uz
Feedback
சிவசக்தி டெலிகிராம் சேனல்

சிவசக்தி டெலிகிராம் சேனல்

Kanalga Telegram’da o‘tish

எம் கடன் பணிசெய்து கிடப்பதே

Ko'proq ko'rsatish
485
Obunachilar
Ma'lumot yo'q24 soatlar
Ma'lumot yo'q7 kunlar
-730 kunlar
Postlar arxiv
https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD *நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து ஆனி சங்கடஹர சதுர்த்தி சிறப்புகள் பற்றிய பதிவுகள் :* ஆனி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. "சங்கடம்" என்பது துன்பம், தடைகள், கஷ்டங்கள் என்பதையும், "ஹர" என்பது நீக்குபவர் என்பதையும் குறிக்கிறது. எனவே, பக்தர்களின் துன்பங்களையும் தடைகளையும் நீக்கி அருள்புரியும் நாள் என்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப் போற்றப்படுகிறது. ஆனி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் விநாயகப் பெருமானை வழிபடுவது சிவபெருமானின் அருளையும், விநாயகரின் அருளையும் ஒருசேரப் பெறும் பாக்கியத்தை அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன் முதலில் விநாயகரை வணங்குவது போல, வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்க வேண்டி இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். விநாயகர் ஞானத்தின் வடிவமாகவும், விக்னங்களை நீக்கும் தெய்வமாகவும் போற்றப்படுகிறார். சங்கடஹர சதுர்த்தி விரதம் என்பது வெறும் வேண்டுதலுக்கான விரதம் மட்டுமல்ல; மனதை ஒருமுகப்படுத்தி, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்வதற்கான ஆன்மீகப் பயிற்சியாகும். ஆனி சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை முழு மனதுடன் வழிபட்டு, விரதம் இருந்து, நற்செயல்களை மேற்கொண்டால் வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி, கல்வி, தொழில், குடும்பம், ஆரோக்கியம், செல்வம் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் ஆகிய அனைத்திலும் இறையருள் கிட்டும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாகும்.

அதன் பிறகு அவர் கடலூர், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் வசித்து சேலத்திலே சித்தியானார்.அவருக்கும்முன்னே இந்தக் கோயிலின் முன்பு எண்கோண வடிவில் ஒரு கருங்கல் யந்திரமும், வேப்பமரமும் நட்டு அதனடியில் ஒரு சித்தர் தவம் செய்து வந்ததாக இந்த ஊரைச் சார்ந்த பெரியோர்கள் கூறுகின்றனர். அந்த வேப்பமரம் காலங்காலமாக வளர்ந்து, தன் அருகேயிருந்த கருங்கல்லால் ஆன யந்திரத்தை தன் வேரால் முழுவதும் மறைத்து நிற்கின்ற காட்சியை இன்றும் அந்த ஊரிலே காணலாம்.* *வானமாதேவி என்ற இத்திருத்தலம் சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளால் கூற்றாயினவாறு என்ற பதிகம் பாடி இறையருளால் சூலைநோய் தவிர்த்து சமணத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய வரலாறு நடைபெற்ற திருவதிகை வீரட்டத்திற்குக் கிழக்கேயும். திருமங்கையாழ்வாரால் மங்களாஸாசனம் செய்யப் பெற்றதும் வேதாந்த தேசிகரால் பாடப்பெற்றதுமான 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவந்திபுரத்திற்கும், திருஞானசம்பந்தராலும், அருணகிரிநாதராலும் பாடப்பெற்ற திருமாணிகுழி சிவதலத்திற்கு மேற்கேயும் ஔஷதகிரி தொடர்ச்சிக்கு வடக்கேயும் கங்கையில் சிறந்த கெடில நதியின் (கருடநதி) தெற்கேயும் மற்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழநாட்டின் பொற்காலம் எனப்போற்றுமாறு ஆட்சி செய்தவனும் திருமுறை கண்ட சோழனும், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவனுமாகிய இராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவியின் (வானமாதேவி) பெயரால் அமைந்த திருத்தலமாகும்.* *எங்குமே காண முடியாத அளவுக்கு 6 அடி உயரத்திற்கு மேல், சங்கு சக்கராயுதங்களோடு எட்டு திருக்கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாக கோலவிழி அம்மன் அருள்பாலிப்பதும், பைரவர் சன்னதி அமைந்துள்ளதும் சிறப்பு.* *திருச்சிற்றம்பலம்*

