cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

வணக்கம் நண்பர்களே நமது சமையல் குறிப்பு சேனலில் Best YouTube Cooking & Review சேனல் வீடியோ பதிவுகள் தினமும் அப்லோடு செய்யப்படும் 🔰சைவ&அசைவ சமையல் 🔰ஆரோக்கியமான சமையல் 🔰நோயை குணப்படுத்தும் சமையல் 🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

Більше
Рекламні дописи
724
Підписники
Немає даних24 години
+77 днів
+3130 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

கேரளா ஃபேமஸ் பழம் பொரி... தேவையான பொருட்கள்: மைதா - 1/2 கிலோநேந்திரம் பழம் - 5சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்மஞ்சள்தூள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுதேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை: பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.• மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். • பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்து, கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள். சுவையான பழம்பொரி தயார்.
Показати все...
மட்டன் தக்காளி கூட்டு.ரெசிபி. தேவையான பொருட்கள்: மட்டன் - 1/4 கிலோ அவித்தது சின்ன வெங்காயம் - 10 நறுக்கிய வெங்காயம் பெரிய வெங்காயம் - நறுக்கியது தக்காளி - 3 பொடியாக நறுக்கியது குழம்புப் பொடி - 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிது காஷ்மீர் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் கறிமசால் தூள் - 1 டீஸ்பூன் செய்முறை: 1. வாணலியில் 11/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் இட்டு நன்கு வதக்கவும். 2. வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளிகளை தேவையான அளவு உப்புச் சேர்த்து பேஸ்ட் ஆகும் வரை வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். 3. வெங்காயம் தக்காளி வதங்கியதும் கறி அவித்த தண்ணீர் அதில் ஊற்றி குழம்புப் பொடி மிளகாய் தூள் மற்றும் கறிமசால் சேர்த்து கலந்து விடவும். 4. இப்போது அவித்த மட்டனைச் சேர்த்து கிரேவி பதம் வரும் வரையில் லொப்பிளேமில் கொதிக்கவிடவும் . 5. கிரேவி பதம் வந்ததும் கருவேப்பிலை கொத்தமல்லி இழைகளைத் தூவி இறக்க தாராஸ் கிச்சன் ஸ்டைலில் சுவையான மட்டன் தக்காளி கூட்டு ரெடி .
Показати все...
உளுந்தங்களியின் பயன்கள்! வயதிற்கு வந்த இளம் பெண்பிள்ளைகளுக்கு கர்ப்பப்பை வலுப்பெரும். கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் பி மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. உளுந்து நார்ச்சத்து அதிகம் கொண்டதாகும். உளுந்து களி சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. உளுந்துகளியை சாப்பிடுவதால் வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை சேர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது. உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும். சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் இருக்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற செய்யும். உளுந்து அபரிமிதமான இரும்பு சத்தை கொண்டது. உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது உளுந்து களியை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். எளிதில் சோர்வடையாமல் நீண்ட நேரம்திறனை கொடுக்கும். உளுந்து களியை தினந்தோறும் இருவேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு தசைகள் நன்கு வலிமையடையும். செயலாற்றும்.
Показати все...
👍 2
பாய் வீட்டு நெய் சோறு. தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி - 2 டம்ளர் பெரிய வெங்காயம் - 2 சின்ன தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் புதினா ,மல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு சமையல் எண்ணெய் - 3 ஸ்பூன் நெய் - 2 ஸ்பூன் முந்திரிப் பருப்பு - 5 பட்டை - இரண்டு துண்டு ஏலக்காய் - 2 கிராம்பு - 2 பிரிஞ்சி இலை - 2 சோம்பு - கால் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி கொள்ளவும். தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் ஊற்றி சூடானவுடன் பட்ட ,சோம்பு, கிராம்பு ஏலக்காய் ,பிரிஞ்சி இலை போட்டு தாளித்து அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுத்து விட்டு நறுக்கிய வெங்காயம் , பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும் . வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி ,பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். பின்பு அதனுடன் தக்காளி ,புதினா ,கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும் இரண்டு டம்ளர் அரிசிக்கு அதே டம்ளரில் மூன்றரை {3 1/2 } டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்க்கவும். தண்ணீரில் உப்பு பார்த்துவிட்டு குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைக்கவும். பின்பு 10 நிமிடம் கழித்து திறந்து கிளறினால் மிகவும் சுவையான கம கமன்னு மணக்கிற பாய் வீட்டு நெய் சோறு ரெடி. இந்த சாதத்திற்கு மட்டன் கிரேவி அல்லது சிக்கன் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
