🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Open in Telegram
சித்தர்களின்.. ஒளிநிலை இறையாளர்களின்.. ஒரு ஊடகமாக..உள்ள ஜீவநாடி பற்றிய உண்மைகளையும், அனுபவ பலன்களையும்.. பகிரும் தளம்.
Show more1 815
Subscribers
-524 hours
-47 days
+230 days
Posts Archive
1 815
Repost from வாதம் ☯ வைத்தியம்
⚡"வேதசத்தி மருத்துவம்" ✨ முதல் நிலை @ மலேசியா
[✨2 நாள் வேதசத்தி வர்ம / வற்ம மருத்துவப் பயிற்சி✨]
https://www.facebook.com/reel/4400698256845818
💡 முனைவர். ந. சண்முகம் அவர்களால்
[வற்ம - நுட்ப ஆற்றல் ஆராச்சியாளர், தமிழ் பேராசிரியர்.]
கோவை 'திருமூலர் வேதசத்தி அகாடமி நிறுவனம்' மூலம்
வேதசத்தி எனும் 2 நாள் மருத்துவ "வர்மக்கலை பயிலரங்கம்"
@ மலேசியா செரம்பான்னில் உள்ள 'வேதாத்திரி
அறிவுத்திருக்கோவிலில்' நடைபெறவுள்ளது.
💡 நாள்: 22, 23- ஆகஸ்ட் 2026 [சனி & ஞாயிறு]
நேரம்: காலை 9.00 முதல் மாலை 6.00 வரை
💡 விரும்புவோர் அனைவரும்
கலந்து கொள்ளலாம்.
முன்பதிவு அவசியம் !
+60123423401
+60193105731
+60129253401
💡 பயிற்சி நடைபெறும் இடம்: மலேசியா
செரம்பான் -வேதாத்திரி அறிவுத்திருக்கோவில்
No: 4607, Jalan Pedas-linggi, 71400 Pedas,
Negeri Sembilan, Malaysia.
📍 Map location : https://maps.app.goo.gl/gb8SXS1UJ5Q6ZpZy9
💡 மருத்துவ வர்மம் பற்றிய சில காணொளிகள் >>
வேதசத்தி மருத்துவ வற்மக்கலை - அறிமுகம் காணொளி
https://www.youtube.com/watch?v=BwOlxb1h0Vc&t=278s
வேதசத்தி - வற்ம மருத்துவ அடிப்படைக் கொள்கை - வற்ம இயக்கம்
https://www.youtube.com/watch?v=50GGc_L1uFM
உயிர் வளர்த்தேன் - தமிழர்களின் நோய் காக்கும் முறைகள்
https://www.youtube.com/watch?v=d2I0glPJZrk&t=2650s
Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai @ News 7 Tamil Television
https://www.youtube.com/watch?v=bcsBVYx4DJw
https://www.youtube.com/watch?v=jj1IhOc7Uk8
https://www.youtube.com/watch?v=v04vyCf1wSs
https://www.youtube.com/watch?v=gGD6e-aPI1I
🙏🏻🌷🙏🏻
✨"Vedasakthi - Varmakkalai"✨
[✨2 days of Medical Varmam Workshop✨]
✨Date: 22, 23- August 2026
Time: 9.00 am to 6.00 pm
Medium of Instruction: Tamil
The Thirumoolar Vedasakthi Academy proudly presents "Vedasakthi,"
A Two-Day Medical Varmakkalai Workshop,
led by Dr. N. Shanmugam, Professor of Tamil.
The workshop will be held at the Vethathiri Arivuthirukovil
(Vethathiri Center of Consciousness) in Negeri Sembilan, Malaysia.
Everyone who wishes can participate.
Reservation required!
💡 For Registration Contacts for malaysia workshop:
Mr. Arumugam - 0123423401
Mr. Subramaniam - 0193105731
Ms. Chitra - 0129253401
💡 Training Venue: Malaysia
Seremban Arivuthirukovil
(Vethathiri Center of Consciousness)
No: 4607, Jalan Pedas-linggi, 71400 Pedas,
Negeri Sembilan, Malaysia.