https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD *"தினம் ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில்,* *மூலவர் : கோலவிழி அம்மன்.* *வானமாதேவி,* *கடலூர்.* *காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 94421 75842, 94433 75843.* *சிறப்பு : ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, 6 அடி உயரத்திற்கு மேல், சங்கு சக்கராயுதங்களோடு எட்டு திருக்கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாக கோலவிழி அம்மன் அருள்பாலிப்பதும், காளி கோயிலில் பைரவர் சன்னதி அமைந்துள்ளதும் சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.* *காளி கோவிலில் பைரவர் சன்னதி தனியாக உள்ளது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்தக் கோயிலின் முன்பு எண்கோண வடிவில் ஒரு கருங்கல் யந்திரமும், வேப்பமரமும் நட்டு அதனடியில் ஒரு சித்தர் தவம் செய்து வந்ததாக இந்த ஊரைச் சார்ந்த பெரியோர்கள் கூறுகின்றனர். அந்த வேப்பமரம் காலங்காலமாக வளர்ந்து, தன் அருகேயிருந்த கருங்கல்லால் ஆன யந்திரத்தை தன் வேரால் முழுவதும் மறைத்து நிற்கின்ற காட்சியை இன்றும் காணலாம்.* *செய்வினை, கர்ம வினையால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, குழந்தைச் செல்வம் உண்டாக, தீராத நோய்கள் தீர, நல்ல கல்வியறிவு மற்றும் செல்வம் வளம் கிடைக்க இங்குள்ள கோலவிழி அம்மனை வழிபடுகின்றனர்.* *அம்மனுக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.* *இந்த ஊரிலே, எங்குமே காண முடியாத அளவுக்கு 6 அடி உயரத்திற்கு மேல், சங்கு சக்கராயுதங்களோடு எட்டு திருக்கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாக கோலவிழி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். திருவக்கரையில் கோயில் கொண்ட வக்ரகாளி அம்மனை விடவும். தில்லையில் கோயில் கொண்டுள்ள தில்லை எல்லை காளியை விடவும் உயரத்திலும் உருவத்திலும் பெரியவள் இந்த கோலவிழி அம்மன். வானமாதேவி என்கிற இந்த ஊரின் முந்தைய பெயர் திருமலைராயன்பேட்டை என்பதாகும். தமிழகத்திலே சமணர்கள் அதிகமாக வாழ்ந்த காலத்தில், இராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவி அவர்கள் சமணர்களுக்கு தானமாக (இறையிலி நிலமாக) இந்த ஊருக்கு அருகில் இருந்த நிலப் பகுதியைக் கொடுத்ததால், அந்தப் பகுதியின் பெயர் அவர்களின் பெயராலேயே வானவன்மாதேவி என்று அழைக்கப்பட்டு, இன்று வானமாதேவியாக மருவி நிற்கிறது. சமணர்கள் இந்த ஊரில் வாழ்ந்ததற்குச் சான்றாக, தியான நிலையில் அமர்ந்த ஒரு பெரிய மகாவீரருடைய அழகுவாய்ந்த கற்சிலை 1998 ஆம் ஆண்டு வரை இங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.* *இந்தப் பகுதியை ஆண்ட சந்திரசேகர நயினார் என்ற ஒரு சமணர், பல சமூகங்களையும், சைவ சமயத்தையும் சார்ந்த பொது மக்களை எல்லாம், இந்த ஊரில் உள்ள விளை நிலங்களில் எல்லாம் ஓர் இரவுக்குள் நடவு நட்டு மறுநாள் பொழுதுக்குள் அறுவடை செய்து தானியங்களைக் கொடுக்காவிட்டால், அனைவரும் சமண சமயத்தைத் தழுவ வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை எப்படி நிறைவேற்றுவது என்று திகைத்த பொது மக்கள் அனைவரும் கோலவிழி அம்மனிடம் சென்று மனமுருகி தங்களைக் காப்பாற்ற வேண்டுமென வேண்டினர். அவர்களின் வேண்டுதலை செவிமடுத்த கோலவிழி அம்மன், செல்லியம்மன் மற்றும் பூஞ்சோலையம்மன் என்ற இரு தேவதைகளைப் பார்த்துக் கட்டளையிட்டதன்பேரில், மேற்படி இரு தேவதைகளும் ஓர் இரவுக்குள் அத்தனை விளைநிலங்களிலும் நடவு நட்டு கோலவிழி அம்மன் அருளால் மறுநாள் பொழுதுக்குள் விளைவித்து அறுவடை செய்து கொடுத்தனர்.* *இதைக் கேள்வியுற்ற சந்திரசேகர நயினார், கோலவிழி அம்மனின் சக்தியை முழுதாகப் புரிந்துகொண்டு, மனந்திருந்தி, பொதுமக்கள் அனைவரையும் அவரவர்கள் சமயத்திலே இருக்க அனுமதித்து, கோலவிழி அம்மனை வணங்கி நின்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இதற்குச் சான்றாக இப்பொழுதும் இந்தத் திருக்கோவிலையொட்டி சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அந்த நிலப்பரப்பின் முடிவில் அமைந்துள்ள அடுத்த கிராமமான திருமாணிக்குழியில் செல்லியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் நடைபெறும் தெருக்கூத்துகளிலும் இந்த வரலாறு செல்லியம்மன் நாடகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஊரைச் சார்ந்த சமணர்கள் புலம்பெயர்ந்து விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்தக் காளி குலதெய்வமாக விளங்குகிறாள்.* *அண்மைக் காலத்தில் 140 ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்த சித்தர் ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள் இந்தக் காளியின் பெருமையை பலமுறை சொன்னதோடு மட்டுமல்லாமல், இந்தக் கோயிலிலேயே 30 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஆண்டுகள் தங்கி தவமிருந்தார். தனக்குப் பெரும் சக்தியை இந்தக் காளி அருளியதாக இந்த ஊரில் வாழ்ந்த வேங்கடசாமி என்ற நிலகிழாரிடம் அவர் கூறியிருக்கிறார்.

