en
Feedback
தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

Open in Telegram

┏━━━━•❅•°--°•❅•━━━━┓ வாழ்க வளமுடன் ┗━━━━•❅•°--°•❅•━━━━┛ எண்ணங்களை மேம்படுத்துங்கள்... வாழ்க்கை அழகாகிவிடும்..! #tamilponmozhigal #lifetamilponmozhigal #tamilponmozhigallyrics #tamilponmozhigaltext #positivetamilponmozhigal #tamilproverbs

Show more
1 663
Subscribers
+224 hours
+127 days
+1130 days
Posts Archive
காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல... அப்படி சிரிக்க பழகிக் கொண்டால்... எந்த காயமும் அவ்வளவு பெரியதல்ல!!!

நிராசையாகிப் போனாலும் பரவாயில்லை, எப்போதும் உயர்ந்த இலக்குகளைக் குறி வையுங்கள்... ஒருநாள் உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை மாறும்.. நம்பிக்கையுடன் இருப்வர்களுக்குப் பாதையும் தெரியும்.... பயணமும் புரியும்....

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட... அதிக புரிதல் இருப்பதே சிறந்தது...

நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு அவர்களின் சாயலை நீ அடைவாய் ... - பர்ரோஸ் -

தேவைப்படும்போது அறிவையும், தேவையற்ற போது மௌனத்தையும், சமநிலையில் பயன்படுத்த தெரிந்தால்... வாழ்க்கையில் எதையும் தேட வேண்டிய அவசியம் இருக்காது..!

நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும் உன் நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்...!!! அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி...!!!

ஏதேனும் எதிர்பார்த்து கொடுக்கப்படும் அன்பு அன்பல்ல. அது வியாபாரம்!

பணம் எல்லாவற்றையும் வாங்கித் தராது... ஆனால்; பணம் இல்லாத போது எவ்வளவு விஷயங்கள் நம்மை விட்டு விலகுது என்பதை வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும். அதனால்தான்... பணத்தை தேடுவதில் தவறில்லை, ஆனால் பணத்திற்காக நம்மை இழந்துவிடக் கூடாது.

அனைத்து சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க உங்களை பழக்கப்படுத்துங்கள்... இதுவே நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் நல்ல தூண்டுதல் ஆகும்❤️

நீங்கள் மெய்யாகவே ஈடுபாடு கொள்ளும் ஒரு செயலில் ஈடுபட்டால், உங்களை யாரும் உந்தித் தள்ளத் தேவையில்லை. உங்கள் குறிக்கோளே உங்களை ஈர்த்துச் செல்லும். -ஸ்டீவ் ஜாப்ஸ்

மக்களை முட்டாளாக்குவது எளிது. ஆனால்,அவர்கள் முட்டாளக்கப்பட்டார்கள் என்று புரிய வைப்பது மிகவும் கடினமானது. ✍🏻 ஓஷோ

இணைந்திருணக்கள் https://t.me/audio_book_tamil - 1000 தமிழ ஒலி புத்தகங்களின் தொகுப்பு

உங்களை கீழே தள்ளிவிடுவதில் அடுத்தவர் வலிமையானவர் என்று நிரூபித்தால்... கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் வலிமையானவர் என நிரூபியுங்கள்...

உனது பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி சற்றே விலக்கி வை... ஓய்வெடு.. நிதானமாக யோசி... பின் செயல்படு எல்லாம் சுபமாக முடியும்.

காலம் இறந்துவிடுகிறது; ஆனால், அது மனிதனின் செயல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

கொடுப்பது நல்ல விஷயம்தான். நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம், யாருக்கும் கொடுக்கலாம். ஆனால் தற்பெருமைக்காகக் கொடுப்பதற்கும், மனத்தின் மகிழ்ச்சிக்காகக் கொடுப்பதற்கும் வேறுபாடு உண்டு.