uk
Feedback
Seithikathir - Tamil News

Seithikathir - Tamil News

Відкрити в Telegram

Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014

Показати більше

📈 Аналітичний огляд Telegram-каналу Seithikathir - Tamil News

Канал Seithikathir - Tamil News (@seithikathir) у мовному сегменті Тамільська є активним учасником. На даний момент спільнота об'єднує 10 311 підписників, посідаючи 18 321 місце в категорії Новини і ЗМІ та 38 398 місце у регіоні Індія.

📊 Показники аудиторії та динаміка

З моменту свого створення невідомо, проект продемонстрував стрімке зростання, зібравши аудиторію у 10 311 підписників.

За останніми даними від 30 липня, 2026, канал демонструє стабільну активність. Хоча за останні 30 днів спостерігається зміна кількості учасників на -136, а за останні 24 години на 0, загальне охоплення залишається високим.

  • Статус верифікації: Не верифікований
  • Рівень залученості (ER): Середній показник залученості аудиторії становить 17.19%. Протягом перших 24 годин після публікації контент зазвичай збирає 4.96% реакцій від загальної кількості підписників.
  • Охоплення публікацій: В середньому кожен допис отримує 1 772 переглядів. Протягом першої доби публікація в середньому набирає 511 переглядів.
  • Реакції та взаємодія: Аудиторія активно підтримує контент: середня кількість реакцій на один пост – 6.

📝 Опис та контентна політика

Автор описує ресурс як майданчик для висловлення суб'єктивної думки:
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014

Завдяки високій частоті оновлень (останні дані отримано 31 липня, 2026), канал підтримує актуальність та високий рівень охоплення публікацій. Аналітика показує, що аудиторія активно взаємодіє з контентом, що робить його важливою точкою впливу в категорії Новини і ЗМІ.

10 311
Підписники
Немає даних24 години
-377 днів
-13630 день
Архів дописів
📢 Seithikathir Tamil News WhatsApp Channel தமிழ்நாடு, இந்தியா, உலக செய்திகள் மற்றும் முக்கிய அரசியல் அப்டேட்களை உடனுக்குடன் பெற Seithikathir WhatsApp சேனலை பின்தொடருங்கள். 👉 https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ✅ Follow  ✅ Share  ✅ Stay Updated நன்றி! 🙏 @⁨all⁩

*🔴 அரசுப் பேருந்துகளில் ஸ்பீக்கர் ஒலிக்கு தடை...* _பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்ட போக்குவரத்துத் துறை_ _கடந்த 1
*🔴 அரசுப் பேருந்துகளில் ஸ்பீக்கர் ஒலிக்கு தடை...* _பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்ட போக்குவரத்துத் துறை_ _கடந்த 17ஆம் தேதி "பேருந்துகளிலும் 'சைலன்ட் பயணம்' விதி வருமா?" என்ற தலைப்பில் செய்திக்கதிர் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது._

🔴 கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த நீதிமன்ற உத்தரவு... POLL: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/27460

⚽ 106வது நிமிடம்... டோரஸின் கோல்... உலகை மீண்டும் வென்ற ஸ்பெயின்! 106வது நிமிடத்தில் ஃபெர்ரான் டோரஸின் காலில் இருந்து பறந்த பந்து வலையின் மேற்கூரையை முத்தமிட்ட அந்த நொடி, ஸ்பெயின் மீண்டும் உலக சாம்பியனானது. ஆனால் அந்த ஒரு கோல், ஆட்டம் முழுவதும் வெளிப்படுத்திய ஆதிக்கத்தின் இறுதி அத்தியாயம் மட்டுமே. உலகக் கோப்பை இறுதிப்போட்டிகள் பெரும்பாலும் ஒரு தருணத்தால் நினைவுகூரப்படுகின்றன. ஆனால் இந்த இறுதிப்போட்டி, ஒரு அணியின் முழுமையான ஆதிக்கத்தை நினைவூட்டும் போட்டியாக அமைந்தது. முழு கட்டுரை: https://www.facebook.com/share/p/1KooLwmAxZ/

