CPIM Tamilnadu
Відкрити в Telegram
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Показати більше864
Підписники
-124 години
-37 днів
-1130 день
Архів дописів
நெட்டூர்க்கு தென்காசி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏன் செல்லவில்லை? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருக்குறளைப் பெருமையாகப் பேசுகிறோம். எல்லா உயிரும் சமம்தான் என்று பேசுவது உண்மையானால், பெருமைப்படுவது உண்மையானால், பட்டியலின சாதி மக்களும் பழங்குடியின மக்களும் இத்தகைய கொடுமையான தாக்குதலுக்கு உள்ளாவதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதிய மோதல்களைத் தடுப்பதற்குரிய பல்வேறு நல்ல ஆலோசனைகளை, நீதியரசர் சந்துரு தலைமையிலான ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியிருக்கிறது. ஏற்கனவே இருந்த தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #DalitLivesMatter #CasteAtrocities #JusticeForDalits #TamilNaduPolitics #SCSTAtrocities #HumanRights #SocialJustice #Tenkasi More: https://youtu.be/OMqQsGZt8ts
பாஜக அரசை விமர்சிப்பவர்களைத் 'தேசவிரோதி' என்று முத்திரை குத்துவதும், UAPA சட்டம் மற்றும் அமலாக்கத்துறை (ED) ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களை மிரட்டிப் பணிய வைக்கப் பார்ப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் 'நியூஸ்கிளிக்' (NewsClick) நிறுவனத்தின் மீது பொய் அவதூறுகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ள தீர்ப்பு, பாஜகவின் முகத்திரையை மீண்டும் கிழித்தெறிந்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளை பாஜகவால் ஒருபோதும் பறிக்க முடியாது. நீங்கள் மக்களின் உரிமைகளைப் பறிக்கப் பறிக்க, அவர்கள் தங்கள் உரிமைக்காக இன்னும் கிளர்ந்தெழுவார்கள்! - தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #NewsClick #BJP #UAPA #DelhiHighCourt #EDRaid #PressFreedom More: https://youtu.be/6-ifpvJX7Js
மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு ஏற்படும் போது, தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட்டு, மின்வெட்டுப் பிரச்சனை உள்ளிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் #PowerCutIndia #TNPowerCut #TNGovtActNow More: https://youtube.com/shorts/LtfnWtBrRzE?si=k5wsQnGOnP8ZeMGS
பாசிச அரசியலுக்கு எதிராக, ஜனநாயக உரிமைகளும், ஊடகச் சுதந்திரமும் அடைந்த வெற்றி!
அரசியல் ரீதியான மாற்றுக் கருத்துகளை ஒடுக்குவதற்கு மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜகவிற்கு, நியூஸ்கிளிக் வழக்கின் மீதான தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பெரும் பின்னடைவாகும்.
நியூஸ்கிளிக் மற்றும் அதன் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவுக்கு எதிரான நடவடிக்கைகள், விமர்சன கருத்துகளை முன்வைக்கும் ஊடகத்தையும், அதன் ஜனநாயகக் குரல்களையும் ஒடுக்கும் முயற்சியாக அமைந்திருந்தன. சங் பரிவாரத்தின் பாசிச அரசியலுக்கு எதிராக, ஜனநாயக உரிமைகளும், ஊடகச் சுதந்திரமும் அடைந்த வெற்றியாக இது அமைந்துள்ளது. - தோழர் பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #PrabirPurkayastha #NewsClick #SupremeCourt #EDRaid
மோடியின் கனவெல்லாம் 140 கோடிக்கா? இல்ல கார்ப்பரேட் முதலாளிக்கா? #12YearsOfModiGovtFailures #ModiGovtFailures More: https://youtube.com/shorts/KfCVN1xZo2o
மோடி 4399 நாட்கள்: அது சாதனை அல்ல, வேதனை கலந்த சோதனை தான்!
மத்தியில் பாஜாக அரசு பொறுப்பேற்று 4399 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இது சாதனைகளின் காலம் என அரசுத் தரப்பில் முழங்கப்பட்டாலும், சாமானிய மக்களின் பார்வையில் இது சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த ஒரு காலக்கட்டமாகவே பார்க்கப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் காட்டிலும், ஒரு சில கார்ப்பரேட்களின் வளர்ச்சியே பிரதானமாக இருந்தது. #12YearsOfModiGovtFailures #ModiGovtFailures
இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM More: https://youtube.com/shorts/rB_T4e2HE94
இமாச்சலப் பிரதேசம்: ஷிம்லாவில் பெருந்திரள் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் – உரிமைகளுக்காகக் குரலெழுப்பிய உழைக்கும் பெண்கள்! #Anganvaadi #Protest More: https://youtube.com/shorts/uw2v2JUAqnU
தென் அமெரிக்கா நாடான பெரு நாட்டில் இடதுசாரி வேட்பாளர் மக்கள் மருத்துவர் தோழர் ராபர்ட் சான்சஸ் அதிபர் தேர்தலில் வெற்றி!