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁கத்திடு கடல்மேலான் கடிமலர் அதன்மேலான்_ _🍁எய்த்தடி தொழுதேத்த எரியென உயர்கோனை_ _🍁அத்தனை அழகாரும் அறையணி நல்லூரெம்_ _🍁சித்தனை வழிபாடு செய்பவர் வினைவீடே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_ஒலிக்கின்ற கடல்மேல் இருக்கும் திருமாலும், வாசத்தாமரையின்மேல் இருக்கும் பிரமனும் அடிமுடி தேடிக் காணாது வருந்தித் திருவடியை வழிபடுமாறு ஜோதியாக உயர்ந்த தலைவனை !! தந்தையை !! அழகிய அறையணிநல்லூரில் உறைகின்றவனும் எம் சித்தத்தில் இருப்பவனுமான சிவபெருமானை வழிபடும் அடியவர்களது வினைகள் அழியும் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏பெரியபுராணம்🙏* *☀️திருமுறை1️⃣2️⃣☀️* *🌹திருநாவுக்கரசு நாயனார் புராணம்* *🦚பாடல்:1523///4272🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹ஈசர் மிழலை இறையவர்பால் இமையப் பாவை திருமுலைப்பால் தேசம் உய்ய உண்டவர்தாம் திருமா மகனார் ஆதலினால் காசு வாசி யுடன்பெற்றார் கைத்தொண் டாகும் அடிமையினால் வாசி யில்லாக் காசுபடி பெற்று வந்தார் வாகீசர். ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *திருஞானசம்பந்தர் உமையம்மையாரின் திருமுலைப் பாலை, உலகம் உய்யும் பொருட்டு உண்ட திருமா மகனார் ஆதலால், ஈசரான மிழலை நாதரிடத்துக் குற்றம் உடைய காசினைத் திருஞானசம்பந்தர் பெற்றார். கைத் திருத்தொண்டு செய்கின்ற அடிமையானவர் ஆதலால் அக்குற்றம் இல்லாத காசினைத் திருநாவுக்கரசர் பெற்றார்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸சேக்கிழார்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருமந்திரம்🌹🙏* *☀️திருமுறை🔟☀️* *🦚பாடல்:2883///3000🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு 🌹மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன 🌹மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் 🌹பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *ஆன்மா என்னும் பார்ப்பானின் வீட்டில், ஐம்பொறிகள் என்ற ஐந்து பசுக்கள் உள்ளன. அவைகளை மேய்ப்பவர் என்று யாரும் இல்லை. அதனால் அவை வெறித்துத் திரிகின்றன. அவைகளை மேய்ப்பதற்கு ஒருவர் இருந்து, அவற்றின் உலக இன்பம் என்ற வெறியும் அடங்கினால் அப்போது அந்த ஐந்து பசுக்களும் அந்தப் பார்ப்பானுக்குப் பேரின்பம் என்ற பாலைச் சொரியும்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸திருமூலர்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை4️⃣☀️* *🌹திருவீழிமிழலை🌹* *🦚பாடல்:0927///1070🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் சுற்றியும் பத்திமையால் மேற்பட்ட வந்தணர் வீழியு மென்னையும் வேறுடையீர் நாட்பட்டு வந்து பிறந்தே னிறக்க நமன்றமர்தம் கோட்பட்டு நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *தோள்களில் பொருந்திய பாம்புகளையும் கையில் சூலத்தையும் மகிழ்ந்து அணிந்தும், தொண்டாம் தன்மையால் மேம்பட்ட அந்தணர்கள் வாழும் வீழி நகரையும் அடியேனையும் சிறப்பாக உடையீர் ! நெடுங்காலம் உயிர்வாழ்ந்து பின் இறக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இவ்வுலகில் பிறப்பெடுத்த அடியேன் இறக்குந்தருவாயில் இயமனுடைய ஏவலரால் கைப்பற்றப்பட்டு உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருநாவுக்கரசர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை3️⃣☀️* *🌹🌻திருச்சேறை🌻🌹* *🦚பாடல்:0927///1358🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹அந்தர முழிதரு திரிபுர மொருநொடி யளவினில் மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால் வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர் செந்தழ னிறமுடை யடிகடம் வளநகர் சேறையே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரிபுரங்களை ஒரு நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும், அதனிடை வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் பூட்டி, திருமால், வாயு, அக்கினி இவற்றை அம்பாகக் கொண்டு எய்து வெந்தழியுமாறு செய்த வீரமிக்க வாலிபர். தேக்கிய விடம் மணி போன்று விளங்கும் கண்டத்தர். செந்தழல் போன்ற மேனியுடைய அவர் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருஞானசம்பந்தர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருவருட்பா🌹🙏* *☀️திருமுறை2️⃣☀️* *🦚இரண்டாம் தொகுதி🦚* *🌹காதற் சிறப்புக் கதவா மாண்பு* *🌷திருவொற்றியூர்🌷* _🌻அஃதாவது காதலன்பு மிகுதலால் தன்னைக் கழறி விலக்குவாரை வெகுண்டுரையாமல், தன் உட்கோளை இனியவாகக் கூறும் நற்பண்பு._ *🦚பாடல்:1707///5818🦚* ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ 🌹உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும் அடையார் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும் படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும் கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *விளக்கம் :* *கடலைக் கடையா தெடுத்த அமுது போன்றவளே, சிவபெருமான் எல்லாம் உடையவராயினும், இவ்வுலகிற்கே பொருட்குப் பற்றுக் கோடாவோம் எனச் செருக்குவார்க்கு ஒன்றும் உதவமாட்டார் எனப் புகழ்வார்போற் கூறினாலும், மாறுற்றுத் தன்னை யடையாதார்க்குப் பெறலரியராயினும், அம்மாற்றார்க்குத் தாமே வலியச் சென்று வேண்டியன அளித்து ஆதரிப்பரென்று கூறினாலும், படைகளை யேந்தும் கையை யுடையரான தியாகப் பெருமான் பழிக்கஞ்சாத பாசுபதம் என்ற படையை யுடையவர் என வுரைத்தாலும், நான் அவர்மேற் கொண்ட காதலைக் கையொழியேன்.* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🦚🔥வள்ளலார்🔥🦚* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻

🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣    *திருமுறை ஓதுவோம்*      *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠     *_🌷சிவ வணக்கம்🌷_* *🌷சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்  உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷        *🌷சிவன் துதி🌷* *🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!* *🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!* *🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!* *🌷நீ வாழியென் பார்க்கருள வா !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷 *_சமய குரவர்கள் துதி_* *🌷பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி !!* *🌷ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி !!* *🌷வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி !!* *🌷ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷 *_திருஞானசம்பந்தர் சுவாமிகள்_* *🌷பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல் குண்டரை வென்று முன் கூடல் வைகியே வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும் தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.* *_திருநாவுக்கரசு சுவாமிகள்_* *🌷பொய் உரை நூல் சில புகலும் தீ யமண் கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.* *_சுந்தரமூர்த்தி சுவாமிகள்_* *🌷வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண் உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால் இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.* *_மாணிக்கவாசகர் சுவாமிகள்_* *🌷கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச் சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய் முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால் வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.* *_🌷அரகர சிவசிவ🌷_* *_🌷அரகர சிவசிவ🌷_* *_🌷அரகர சிவசிவ🌷_*

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உருவாகும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சில உதவிகள் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : செம்மஞ்சள் நிறம் அவிட்டம் : அலைச்சல்கள் உருவாகும். சதயம் : அனுசரித்து செல்லவும். பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும். --------------------------------------- மீனம் ஜூலை 02, 2026 கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருநந்த குழப்பம் மறையும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் பூரட்டாதி : கவனம் வேண்டும். உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும். ரேவதி : மதிப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளீர் மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். திருவாதிரை : சிந்தித்து செயல்படவும். புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும். --------------------------------------- கடகம் ஜூலை 02, 2026 சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்கள் சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூசம் : முடிவுகள் கிடைக்கும். ஆயில்யம் : நெருக்கம் உண்டாகும். --------------------------------------- சிம்மம் ஜூலை 02, 2026 மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் புதுமையான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் மகம் : மாற்றமான நாள். பூரம் : எண்ணங்கள் மேம்படும். உத்திரம் : ஈடுபாடுகள் ஏற்படும். --------------------------------------- கன்னி ஜூலை 02, 2026 செல்வ சேர்க்கைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். யூக வணிகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடி வரும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் உத்திரம் : கவனம் வேண்டும். அஸ்தம் : புரிதல் உண்டாகும். சித்திரை : ஆர்வம் ஏற்படும். --------------------------------------- துலாம் ஜூலை 02, 2026 தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகளும் சுழலும் அமையும். சுப காரியங்களில் பொறுமையுடன் இருக்கவும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் சித்திரை : நெருக்கடிகள் குறையும். சுவாதி : லாபகரமான நாள். விசாகம் : பொறுமையுடன் இருக்கவும். --------------------------------------- விருச்சிகம் ஜூலை 02, 2026 மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். தந்திரமான சில செயல்கள் மூலம் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : மதிப்பளித்து செயல்படவும். அனுஷம் : தெளிவுகள் பிறக்கும். கேட்டை : சிந்தனைகள் மேம்படும். --------------------------------------- தனுசு ஜூலை 02, 2026 கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். பேச்சுக்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஆதரவுகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்த மந்தநிலை மறையும். எதிர்கால தொடர்பான சேமிப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் மூலம் : புரிதல் அதிகரிக்கும். பூராடம் : ஆதரவுகள் மேம்படும். உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். --------------------------------------- மகரம் ஜூலை 02, 2026 உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திறமைகள் வெளிப்பட சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம் உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். திருவோணம் : ஆதரவான நாள். அவிட்டம் : அனுபவம் உண்டாகும். --------------------------------------- கும்பம் ஜூலை 02, 2026

https://t.me/sivasakthigroup *நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து 02-07-2026 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள் :* 02-07-2026 தமிழ் ஆண்டு, தேதி - பரபாவ, ஆனி 18 நாள் - மேல் நோக்கு நாள் பிறை - தேய்பிறை *நமது சிவசக்தி Whatsapp சேனலில் இனைய👇* https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l *திதி* கிருஷ்ண பக்ஷ துவிதியை - Jul 01 07:38 AM – Jul 02 09:38 AM கிருஷ்ண பக்ஷ திருதியை - Jul 02 09:38 AM – Jul 03 11:20 AM *நட்சத்திரம்* உத்திராடம் - Jul 01 06:51 AM – Jul 02 09:27 AM திருவோணம் - Jul 02 09:27 AM – Jul 03 11:46 AM *கரணம்* கரசை - Jul 01 08:40 PM – Jul 02 09:38 AM வனசை - Jul 02 09:38 AM – Jul 02 10:32 PM பத்திரை - Jul 02 10:32 PM – Jul 03 11:20 AM *யோகம்* வைத்ருதி - Jul 01 04:04 PM – Jul 02 04:38 PM விஷ்கம்பம் - Jul 02 04:38 PM – Jul 03 04:59 PM *வாரம்* வியாழக்கிழமை *சூரியன் மற்றும் சந்திரன் நேரம்* சூரியோதயம் - 5:50 AM சூரியஸ்தமம் - 6:35 PM சந்திரௌதயம் - Jul 02 8:36 PM சந்திராஸ்தமனம் - Jul 03 8:22 AM *அசுபமான காலம்* இராகு - 1:48 PM – 3:24 PM எமகண்டம் - 5:50 AM – 7:26 AM குளிகை - 9:01 AM – 10:37 AM துரமுஹுர்த்தம் - 10:05 AM – 10:56 AM, 03:11 PM – 04:02 PM தியாஜ்யம் - 01:50 PM – 03:35 PM *சுபமான காலம்* அபிஜித் காலம் - 11:47 AM – 12:38 PM அமிர்த காலம் - 12:21 AM – 02:06 AM பிரம்மா முகூர்த்தம் - 04:14 AM – 05:02 AM *ஆனந்ததி யோகம்* துர்வாஞ்சம் Upto - 11:12 AM துவஜ *வாரசூலை* சூலம் - South பரிகாரம் - தைலம் *சூர்யா ராசி* சூரியன் மிதுனம் ராசியில் *சந்திர ராசி* மகரம் (முழு தினம்) _______ *வியாழன் ஹோரை* காலை 06:00 - 07:00 - குரு - சுபம் 07:00 - 08:00 - செவ் - அசுபம் 08:00 - 09:00 - சூரி - அசுபம் 09:00 - 10:00 - சுக் - சுபம் 10:00 - 11:00 - புத - சுபம் 11:00 - 12:00 - சந் - சுபம் பிற்பகல் 12:00 - 01:00 - சனி - அசுபம் 01:00 - 02:00 - குரு - சுபம் 02:00 - 03:00 - செவ் - அசுபம் மாலை 03:00 - 04:00 - சூரி - அசுபம் 04:00 - 05:00 - சுக் - சுபம் 05:00 - 06:00 - புத - சுபம் 06:00 - 07:00 - சந் - சுபம் நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். _______ நாளைய (02-07-2026) ராசி பலன்கள் மேஷம் ஜூலை 02, 2026 வெளியூர் பயணத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் அஸ்வினி : லாபகரமான நாள். பரணி : ஒப்பந்தம் சாதகமாகும். கிருத்திகை : அனுசரித்து செல்லவும். --------------------------------------- ரிஷபம் ஜூலை 02, 2026 ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் கிருத்திகை : வாய்ப்புகள் அமையும். ரோகிணி : அனுபவம் உண்டாகும். மிருகசீரிஷம் : வேறுபாடுகள் நீங்கும். --------------------------------------- மிதுனம் ஜூலை 02, 2026 குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.