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி – கோப்பை யாருக்கு? POLL: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/27217

🔴 தி ஒடிஸி: ராமாயணம், மகாபாரதத்துடன் காணப்படும் 6 ஆச்சரியமான ஒற்றுமைகள் கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்ட தி ஒடிஸி திரைப்படம், இந்திய பார்வையாளர்களுக்கு ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை நினைவுபடுத்தக்கூடும். வெவ்வேறு காலகட்டங்களிலும், பண்பாட்டு பின்னணியிலும் உருவான இந்தக் காவியங்களில், கதை அமைப்பு மற்றும் கருப்பொருளில் சில சுவாரஸ்யமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. முழுக்கட்டுரை: https://www.facebook.com/share/p/1VP159yEZt/

🔴 தி ஒடிஸி: புராணக் கதையா? அல்லது மனித வாழ்க்கையைப் பேசும் மகாகாவியமா? பத்து ஆண்டுகள் போர். மேலும் பத்து ஆண்டுகள் கடல் பயணம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பும் ஒரு மனிதன், அவர் வெளியேறிய அதே மனிதனாக இல்லை. போரில் வெற்றி பெற்றாலும், அதன் காயங்களிலிருந்து மீள்வதுதான் உண்மையான சவால். கிறிஸ்டோபர் நோலனின் ஒடிஸி சொல்லும் இந்த ஆழமான கருத்துகளை அலசும் சிறப்புக் கட்டுரையைப் படிக்க... 👇 முழுக் கட்டுரை: https://www.facebook.com/share/p/1CY6Ji3tcM/

✨ இன்றைய சிந்தனை: அவரது மனைவி கேட்ட ஒரு கேள்வி... பதிவு: ஜி.எஸ்.பாலமுருகன் ஒரு மாலை நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தபோது, நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் மிகுந்த மதிப்புடன் பார்க்கும் ஒருவரைச் சந்தித்தேன். பல ஆண்டுகளாக தான் உருவாக்கிய ஒன்றை கட்டியெழுப்பி, தனது நேரத்தையும் உழைப்பையும் வாழ்க்கையின் ஒரு பகுதியையும் அதற்காக அர்ப்பணித்தவர். அந்த உழைப்பால் அதை ஒரு வலுவான பிராண்டாக உருவாக்கியவர். வழக்கம்போல் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில், தனது மனைவியுடன் நடந்த ஒரு உரையாடலை பகிரத் தொடங்கினார். “பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய ஒன்றை குழந்தையைப் போல பார்த்து வளர்க்கிறோம். ஆனால் ஒரு கட்டத்தில், அது நம் கைகளை விட்டு விலகிச் செல்லும்போது, கண்முன்னே பார்த்துக்கொண்டு நிற்பது மிகவும் வேதனையாக இருக்கிறது,” என்றார். அதைப் பற்றி தனது மனைவியிடம் பகிர்ந்துகொண்டபோது, அவர் கேட்ட ஒரு கேள்விதான் தன்னை யோசிக்க வைத்ததாகச் சொன்னார். “நீங்கள் உழைத்தீர்கள். அந்த உழைப்புக்கான மதிப்பும், அங்கீகாரமும், பலனும் உங்களுக்குக் கிடைத்தது. வாழ்க்கை உங்களுக்குக் கொடுத்த வாய்ப்பை நீங்கள் நேர்மையாகப் பயன்படுத்திவிட்டீர்கள். அப்படியிருக்க, ஏன் இன்னும் அந்தப் பற்றுதலை மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்?” அதோடு மனைவி ஒரு எளிய உதாரணத்தையும் சொன்னாராம். “நம் வீட்டில் ஒரு தச்சர் வந்து சமையலறையை அழகாகச் சீரமைத்தார். தனது வேலையைச் சிறப்பாகச் செய்து, அதற்கான பணத்தையும் வாங்கிக்கொண்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் ‘அந்த சமையலறை என்னுடையது’ என்று சொல்ல முடியுமா? முடியாது. அவர் செய்த வேலைதான் அவருடைய அடையாளம்; அந்த வீடு அல்ல.” இந்த ஒரு உதாரணம் அந்த உரையாடலின் அர்த்தத்தை முழுமையாக மாற்றியதாக அவர் சொன்னார். அதை கேட்டபோது, எனக்கும் ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. நாம் எந்த வேலையைச் செய்தாலும், எந்த ஒன்றை உருவாக்க உதவியிருந்தாலும், அதை முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்ய வேண்டும். நமது உழைப்பில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. ஆனால் அந்த உழைப்பு ஒருநாள் நம்மையே சுமையாக மாற்றும் அளவுக்கு பற்றுதலாக மாறிவிடக் கூடாது. அர்ப்பணிப்புடன் உழையுங்கள். ஆனால் உங்களை இழக்கும் அளவுக்கு எதனிடமும் பற்றுதல் கொள்ளாதீர்கள். அன்று நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடம் இதுதான். நமது உழைப்புதான் நமக்குச் சொந்தம்; நாம் உழைத்த இடமோ, நாம் உருவாக்க உதவிய ஒன்றோ அல்ல. பொறுப்புகள் மாறலாம். பதவிகள் மாறலாம். மனிதர்களும் மாறலாம். ஆனால் நாம் செய்த தரமான உழைப்பும், நம் நேர்மையும் மட்டுமே காலத்துக்கும் நம்மைப் பற்றி பேசும். #lifelessons #motivation • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