📍 Map location : https://maps.app.goo.gl/gb8SXS1UJ5Q6ZpZy9
💡 for more info : Dr. N. Shunmugom , PhD - Tamil
www.varmam.org/workshops/
https://www.youtube.com/@ThirumoolarVarmalogyInstitute
https://www.facebook.com/nshunmugom
1 815
Repost from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
🔥🙏🦚 நாளை குருபூஜை திங்கட்கிழமை ஆகஸ்ட் 15 சுவாமி சிவானந்த பரமஹம்சர் அப்பாவுடைய திருக்கரங்களால் சமாதி வைக்க பட்டவர் பிரம்ம ஸ்ரீ மகான் சாமய்யா சுவாமிகள் 🙏
⭐ பல ஆற்றல்களையும் சக்திகளும் தாங்கியுள்ள ஜீவ பீடம் 🙏
🌹 நமது வாழ்வில் கர்மவினையின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ள சாமையா ஜீவ ஐக்கிய நிலையம் செல்வோம் 🙏
👍 இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார் நமது சாமய்ய சுவாமிகள் 🙏
💥 சித்தர்கள் ஜீவசமாதி வாழிபாடு செய்வேம் 🙏
இடம்
பன்னிமடை கோவை
https://goo.gl/maps/4i94eYahyaHQdXEV9
🦚🙏
1 815
Repost from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
தர்ப்பண கிரியா !!
https://youtu.be/hjZKs7RxNTk?si=IBSr6ns6uSl0YUhS
5
நிமிடத்தில்..
மக்களுக்கு தேவையான
அரிய தகவல்கள் !!
~கருவூரான் ராஜன் - சிங்கப்பூர்.
Youtube Video by..
சிவா வின் "பாப்கார்ன்" நிகழ்ச்சி
Popcorn Talks or Talk Show
[பத்திரிகையாளர் – சிவராமன்]
https://www.youtube.com/@sivaspopcorn
1 815
வரும் புதன் (12.08.2026) ஆடி அமாவாசையை முன்னிட்டு, 18 சித்தர்கள் இன்றும் அரூபமாக நடமாடும், புனித மலையான *சதுரகிரியில்* மகாலிங்க கடவுளை நோக்கி மலையேற்றம் செய்ய உள்ளோம்...
*தேனி* வருசநாட்டு உப்புத்துறை வழியாக மலையேறி, *விருதுநகர்* தாணிப்பாறையை தொட்டு பின் சுந்தர, சந்தான மகாலிங்க தரிசனத்திற்கு பிறகு குளிராட்டி அருவி வழியாக *மதுரை* சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாக மலையிறங்க போகிறோம்...மூன்று மாவட்டத்தின் மலைப்பாதையும் ஆடி அமாவாசைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்...
*மலையேற்ற தன்மை: கடினம் (22 கி.மீ)*
ஒருங்கிணையும் இடம் - மதுரை இரயில்வே நிலையம், விடிகாலை 4 மணி..
சேரும் இடம்- மதுரை இரயில்வே நிலையம், இரவு 10 மணி.
மேலும் தொடர்புக்கு,
Trekking Pannalama - join our Whatsapp group
(Together Self Trekking Group)
+91 8124866178
கூட்டுச் சுய மலையேற்றக் குழு -
ட்ரெக்கிங் பண்ணலாமா
WhatsApp #:
https://wa.me/918124866178
1 815
Repost from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*
*"ஜாதி என்பது இல்லவே இல்லை"*
*ஆகஸ்ட் 7*
1 815
Repost from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
🪵🕊️ *சோர்வும்- இலக்கும்*🕊️🪵
இரு பறவைகள் தரும் ..
*வாழ்வியல் -ஞானம்*🔆
*ஒரு மகான்* மரத்தடியில் அமர்ந்திருந்தார். *ஒரு பறவை* அவரிடம் சென்று பட்சி பாஷையில் பேசியது.
*‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.
அவரும் பட்சி பாஷையிலேயே
*‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?* முயற்சிப்பதில் தவறில்லை. *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.* பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் மகான்.
*தலையசைத்து விட்டு பறந்தது பறவை*. பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* மகான்.
‘சீடனே! *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் மகான்.
ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
*‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.
*‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* மகான்.
பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.
*‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.
மகான் சிறிது யோசித்தார்.. *கீழே கிடந்த ஒரு தடிமனான குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார்.
*‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் மகான்.
*பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.* இரண்டு மாதங்களுக்குப் பிறகு மகானிடம் வந்தன.
*‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.
*‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் மகான். . . . . . . பறவை பேசியது.
*‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.* ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*
மகானை பார்த்தான் சீடன். மகான் பேசினார்.
*‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.* அதற்குக் காரணம் *‘துணை'.* ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*. இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது. *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.* ஆனால்,
*அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*. பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது. *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. காடு-மலை தேடி தங்கி* திரியவேண்டியதில்லை.
‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கும் அறிவோடு.. கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த மகான்*.
குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*. இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை தான் மட்டுமே நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை சுமந்து வழி நடத்தி துணையாக செல்கிறது.*
அவ்வாழ்வின்
நல்முறையே
*வீடு பேறு* எனும்
*முக்திக்கு*/ மோட்சத்திற்கு
எளிமையான
*கருவி* யாகிறது.
*இதுவே இல்லறம்* எனும் எளிய
*வாழ்வியலின் ரகசியம்*..!!
🌷நன்றிகள்🙏
பிரம்மஸ்ரீ.
★ ௧ருவூரான் ★
www.t.me/truthsofsivayoga
1 815
தெய்வ வாக்காக எண்ணுவதில்லை. !!
சித்தர் ஜீவநாடி வாக்குகளை !!
ஜீவநாடி நாடி பார்க்க வரும் பெரும்பாலானவர்களுக்கு
"அகத்தியர் அருள்வாக்கு" இது என்று எண்ணுவதில்லை.
ஒரு சாதாரண ஜோதிடரிடம் ஜோதிடம் பார்ப்பதுபோல்
பார்த்து விட்டுச் செல்கிறார்கள்.
தெய்வ வாக்காக - "சித்தர் வாக்காக" எண்ணுவதில்லை.
இப்படிப்பட்ட மனிதர்களை அகத்தியர்
முன் கூட்டியே அடையாளம் கண்டு கொண்டு
அவர்களது அவ நம்பிக்கைக்கு ஏற்றவாறே பதில் சொல்லிவிடுகிறார்.
ஏனெனில் அவர்கள் முழு நம்பிக்கையோடு பிரார்த்தனை அல்லது
பரிகாரங்களை செய்வது இல்லை.
இதைப் பற்றி அகத்தியரும் கண்டு கொள்வதில்லை.
பின்னர் எதுவும் நடக்கவில்லை என்று
சொல்பவர்களுக்கு வேறு இடம் நோக்கிச் செல்க
என்று பட்டவர்த்தனமாக சொல்லி விடுகிறார்.
இதனால் எந்த நஷ்டமும் அகத்தியருக்கு இல்லை.
சித்தர்கள் நம்முடன் எப்போதும் இருக்கிறார்கள்.
நம்மை சுற்றி நின்று நாம் செய்வதை பார்த்துக் கொண்டு
நாம் வழுகும் காலங்களில், கை தூக்கி விட்டுக்கொண்டு..
நாம் தான் உணருவதில்லை,
ஏன் என்றால் நடப்பதை உன்னிப்பாக கவனிப்பதில்லை.
திட நம்பிக்கையை மனதில் விதைத்து வளரவிட்டால்
அவர்கள் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.
நந்தி ஜீவநாடி -
KARUR - NERUR.
SWAMI. SIDHA GURUJI
+91 8903504996
https://siththarkaldesam.blogspot.com/
&
"அகத்திய சித்தரை நம்பு,
அவர் கொடுப்பார் தெம்பு"
https://www.facebook.com/swaminathan.gopalan.96/
அகத்தியர் ஜீவநாடி -
PONDICHERRY.
SWAMINATHAN GOPALAN
+91 9894269986
1 815
Repost from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
*எல்லாம் அவனருளால் தான்..!*
*நீங்கள் இறைவனைப்பற்றி நினைப்பதுண்டா?*
மனிதன், தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டோ, யோசித்துக் கொண்டோ தான் இருக்கிறான்.
ஆனால், கடவுளைப் பற்றி நினைக்கத்தான் நேரமில்லை என்கிறான்.
என்ன சார், இன்னிக்கு பிரதோஷமாச்சே... கோவிலுக்குப் போகலையா... என்று கேட்டால்,
அப்படியா... இன்னிக்கு பிரதோஷமா... எங்கே சார் நேரமிருக்கு... இங்கேயே வேலை சரியா இருக்கு...