https://t.me/sivasakthichannel2 *நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து ஆனி திருவோணம் வழிபாட்டு முறைகள் மற்றும் பலன்கள் பற்றிய பதிவுகள் :* அதிகாலையில் நீராடி வீட்டில் விளக்கேற்றி, துளசி இலைகளால் மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்யலாம். வழிபாட்டின்போது "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். திருப்பாவை, திருவாய்மொழி போன்ற வைணவப் பிரபந்தங்களைப் படிப்பது மிகவும் சிறப்பாகும். இயன்றவர்கள் கோவிலுக்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்யலாம். துளசி மாலை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம். *செய்ய வேண்டிய தானங்கள்* ஆனி திருவோணம் அன்று அன்னதானம், ஆடை தானம், கல்வி உதவி, ஏழை எளியோருக்கு உணவு வழங்குதல், கோயில்களுக்கு துளசி, நெய், எண்ணெய், பூக்கள் வழங்குதல் போன்ற தானங்கள் செய்வது பல மடங்கு புண்ணியத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. *ஆனி திருவோணத்தில் கிடைக்கும் பலன்கள்* மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும். மகாலட்சுமியின் அருளால் செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவும். மனக்கவலைகள் குறையும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி ஏற்படும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் முன்னேற்றம் கிடைக்கும். உடல்நலம் மேம்படும். வாழ்க்கையில் நம்பிக்கையும் ஆன்மீக ஈடுபாடும் அதிகரிக்கும்.

https://t.me/sivasakthichannel2 *நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து ஆனி திருவோணம் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :* ஆனி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம் மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன்; அதன் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார். எனவே இந்த நாளில் மகாவிஷ்ணு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த நாள் ஆன்மீக வளர்ச்சி, செல்வ வளம், குடும்ப நலம் மற்றும் மன அமைதியை அளிக்கும் புண்ணிய நாளாக போற்றப்படுகிறது. *திருவோணம் நட்சத்திரத்தின் மகிமை* திருவோணம் 27 நட்சத்திரங்களில் 22-வது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் ஒழுக்கம், பணிவு, கல்வி, ஞானம், தர்மம், பக்தி மற்றும் செல்வ வளம் ஆகியவற்றை குறிக்கிறது. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக நல்ல குணம், பிறருக்கு உதவும் மனப்பான்மை, இறைநம்பிக்கை மற்றும் நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. *ஆனி திருவோணத்தின் சிறப்புகள்* இந்த நாளில் மகாவிஷ்ணு, மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறந்த பலன்களைத் தரும். குடும்பத்தில் ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மனநிம்மதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பு முன்னேற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமணத் தடை, குழந்தைப் பேறு தாமதம் போன்றவற்றிற்காக இந்த நாளில் இறைவனை வேண்டினால் நல்ல பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஆனி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம், இறை அருளையும் வளமான வாழ்க்கையையும் வேண்டி வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பக்தியுடன் மகாவிஷ்ணுவை வழிபட்டு, தான தர்மங்கள் செய்து, நல்ல செயல்களில் ஈடுபட்டால் மனநிம்மதி, குடும்ப நலம், செல்வ வளம் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் ஆகியவற்றை இறையருளால் பெறலாம் என்ற நம்பிக்கை பரவலாக நிலவுகிறது.