📢 Seithikathir Tamil News WhatsApp Channel தமிழ்நாடு, இந்தியா, உலக செய்திகள் மற்றும் முக்கிய அரசியல் அப்டேட்களை உடனுக்குடன் பெற Seithikathir WhatsApp சேனலை பின்தொடருங்கள். 👉 https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ✅ Follow  ✅ Share  ✅ Stay Updated நன்றி! 🙏 @⁨all⁩

📊 Poll கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கும் அரசின் முடிவு... Poll: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/26946

📢 Seithikathir Tamil News WhatsApp Channel தமிழ்நாடு, இந்தியா, உலக செய்திகள் மற்றும் முக்கிய அரசியல் அப்டேட்களை உடனுக்குடன் பெற Seithikathir WhatsApp சேனலை பின்தொடருங்கள். 👉 https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ✅ Follow  ✅ Share  ✅ Stay Updated நன்றி! 🙏 @⁨all⁩

📢 Seithikathir Tamil News WhatsApp Channel தமிழ்நாடு, இந்தியா, உலக செய்திகள் மற்றும் முக்கிய அரசியல் அப்டேட்களை உடனுக்குடன் பெற Seithikathir WhatsApp சேனலை பின்தொடருங்கள். 👉 https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ✅ Follow  ✅ Share  ✅ Stay Updated நன்றி! 🙏 @⁨all⁩

டைட்டன்: காலத்தின் வரலாறு! படிக்க: https://www.sindhai.com/others/titan-not-the-history-of-a-watch-but-the-history-of-time-1320997