என்று பதில் சொல்லி, டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார்.
ஆனால், பகவானோ, என்னை வழிபடு, என்னை தியானம் செய்.
என் கோவிலுக்கு வா... என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை.
அவனவனுக்கு என்ன பிராப்தமோ அதன்படி நடக்கட்டும் என்று விட்டு விடுகிறார்.
நான் உன்னை விடமாட்டேன்... என்று, எந்த பக்தன் அவரை பிடித்துக் கொள்கிறானோ, அவனை கை விடாமல் காப்பாற்றுகிறார்.
நாம் ஒவ்வொரு நாளும், எவ்வளவோ விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறோம்.
நேரப்படி எத்தனையோ காரியங்களை செய்கிறோம்.
ஞாபகமாக காலை, 6:00 மணிக்கு காபி சாப்பிடுகிறோம்.
பிறகு டிபன் 9:00 மணியானதும் அலுவலகத்துக்குப் போக வேண்டும்.
எதற்காக? சம்பளம் பெற்று குடும்பத்தைக் காப்பாற்ற. வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால், வைத்தியரிடம் ஓடுகிறோம்.
அவர் கொடுக்கும் மருந்தை வாங்கி வந்து, நேரம் தவறாமல் கொடுக்கிறோம். அப்போது, அலுவலகம் போவதை முக்கியமாக கொள்வதில்லை.
நோயாளியை குணப்படுத்துவதே முக்கியமாக கருதுகிறோம். இதுவரையில் அலுவலகம் முக்கியம். இப்போது வீட்டில் உள்ளோர் முக்கியம்.
இவைகளை தவிர, வேறு பல வேலைகளும் உள்ளது. அதற்காக நேரங்களை ஒதுக்கி, அவைகளை கவனிக்கிறோம். அன்றைய பொழுது போய் விடுகிறது; இரவும் வந்து விடுகிறது.
அப்பாடா...இன்னிக்கு ஒரே அலைச்சல்... களைப்பாயிருக்கிறது... என்று சொல்லி, சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்று விடுகிறோம்.
இவ்வளவு நேரம் செலவிட்ட போதும், இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வைத்து கொண்ட போதும், கடவுள் ஞாபகம் மட்டும் வருவதில்லை; அதற்கான நேரமும் கிடைப்பதில்லை.
ஒருவன், ஒரு ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. ஞாபகமாக, 10 நாள் முந்தியே டிக்கெட் ரிசர்வ் செய்து, அதை பத்திரமாக வைத்துக் கொள்கிறான்.
என்ன தேதி, எந்த ரயில், எத்தனை மணிக்கு என்பதையும், ரயிலுக்குப் புறப்படும் முன், என்னென்ன பொருள், துணிமணிகள், எவ்வளவு பணம் எடுத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே எடுத்து வைத்து, தயார் செய்து கொள்கிறான்.
சரியான நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷனை அடைவதிலேயே. கவனம் முழுவதும் இருக்கிறது. ஆனால், சிறிது நேரமாவது கடவுளை நினைக்கவோ, அதற்கு நேரம் ஒதுக்கவோ முடியவில்லை. ஸ்டேஷனுக்குப் போகும் வழியில், ஒரு கோவில் இருந்தால் கூட, உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்ய நேரமில்லை என்று, வாசலிலிருந்தே ஒரு கையால் அவசர கும்பிடு போட்டு விட்டுப் போகிறான்.
இந்த உலகில் நாம் பிறந்து, நல்ல நிலைமைக்கு வந்து சுகமாக இருப்பதே, அவனருளால் தான் என்பதே மறந்து விடுகிறது!
உலக வாழ்க்கை என்பது எவ்வளவு நாட்கள் என்பது நிச்சயமில்லை. எப்படி எல்லாமோ நாட்களை கழிக்கிறோம்.
நமக்கு என்று ஒரு நற்கதியை தேடிக்கொள்ள வேண்டாமா?
இது எப்படி கிடைக்கும்? கடவுள் ஞாபகமும், கடவுள் வழிபாடும் இருந்தால் தான் கிடைக்கும்.
ஈசனை நினைக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்..
ஓம் நமச்சிவாய..