ஏகாதிபத்திய அமெரிக்க அரசு உட்பட அனைத்து பிற்போக்கு சக்திகளும் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து மக்கள் இயக்கங்களின் வேட்பாளர் வெற்றி... #RobertoSanchez #LeftistVictory #LatinAmerica #PeoplesMovement #AntiImperialism #DemocraticSocialism #SouthAmericanPolitics #Elections2026
2020-ஆம் ஆண்டில் நியூஸ் கிளிக் இணைய இதழ் மீது அநியாயமாகத் தொடுக்கப்பட்ட வழக்கின் மூலம், அதன் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தது ஒன்றிய பாஜக அரசு.
6 ஆண்டுகள் கழித்து ஒன்றும் இல்லை என தில்லி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
பழி வாங்குவதற்கான துறையாக அமலாக்கத்துறை (ED) மற்றும் வருமான வரித்துறை (IT) பயன்படுகிறது.
தோழர் எஸ்.கண்ணன், மாநிலப் பொதுச் செயலாளர், #CITU #PrabirPurkayastha #NewsClick #SupremeCourt #EDRaid
நீதி வென்றது. பாசிசப் பொய்கள் தவிடுபொடியாயின!
நியூஸ்க்ளிக் (NewsClick) நிறுவனம் மற்றும் அதன் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா ஆகியோருக்கு எதிராக, பொருளாதார குற்றப்பிரிவு (EOW) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையையும் (FIR), அமலாக்கத்துறை (ED) பதிவு செய்த வழக்கையும் (ECIR) டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கைகள் "சட்டத்தை மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்த ஒரு நிகழ்வு" என்றும் நீதிமன்றம் சாடியுள்ளது.
பத்திரிகையாளர்களை மிரட்டவும், மாற்றுக்கருத்துக்களை ஒடுக்கவும், ஊடக சுதந்திரத்தை நசுக்கவும், விசாரணை முகமைகளை மோடி அரசு எவ்வளவு அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் போக்கிற்கு இந்தத் தீர்ப்பு ஒரு கடுமையான கண்டனம் ஆகும். #CPIM மத்தியக்குழு #NewsClick #PrabirPurkayastha #DelhiHighCourt #PressFreedom #Democracy #ModiGovtFailures
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ள பாஜக அரசு - பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா, கட்டுரை குறித்து தோழர் அ.அன்வர் உசேன், ஆசிரியர் குழு #Marxist #SocialismIsFuture #TamilMarxist More: https://marxist.cpimtn.org/#gsc.tab=0 More: https://youtube.com/shorts/Nmz1r39pnvk
மார்க்சிஸ்ட் தத்துவார்த்த ஜூன் மாத இதழில்... கம்யூனிஸ்டுகளும் தேர்தல் அரசியலும் - என். குணசேகரன், கட்டுரை குறித்து தோழர் அ.அன்வர் உசேன், ஆசிரியர் குழு #Marxist #SocialismIsFuture #TamilMarxist More: https://marxist.cpimtn.org/#gsc.tab=0 More:https://youtube.com/shorts/bSi4DdP3UDo
‘இந்தியா’ அணியின் ஒற்றுமையும் காங்கிரஸின் கடமையும்!
எதேச்சதிகார பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளையும், தேசத்தின் இறையாண்மையைச் சிதைக்கும் போக்கையும் வீழ்த்து வதற்காக உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ அணிச் சேர்க்கையின் ஒற்றுமையைக் காக்க வேண்டிய மிக முக்கியக் கடமை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால், தில்லியில் ஜூன் 8 அன்று நடைபெற்ற இந்தியா அணியின் தலைவர்கள் கூட்டத்தில் எழுந்துள்ள புயல், காங்கிரஸின் தற்போதைய செயல்பாடுகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டணியைப் பல வீனப்படுத்துகிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அண்மையில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே போன்ற காங்கிரஸின் தேசியத் தலைவர்கள் அப்பட்டமான அவ தூறுகளைப் பரப்பியது அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடாகும்.