அப்போதுதான் ஒரு உண்மை தெளிவாகிறது. நம்பிக்கை சாதித்துக் காட்டி சம்பாதிக்கப்படுகிறது. விலை குறையலாம். தரம் குறையக்கூடாது என்ற டாட்டாவின் முடிவு மதிப்பை உயர்த்தியது. இந்தக் கதை தோல்வியையும் மறைக்கவில்லை. "Try Again. Fail Again. Fail Better." தோல்வி ஒரு முடிவு அல்ல. அடுத்த முயற்சிக்கான அனுபவம். தோல்வியை ஏற்றுக்கொண்டு மீண்டும் எழும் நிறுவனங்கள்தான் காலத்தை வெல்லும். இறுதியில் இந்தப் பயணம் ஒரு வாட்சைப் பற்றி பேசவில்லை. காலத்தை வெல்லும் நிறுவனங்கள் எப்படி உருவாகின்றன என்பதைத்தான் பேசுகிறது. நேரத்தைவிட நமது சிந்தனைகள் இரண்டு அடி முன்னே இருக்க வேண்டும் என்று கூறும் A Titan Story, நாமும் ஒரு டாடா என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. அதனால்தான் இந்தத் தொடர் முடிந்த பிறகும், மனதில் நிற்பது Titan என்ற பிராண்ட் அல்ல... அதை உருவாக்கிய சிந்தனை. தொலைநோக்கு. நம்பிக்கை. தலைமைத்துவம். புதுமை. தரம். நீடித்து நிற்கும் ஒவ்வொரு நிறுவனமும், இறுதியில் இந்த ஐந்து மதிப்புகளின் மீதே கட்டப்படுகிறது.