நீங்களே செய்யக்கூடிய எளிய வாஸ்து பூஜை ஒரு கலசத்தில் கங்கை, காவிரி, கோதாவரி போன்ற தீர்த்தங்களுடன் வில்வம், துளசியிட்டு ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை 108 முறை ஓதி, இந்த தீர்த்தத்தை வீடு முழுதும் தெளியுங்கள்..! ஸ்ரீவாஸ்து காயத்ரீ மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே பூர்ஸ்வஸ்தி ரூபாய தீமஹி தந்நோ வாஸ்து மூர்த்தி பிரசோதயாத் உங்கள் இல்ல, அலுவலக நிலை வாசல் படிகளிலும், ஆலயங்களிலும் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு மாவிலைத் தோரணம் கட்டி மண்டியிட்டுப் பிரார்த்தித்து புனித நதி தேவதைகளையும், நீரோட்ட தேவதைகளையும், வாஸ்து தேவதைகளையும், வாஸ்து மூர்த்தியையும் ஆவாகனம் ஆகுமாறு வேண்டிடுங்கள்! வாஸ்து மூர்த்திக்கு உரித்தான எண் 9 என்பதால் நல்ல சுத்தமான தரையில் தூய மண்ணைப் பரப்பி எட்டுத் திக்குகளில் ஓம் எழுதி நடுவில் ஒன்பதாவது முறையாக ஓம் என்று எழுதி மண்ணைச் சுற்றி ஒன்பது செங்கற்களை வைத்துத் தெரிந்த முறையில் ஒரு எளிய ஹோம குண்டத்தைக் கட்டிக் கொள்ளுங்கள்..! இதனுள் ஒரு பெரிய கற்பூரக் கட்டியை வைத்து அதன் மேல் அரசு, ஆல், புரசு போன்று சமித்துக் குச்சிகளை அடுக்கி வைத்திடுங்கள் ஒரு மரக் கரண்டியில் தாமரைத் திரி அல்லது பஞ்சுத் திரி வைத்து ஹோமத்திற்காக பசு நெய் வைத்துக் கொண்டு திரியில் ஜோதி ஏற்றி முதலில் ஸ்ரீவிநாயக காயத்ரீ கூறி ஹோம குண்டத்தில் உள்ள கற்பூரத்தை ஏற்றுங்கள் பிறகு உங்கள் குல தெய்வத்திற்கான காயத்ரீ, பிள்ளையார், சிவன், முருகன் போன்ற அனைத்து தெய்வ மூர்த்தியர்க்கான காயத்ரீ மந்திரம் கூறி அல்லது போற்றித் துதிகளை ஓதி ஹோம வழிபாட்டைத் ஆரம்பியுங்கள் பின் கீழ்கண்ட ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதியை ஒவ்வொன்றாக கூறி எளிய ஆஹுதிகளை ஹோமத்தில் இட்டு ஹோம வழிபாட்டைத் தொடருங்கள் ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதி 1. ஓம் பூ புவ சுவர்க மங்கள சுவாமியே போற்றி! 2. ஓம் பூ புவ சுவர்க நிலம் பூந்தகையே போற்றி! 3. ஓம் பூ புவ சுவர்க நீர், நிலத் தொகையனே போற்றி! 4. ஓம் பூ புவ சுவர்க புவன வடிவோனே போற்றி! 5. ஓம் பூ புவ சுவர்க பூமத்ய மூர்த்தியே போற்றி! 6. ஓம் பூ புவ சுவர்க பூலோக நாதரே போற்றி! 7. ஓம் பூ புவ சுவர்க பூமண்டல தெய்வமே போற்றி! 8. ஓம் பூ புவ சுவர்க புவன வளச் செல்வமே போற்றி! 9. ஓம் பூ புவ சுவர்க நிலமண்டல தேவா போற்றி! 10.ஓம் பூ புவ சுவர்க தாவரத் துறையுறை தாளா போற்றி! 11. ஓம் பூ பூவ சுவர்க பிருதிவிப் பரம்பொருள் தேவா போற்றி! 12. ஓம் பூ புவ சுவர்க இகபர நிலவழி நித்யனே போற்றி! 13. ஓம் பூ புவ சுவர்க பூநாத கான புவனனே போற்றி! 14. ஓம் பூ புவ சுவர்க அந்தரப் பரம் பொருள் அமுதா போற்றி! 15. ஓம் பூ புவ சுவர்க கீழ்திசை காக்கும் கிரணனே போற்றி! 16. ஓம் பூ புவ சுவர்க மண் உறை மறைவடி மகேசா போற்றி! 17. ஓம் பூ புவ சுவர்க மூலத் தினகரன் முதலுரு போற்றி! 18. ஓம் பூ புவ சுவர்க மறைநில மறைபுலன் மறையே போற்றி! 