங்கள் மற்றும் தவறான நட்புகள் இணைந்து இளைஞர்களை தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்கின்றன. இதனால் சமூகத்தில் ஒழுங்கின்மை மட்டுமல்லாமல், குற்றச்செயல்கள் மற்றும் நெறி சிதைவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது என்னவெனில், இந்தப் போக்கு கல்வியறிவு பெற்ற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடமும் காணப்படுகிறது. • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 மேலும், ‘டேட்டிங்’ செயலிகள் சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. அறிமுகமற்றவர்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுக்கே தெரியாமல் பதிவு செய்யப்படும் தனிப்பட்ட தகவல்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை பின்னர் பயன்படுத்தி மிரட்டல் மற்றும் பண மோசடி நடத்தும் சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது தனிநபர் மரியாதை மட்டுமின்றி, குடும்பத்தின் சமூக மதிப்பையும் பாதிக்கக்கூடியதாகும். ‘டேட்டிங்’ செயலிகளில் ஒரு தனிப்பட்ட தொடர்பாக தொடங்கி, திட்டமிட்ட மோசடியாக மாறும் அபாயம் அதிகம். ஒரு கிளிக்கில் தொடங்கும் தொடர்பு, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் நிலைக்கு செல்லக்கூடும். இதே போக்கின் ஒரு பகுதியாக, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் காட்சிகளுடன் சிலர் தோன்றி, “சாட்டிங் செய்ய வேண்டுமா, ‘டேட்டிங்’ செய்ய வேண்டுமா?” என அழைக்கும் வகையில் சிறு வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் பரவுவது கவலைக்கிடமானதாக உள்ளது. இத்தகைய உள்ளடக்கங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் அபாயம் இருப்பதால், இவ்வாறான விளம்பரங்களையும் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. பெருநகரங்களில் தொடங்கிய ‘டேட்டிங்’ கலாச்சாரம், பிற நகரங்கள் மற்றும் இளைஞர்களிடமும் பரவுவதற்கு முன், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்வதுடன், பயன்பாட்டை கட்டுப்படுத்தும் கொள்கைகள் அவசியம். இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், ஒரு குறிப்பிட்ட வயது வரையிலான கட்டுப்பாடுகள் அல்லது கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும். கேமிங், சூதாட்ட செயலிகளை தடை செய்தது போல், 'டேட்டிங்' செயலிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது தேவையெனில் தடை செய்ய வேண்டும். இல்லையெனில், தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும் எச்சரிக்கை மணி ஆகும்.

⚡️ அன்பு நண்பர்களுக்கு... செய்திக்கதிர் டெலிகிராம் செய்தி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. செய்திகளை தொடர்ந்து பெற விரும்புவோர், செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளவும். 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழு:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.

தமிழக தேர்தல்: முக்கிய போட்டி யார் இடையே? Poll: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/24292