🔴 ஒரு வாட்சின் கதை அல்ல... காலத்தை வென்ற ஒரு சிந்தனையின் கதை! பதிவு: ஜி.எஸ். பாலமுருகன் – https://www.facebook.com/share/p/1CkX7FpZpJ/ ஒரு நிறுவனத்தை உருவாக்குவது எது? பணமா? தொழில்நுட்பமா? பெரிய அலுவலகங்களா? இல்லை... மற்றவர்கள் பார்க்காத எதிர்காலத்தை சிலர் மட்டும் முன்கூட்டியே நம்பும் தைரியமா? Made in India: A Titan Story பார்த்த பிறகு மனதில் நீண்ட நேரம் நின்ற கேள்வி இதுதான். இது ஒரு வாட்சின் கதை அல்ல. ஒரு சிந்தனை எப்படி ஒரு நிறுவனமாக வளர்கிறது, ஒரு நிறுவனம் எப்படி ஒரு பிராண்டாக மாறுகிறது என்பதற்கான பயணம். 1970களின் இந்தியாவில் வாட்ச் சந்தையில் உள்நாட்டு பிராண்டாக HMT-தான் ஆதிக்கம் செலுத்தியது. அப்படிப்பட்ட காலத்தில், "இன்னொரு வாட்சை உருவாக்கலாம்" என்று அவர்கள் நினைக்கவில்லை. "உலகம் திரும்பிப் பார்க்கும் ஒரு இந்தியப் பிராண்டை உருவாக்க வேண்டும்" என்று நினைத்தார்கள். அந்த ஒரு சிந்தனையே இந்தக் கதையின் முதல் வெற்றி. அந்தப் பாதை எளிதாக இல்லை. Quartz தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்தபோது பலருக்கு அது புரியவில்லை. புதிய சிந்தனையை முதலில் ஏற்றுக்கொள்வதே சவால். ஆனால் அதை மற்றவர்களையும் நம்ப வைப்பதுதான் அதைவிட பெரிய சவால். அங்கிருந்துதான் தொழில்நுட்பப் பயணம், மனிதர்களின் பயணமாக மாறுகிறது. வரலாறு எப்போதும் இப்படித்தான் இருக்கும். டைப்ரைட்டரில் இருந்து கம்ப்யூட்டர், கம்ப்யூட்டரில் இருந்து ஸ்மார்ட்போன், இன்று ஏ.ஐ. ஒவ்வொரு புதிய சிந்தனையும் முதலில் சந்தேகத்தையே சந்திக்கும். அதை நம்புகிறவர்கள்தான் பின்னாளில் வரலாறு எழுதுகிறார்கள். அதனால்தான் இந்தப் பயணம் ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது. உத்வேகம் மட்டும் போதாது; அதைச் செயல்படுத்தும் தைரியம்தான் வெற்றியை உருவாக்குகிறது. "No Discussion. Only Demonstration." இந்த ஒரு வரி, ஒரு வசனம் அல்ல; ஒரு நிறுவனத்தின் பண்பாடு. பேசிக்கொண்டே இருப்பவர்களுக்கும், செய்து காட்டுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை இது சொல்லிவிடுகிறது. அதேபோல், "உங்கள் எண்ணங்கள் வாட்ச் மாதிரியே ரொம்ப சின்னதாக இருக்கிறது" என்ற வரியும் ஒரு நிறுவனத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்க வைக்கிறது. பல நேரங்களில் நம்மை உலகம் தடுக்கவில்லை; நாமே நம்முடைய சிந்தனைக்கு எல்லை போட்டு விடுகிறோம். இன்று "பைத்தியக்காரத்தனம்" என்று தோன்றும் துணிச்சல்தான், நாளை "தொலைநோக்கு" என்று பாராட்டப்படுகிறது. இங்கிருந்துதான் இந்தக் கதையின் மையம் தொடங்குகிறது. எந்த நிறுவனத்தையும் கட்டிடங்கள் நடத்துவதில்லை; மனிதர்கள்தான் நடத்துகிறார்கள். மனிதர்களை வழிநடத்துவது பதவியல்ல, தலைமைத்துவம். யாராவது ஆலோசனை கேட்டு வந்தால் Tata உடனே பதில் சொல்லவில்லை. ஒரு கதையைச் சொன்னார். ஒரு கேள்வியைக் கேட்டார். முடிவை அவர்களே எடுக்க வைத்தார். ஏனென்றால் ஒரு தலைவர் எல்லா முடிவுகளையும் எடுப்பதில்லை; முடிவெடுக்கக்கூடிய மனிதர்களை உருவாக்குகிறார். ஆனால் இந்தக் கதை ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. நம்பிக்கை கொடுத்தால் மட்டும் போதாது; சரியான மனிதர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். எந்த நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்தும் அதன் மனிதர்கள்தான். அதே நேரத்தில், அவர்கள் தங்களுக்குள் மட்டுமே கவனம் செலுத்தவில்லை. சந்தை எப்படி மாறுகிறது, போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள். ஏனென்றால் மாற்றத்தை முதலில் புரிந்துகொள்பவர்கள்தான், இறுதியில் சந்தையை வழிநடத்துகிறார்கள். நல்ல யோசனைகள் எப்போதும் ஒரு அறையில் பிறப்பதில்லை. டீ குடிக்கும் நேரத்தில், சிரித்துப் பேசும் தருணங்களில், ஒரு சிறிய இனிப்பைப் பகிர்ந்துகொள்ளும் நிமிடங்களிலும் பிறக்கலாம். மனிதர்கள் நெருக்கமாகும் இடத்தில்தான் நம்பிக்கை உருவாகிறது. நம்பிக்கை உருவான இடத்தில்தான் புதுமை பிறக்கிறது. சில நேரங்களில் ஒரு லட்டு கூட மேஜிக் செய்துவிடும். இந்தப் பயணம் குடும்பத்தையும் மறக்கவில்லை. ஒரு தலைவருக்கும் குழப்பம் வரும். மன அழுத்தம் வரும். அந்த நேரத்தில் வீட்டில் நடக்கும் ஒரு சாதாரண உரையாடல், அலுவலகத்தில் கிடைக்காத தெளிவைக் கொடுத்துவிடும். ஒரு பெரிய நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால், அமைதியாக நிற்கும் குடும்பமும் இருப்பதை இந்தக் கதை அழகாக நினைவூட்டுகிறது. அந்த நம்பிக்கையோடும், அந்தக் குழுவோடும் இந்தியாவில் வெற்றி கிடைத்தது. ஆனால் ஒரு கேள்வி இன்னும் மீதமிருந்தது. உலகமும் இதை ஏற்றுக்கொள்ளுமா? ஆரம்பத்தில் இந்தியப் பொறியாளர்களின் திறமையை உலகம் பெரிதாக மதிக்கவில்லை. கூட்டாண்மைக்கும் தயங்கியது. ஆனால் தரமும் தொழில்நுட்பமும் பேச ஆரம்பித்த பிறகு, அதே உலகம் திரும்பி வந்து கைகோர்க்க முனைந்தது.

