தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal
Ir al canal en Telegram
┏━━━━•❅•°--°•❅•━━━━┓ வாழ்க வளமுடன் ┗━━━━•❅•°--°•❅•━━━━┛ எண்ணங்களை மேம்படுத்துங்கள்... வாழ்க்கை அழகாகிவிடும்..! #tamilponmozhigal #lifetamilponmozhigal #tamilponmozhigallyrics #tamilponmozhigaltext #positivetamilponmozhigal #tamilproverbs
Mostrar más1 661
Suscriptores
-224 horas
-17 días
+1430 días
Archivo de publicaciones
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
Napoleon Hill.
ஒருவனுடைய வெற்றிக்கு முன்னால் வேண்டுமானால் பரிசும் பாராட்டும் இருக்கலாம் ஆனால் அவனுக்கு பின்னால் நாங்கள் தான் இருக்கிறோம் அவமானம் நிராகரிப்பு தோல்வி.
நிம்மதியாக வாழ ரெண்டே வழி தான்
ஒண்ணு நம்ம ராஜாவா இருக்கனும்
இல்லன்னா யார் ராஜாவா இருந்தா
நமக்கென்னன்னு வாழனும்.
தேவைக்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம்?
சோத்துக்கும் சொத்துக்கும் உள்ள வித்தியாசம் தான்.
மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதையே நீங்கள் மற்றவர்களுக்கு செய்யுங்கள்.
- புத்தர்.
எல்லாம் விட்டுப்போன பின்பு தான்
அன்று கொஞ்சம் விட்டுக்கொடுத்து இருக்கலாமே
என்று பல சமயங்களில் தோன்றும்!!!
வாழப் பொருள் வேண்டும்,
வாழ்வதிலும்பொருள் வேண்டும்..
உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிட்ட விரும்பினால், விடாமுயற்சியை உங்கள் இதய நண்பனாக்குங்கள்.
கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது.
~ஆஸ்கார் வைல்ட்
சிலரை மறந்து விடுங்கள்...
சிலரை மன்னித்து விடுங்கள்..
சிலரை கடந்து விடுங்கள் சிலரை வெறுத்து விடுங்கள்...
எவரையும் தூக்கி சுமக்காதீர்கள் உங்கள்
வாழ்க்கை சுமையாகிவிடும்.
ஒருவர் கோபத்தில் பேசும்போது கவனமாக கேளுங்கள்..
ஏன் என்றால் அது அவர்கள் உண்மை சொல்லும் நேரம்..!
எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ, அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று புதியவற்றைத் தேடத் தொடங்குங்கள். அதுவே உங்களை வெற்றியாளராக உருவாக்கும்!
~வால்ட் டிஸ்னி
பிரச்னைக்கு இரண்டே காரணம் தான்!
யோசிக்காமல் செயல் படுவது!
செயல்படாமல் யோசித்துக் கொண்டே இருப்பது!
காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல...
அப்படி சிரிக்க பழகிக் கொண்டால்...
எந்த காயமும் அவ்வளவு பெரியதல்ல!!!
நிராசையாகிப் போனாலும் பரவாயில்லை, எப்போதும் உயர்ந்த இலக்குகளைக் குறி வையுங்கள்...
ஒருநாள் உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை மாறும்..
நம்பிக்கையுடன் இருப்வர்களுக்குப் பாதையும் தெரியும்....
பயணமும் புரியும்....
ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட...
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது...
நல்ல மனிதர்களோடு
நட்பு வைத்திரு
அவர்களின் சாயலை
நீ அடைவாய் ...
- பர்ரோஸ் -
தேவைப்படும்போது அறிவையும்,
தேவையற்ற போது மௌனத்தையும்,
சமநிலையில் பயன்படுத்த தெரிந்தால்...
வாழ்க்கையில் எதையும் தேட வேண்டிய
அவசியம் இருக்காது..!