நாடாளுமன்றத்தில் முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைவதற்கும், பாஜகவின் மதவாத அரசியலை நாடெங்கிலும் முறியடிப்பதற்கும் இடதுசாரிகள் தங்களின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டின் மூலம் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பை ராகுல் காந்தி வசதியாக மூடிமறைக்கக் கூடாது. இடது சாரிகளின் பாஜக எதிர்ப்புப் பாரம்பரியத்திற்கு யாரிடமிருந்தும் சான்றிதழ் தேவையில்லை. விழிஞ்ஞம் துறைமுக ஒப்பந்ததாரராக அதா னியை கேரளாவுக்குள் கொண்டு வந்தது காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என்ற வரலாற்று உண்மையை மறைத்து விட்டு, இடதுசாரிகள் மீது தொடர்ந்து பழிபோடுவதும் இந்தியா அணியின் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும்.
காங்கிரசின் அணுகுமுறை காரணமாக திமுக மற்றும் ஆம் ஆத்மி போன்ற வலுவான கட்சிகள் ஏற்கெனவே கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பது பெரும் பின்னடைவாக மாறியுள்ள சூழலில், அகிலேஷ் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் எழுப்பியுள்ள கேள்விகளும் மிகவும் ஆழமானவை. பீகாரில் காங்கிரஸ் தலை வர்களுக்கும் பாஜகவுக்கும் இடையே இருக்கும் ரகசியப் புரிந்துணர்வுகள் குறித்துப் புகார்கள் அளித்தும் தேசியத் தலைமை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்விக்குக் காங்கிரஸ் பதில் சொல்லியாக வேண்டும்.
மாநிலக் கட்சிகளின் பலத்தை ஒடுக்க நினைப்பது பாசிச எதிர்ப்புக் கூட்டணிக்கே ஆபத் தாய் முடியும். மோடி அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தி முடக்க முயலும் இக்கட்டான காலகட்டத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ‘இந்தியா’ அணி ஒரே இலக்குடன் பயணிப்பது மட்டுமே பாஜகவை வீழ்த்துவதற்கான ஒரே வழியாகும். எனவே, காங்கிரஸ் கட்சி தனது தற்காலிகத் தேர்தல் லாபங்களுக்கான குறுகிய அரசியலையும், மேலாதிக்கப் போக்கையும் கைவிட்டு, இந்தியா அணிக் கட்சிகளைச் சமமாக மதித்து, கூட்டணியின் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். #CPIM #INDIAAlliance #AntiBJP #CongressAccountability #RahulGandhi #MallikarjunKharge #LDF More: https://shorturl.at/L3fIj
நவஜவான் பாரத் சபாவும் புரட்சியாளர்களின் தத்துவார்த்த வளர்ச்சியும் ச. லெனின், கட்டுரை குறித்து தோழர் அ.அன்வர் உசேன், ஆசிரியர் குழு #Marxist #SocialismIsFuture #TamilMarxist More: https://marxist.cpimtn.org/#gsc.tab=0 More: https://youtu.be/Dh7DjBo-wfo
மார்க்சிஸ்ட் தத்துவார்த்த ஜூன் மாத இதழில்... எதிர்ப்புரட்சி வரலாற்றில் வேர் பிடித்த ஆர்.எஸ்.எஸ். - அசோக் தவாலே, கட்டுரை குறித்து தோழர் அ.அன்வர் உசேன், ஆசிரியர் குழு #Marxist #SocialismIsFuture #TamilMarxist More: https://marxist.cpimtn.org/#gsc.tab=0 More: https://youtube.com/shorts/wkJaAlfP2kw?feature=share
விலைவாசி உயர்வு - நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு - நூறுநாள் வேலைத் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை கைவிட வலியுறுத்தி சிபிஐ(எம்) ஜூன் 19 அன்று ஆர்ப்பாட்டம் ! More: https://l1nq.com/f3869bl
இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவு! சிபிஐ(எம்) இரங்கல் !! More: https://l1nq.com/506rp2l
குறிப்பு : இன்று (10.06.2026) குற்றாலத்தில் நடைபெற்ற கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் தத்துவார்த்த ஜூன் மாத இதழில்...
க்ளாரா ஜெட்கின் | மாக்ஸிம் கார்க்கி - பேரா. ஆர். சந்திரா, கட்டுரை குறித்து தோழர் அ.அன்வர் உசேன், ஆசிரியர் குழு #Marxist #SocialismIsFuture #TamilMarxist More: https://marxist.cpimtn.org/#gsc.tab=0 More: https://youtu.be/3DCkYrZsvDw
Вже доступно! Дослідження Telegram за 2025 — головні інсайти року 