✨ நாம் அறிந்த செய்திகளின் அறியாத கதை பதிவு: ஜி.எஸ். பாலமுருகன் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் பல மாதங்கள் படிக்கப்படாமல் அலமாரியில் கிடப்பது பலருக்கும் நடக்கும். அப்படித்தான் மூத்த பத்திரிகையாளர் ராஜா வாசுதேவன் எழுதிய “மீண்டும் தலைப்புச் செய்திகள்” நூலும் என்னிடம் ஆறு மாதங்களுக்கும் மேலாக இருந்தது. ஒரு நாள் இனியும் தள்ளிப் போடக் கூடாது என்று எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். 514 பக்கங்கள் கொண்ட இந்த நூல், வெறும் ஒரு பத்திரிகையாளரின் நினைவுக் குறிப்பாக இல்லாமல், கடந்த மூன்று தசாப்தங்களில் தமிழக அரசியல் மற்றும் ஊடக உலகில் பேசப்பட்ட முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்த ஆவணமாக இருப்பது புரிந்தது. பள்ளி, கல்லூரி நாட்களில் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்த பல நிகழ்வுகளை மீண்டும் சந்தித்த உணர்வையும் அது கொடுத்தது. 38 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலின் முதல் பலம் அதன் கட்டமைப்பு. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு செய்தியுடன் தொடங்குவதில்லை; அந்தச் செய்தியுடன் தொடர்புபடுத்தும் ஒரு வரலாற்றுப் பின்னணி தகவலிலிருந்து தொடங்குகிறது. பின்னர் சம்பவம், செய்தியறை அனுபவம், அதன் தாக்கம் என நகர்கிறது. இதனால் இது வெறும் செய்தித் தொகுப்பாக இல்லாமல், செய்தியையும் அதன் பின்னணியையும் இணைத்து சொல்லும் நூலாக மாறுகிறது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம், திமுக–பாஜக கூட்டணி, அதிமுக–காங்கிரஸ் கூட்டணி, பிரேமானந்தா, கல்கி சாமியார் விவகாரம், கருணாநிதி கைது, சுனாமி பேரழிவு, பிரபாகரன் பேட்டி, நித்தியானந்தா சர்ச்சை என ஒரு தலைமுறை பார்த்த முக்கிய செய்திகளின் பின்னணி இதில் பதிவாகியுள்ளது. நூலின் குறிப்பிடத்தக்க அம்சம், நாம் செய்திகளாக பார்த்த நிகழ்வுகளின் பின்னணியை வெளிச்சமிடுவதுதான். தகவல் சேகரிப்பு, ஆபத்தான பயணங்கள், ஆசிரியர் முடிவுகள், அரசியல் அழுத்தங்கள் போன்றவற்றை தனது அனுபவங்கள் வழியாக பதிவு செய்கிறார். பிரபாகரன் தொடர்பான அத்தியாயங்கள் நூலின் மிகவும் சுவாரஸ்யமான பகுதிகளில் ஒன்று. இலங்கைக்குச் சென்று அவருடைய பேட்டியை ஒளிபரப்புவதற்கான முயற்சிகள், அதற்கான சவால்கள், அக்கால அரசியல் சூழல் போன்றவை விரிவாக விவரிக்கப்படுகின்றன. நூலை வாசிக்கும் போது பழைய செய்திகளோடு சேர்ந்து அந்தக் கால நினைவுகளும் மீண்டு வருகின்றன. அந்த வகையில் ஜெயலலிதா–சசிகலா நடத்திய ஆடம்பர திருமணம் மற்றும் கருணாநிதி கைது தொடர்பான அத்தியாயங்கள் இந்த நூலின் சிறந்த பகுதிகளில் சிலவாக எனக்குத் தோன்றின. பணியில் சமயோசிதம், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவை உணர்த்துகின்றன. நூலில் என்னை கவர்ந்த மற்றொரு அம்சம், ஆசிரியர் தனது பணியிட அனுபவங்களை அலங்கரிக்க முயலவில்லை என்பதுதான். அலுவலக