19. ஓம் பூ புவ சுவர்க வேள்வி முதலாய் விளக்கொளி போற்றி! 20. ஓம் பூ புவ சுவர்க புண்ணியத் திருமால் புறத்துரு போற்றி! 21. ஓம் பூ புவ சுவர்க ஆயிரங் கண் மலர்ப் பரவொளி போற்றி! 22. ஓம் பூ புவ சுவர்க நெய்யுறை சத்திய அழகா போற்றி! 23. ஓம் பூ புவ சுவர்க தர்மத் தலைக் கரு தகையே போற்றி! 24. ஓம் பூ புவ சுவர்க அனைத்துள பருப்பொருள் அருள்மறை போற்றி! 25. ஓம் பூ புவ சுவர்க ஆழிநிலைகொள் அனந்தனே போற்றி! 26. ஓம் பூ புவ சுவர்க ஊழ்வினை அகற்றும் சுந்தரா போற்றி! 27. ஓம் பூ புவ சுவர்க பாழ்மனம் போக்கும் பரந்தாமா போற்றி! 28. ஓம் பூ புவ சுவர்க இதழ் என்றும் இயம்பும் இனியா போற்றி! (இதழ்க் கொடி = ஒரு வகை பூமி கிழங்கு) 29. ஓம் பூ புவ சுவர்க புகழ்பட வாழ்ஒளி வள்ளலே போற்றி! 30. ஓம் பூ புவ சுவர்க தமிழ்த் திருமண் உறை தாடாளா போற்றி [தாடாளன் = பூமியளந்த விக்ரமன்] 31. ஓம் பூ புவ சுவர்க கருத்தூன்றிக் கர்ம எறும்பூரா போற்றி! [எறும்பூர் = திருச்சி திருஎறும்பூர்] 32. ஓம் பூ புவ சுவர்க மருத்துவக் கொடிக்குடி குரு மூர்த்தி போற்றி! [கொடிக்குடி = அற்புத பூமிகா மூலிகை] 33. ஓம் பூ புவ சுவர்க கீற்றுக் காற்றுக் கருவள திருத்தாளா போற்றி! 34. ஓம் பூ புவ சுவர்க காதோலைக் கருத்துக் கண்ணா போற்றி! [ காதோலை = கலச அணிகலன் ] 35. ஓம் பூ புவ சுவர்க பெண்ணினப் பெருமணி பொன்னாளா போற்றி! 36. ஓம் பூ புவ சுவர்க ஓலைப்பாய் ஓர் உறை உருவா போற்றி! [ஓலைப் பாய் = பூமி] ஆஹுதியில் ஸ்வாஹா எனும் போது அக்னியில் அவசியம் நெய் வார்த்து பொரி, வெட்டிவேர், நவதான்யம் போன்றவற்றை அக்னியில் இட வேண்டும். அவரவர் வசதிகேற்ப எளிய வாஸ்து ஹோம பூஜையை நிகழ்த்திடுங்கள்..!

விழி வழியே விழிப்புணர்வு கண்ணில் உள்ள பாப்பா வள்ளல் பெருமான் கடைவிரித்த "திருக்கடை"! உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் ஏழு மாயத் திரைகள். கருப்பு, வெள்ளை, சிவப்பு என கர்ம வினைகள் மூடியுள்ள 'இருள்' கோட்டை இதையே தைப்பூசம் அன்று வடலூரில் காட்டுகிறார்கள் வள்ளல் சொன்ன அந்தத் "தனிப்பெருங்கருணை" என்ற சிறு ஒளி கொண்டு, திரைகளை மெல்ல எரிக்க வேண்டும். இதற்கு குரு வேண்டும். மாய நீலத் திரை விலகும் கணமே அங்கே நித்யானந்த ஜோதி பேரொளியாய் வெளிப்படும்! "கண்மணி வாசல் வழியே போனால் - விண்ணக வாசல் திறக்கும்!" இரு கண்கள் சந்திக்கும் அந்தச் சுழிமுனைப் புள்ளி. அதுவே இருதயக் கமலத்தின் நுனி; பிராணனின் பிறப்பிடம்! புறப்பார்வை: பிரபஞ்ச மாயை.அகப்பார்வை: அருட்பெருஞ்ஜோதி! அந்த ஊசி முனைத் துவாரத்தில் "உணர்வை" (வாசியை) செலுத்த உப்புப் பாவை கடலில் கரைவது போல் 'நான்' எனும் அகந்தை அந்த மகா ஒளியில் கரையும் "உடம்பினைப் பெற்ற பயனாவது - உடம்பினுள்ளே ஒளியைக் காண்பதே!" விழி வழி பிராண உணர்வு மேலே ஏற உச்சித் துளையில் (சகஸ்ராரம்) அமுதம் ஊறும்! சடம் அழியும் தன்மை மாறும்; ஊன் உடம்பு போய் "ஒளி உடம்பாய்" உயிர் மலரும்! இது வெறும் வரிகள் அல்ல... வாசி ரகசியம்! கண்ணுக்குள் இருக்கும் பாப்பாவைக் கொண்டு, நமக்குள் இருக்கும் இறைவனைச் சந்திக்கும்— உன்னத யோக தந்திரம்!