அரசியல், கருத்து வேறுபாடுகள், செய்தி முடிவுகள், வெற்றிகள், தோல்விகள் என பல விஷயங்களை வெளிப்படையாக பதிவு செய்கிறார். குறிப்பாக ஊடகங்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு குறித்த பகுதிகள் கவனிக்கத்தக்கவை. ஒரு செய்தித் தலைப்பு வெறும் சொற்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு காலகட்டத்தின் அரசியல் சூழலைச் சுருக்கமாகப் பதிவு செய்யும் கலை என்பதையும் உணர்த்துகிறது. செய்தியைத் தேர்வு செய்வதும், அதற்கு பொருத்தமான தலைப்பை வழங்குவதும் செய்தியியலின் முக்கியமான படைப்பாற்றல் என்பதை இந்த நூல் நினைவூட்டுகிறது. அதற்கு நல்ல உதாரணம் அதிமுக–காங்கிரஸ் கூட்டணி தொடர்பான அத்தியாயம். அதைப் படித்த பிறகு அதற்கு வைக்கப்பட்ட “கூட்டணிக்கு தீவைப்பு” என்ற தலைப்பு எவ்வளவு பொருத்தமானது என்பதை உணர முடிகிறது. நூலை வாசிக்கும் போது ஆசிரியரின் செய்தியியல் திறன் மட்டுமல்ல, ஒரு வலுவான குழுவை உருவாக்கி வழிநடத்திய திறனும் வெளிப்படுகிறது. எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றி ஒரே ஒருவரின் உழைப்பால் உருவாகாது; திறமையான குழு, தெளிவான வழிகாட்டுதல் மற்றும் கூட்டுப் பணியால்தான் சாத்தியமாகும் என்பதை ஆசிரியரின் அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்த நூலை ஊடகத் துறையினருக்கான நூல் என்று மட்டும் வகைப்படுத்த முடியாது. வரலாறு, அரசியல், ஊடகம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள வாசகர்களுக்கும் இது பயனுள்ள வாசிப்பாக அமைகிறது. “மீண்டும் தலைப்புச் செய்திகள்” நூலை வாசித்து முடித்த பிறகு கிடைப்பது ஒரு புத்தக வாசிப்பு அனுபவம் மட்டுமல்ல. செய்திகளை உருவாக்கிய மனிதர்களின் உழைப்பையும், ஒரு காலத்தின் அரசியல் மற்றும் ஊடக வரலாற்றையும் ஒரே நேரத்தில் பதிவு செய்யும் இந்த நூல், சமகாலத் தமிழ் செய்தியியல் அனுபவங்களை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு முக்கிய ஆவணம். https://www.facebook.com/share/p/1EaEyp1gkM/

photo content

முழு கட்டுரையை வாசிக்க: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/26100
முழு கட்டுரையை வாசிக்க: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29/26100

📢 Seithikathir Tamil News WhatsApp Channel தமிழ்நாடு, இந்தியா, உலக செய்திகள் மற்றும் முக்கிய அரசியல் அப்டேட்களை உடனுக்குடன் பெற Seithikathir WhatsApp சேனலை பின்தொடருங்கள். 👉 https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ✅ Follow ✅ Share ✅ Stay Updated நன்றி! 🙏 @⁨all⁩

📢 செய்திகள் இனி ''செய்திக்கதிர் வாட்ஸ்அப்'' சேனலில் மட்டுமே... விருப்பம் உள்ளோர் இணைந்து கொள்ளவும்... உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்... 📲 செய்திக்கதிர் வாட்ஸ்அப் சேனல்:  👉  https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 நன்றி.