Показати все...
👍 1
இளநீர் பிரியாணி செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – ஒரு கப் நெய் – இரண்டு டேபிள்ஸ்பூன் முந்திரி – இரண்டு டேபிள்ஸ்பூன் திராட்சை – இரண்டு டேபிள்ஸ்பூன் இளநீர் – ஒரு கப் இளநீர் வழுக்கை (ஒன்றிரண்டாக அரைத்தது) – ஒரு கப் மில்க்மெய்ட் – கால் கப் உப்பு – ஒரு சிட்டிகை செய்முறை: பாசுமதி அரிசியை பதினைந்து நிமிடம் ஊறவிடவும். முந்திரி, திராட்சை நெய்யில் வறுக்கவும். குக்காரில் அரிசியை சேர்த்து இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட் ஆகியவற்றை ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
Показати все...
இளம் வயது மாரடைப்பு: தவிர்ப்பது எப்படி? அனைவரது வேலையில் அழுத்தம் இருக்கதான் செய்கிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி இந்த மூன்று விஷயங்களிலும் நேரத்தை செலவிட வேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இதற்கு நாம் நேரம் செலவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை உடலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் கட்டாயம் அவசியம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக தைராய்டு, BP, கொலஸ்ட்ரால், சர்க்கரை, உடல் எடை, ஈசிஜி, எக்கோ, திரெட்மில் ஆகிய அடிப்படை பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது அவசியம்.இந்த பரிசோதனைகளை செய்வதன் மூலம் உடலில் ஏதாவது பிரச்சனை உள்ளதா? மாரடைப்பு வருவதற்க வாய்ப்பு உள்ளதா? முன் குடும்பத்தில் யாருக்காவது சிறு வயதில் மாரடைப்பு வந்துள்ளதா? புகைபிடித்தல் பழக்கம், மது அருந்து பழக்கம் போன்ற பழக்கங்கள் உள்ளதா? இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.யாருக்கு அபாயகரமான அறிகுறிகள் உள்ளதோ அவர்களில் நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.உணவு, உறக்கம், உடற்பயிற்சி எல்லாம் நாம் மருத்துவர்களிடம் சென்ற பிறகே ஒழுங்கு படுத்த முயற்சிக்கோம். ஆனால் இந்த பழக்கம் எல்லாம் குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளிகளில் கற்றுதர வேண்டும். பள்ளிகளில் உணவு பற்றிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு பற்றி ஆலோசனைகளை குழந்தை பருவத்தில் இருந்தே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ குழந்தைகளில் ஆழ்மனத்தில் பதிய வைக்க வேண்டும்.இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு உடல் எடை, உணவு முறை போன்ற பிரச்சனைகள் இருந்த உடல் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரை அணுகுவது நல்லது. தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்து நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். முக்கியம் பயம் என்பது அனைவருக்கும் வருவது உண்டு. சின்ன படபடப்பு இருந்தால் உடனே அது கார்டியாக் இருக்குமோ என்ற பயம் அனைவரும் வந்து விடுகிறது. நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.சரியான உடற்பயிற்சியும், உணவு பழக்கமும் மாரடைப்பு தடுக்க வாய்ப்புள்ளது.
Показати все...
ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிடலாம்? ஒரு நாளைக்கு உண்ணக்கூடிய சர்க்கரையின் அளவு என்பது நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளின் அளவு மற்றும் நமது செயல்பாடுகளை பொறுத்தது.பொதுவாக முடிந்தவரை அதிகமான சர்க்கரைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கவில்லை. அதிக சர்க்கரை சாப்பிடுவது தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும். இது கூடுதல் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் கலோரிகளை வழங்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு வளர்சிதை மாற்றத்தை சேதப்படுத்தும். பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் இருந்து இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் மற்றும் சர்க்கரைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பது மிகவும் முக்கியம்.பழங்கள், காய்கறிகளில் நீர், நார்ச்சத்து மற்றும் பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் முற்றிலும் நல்லது, ஆனால் சேர்க்கப்பட்ட சர்க்கரைக்கு இது பொருந்தாது.மிட்டாய்களில் சர்க்கரை முக்கிய மூலப்பொருளாகும். குளிர்பானங்கள், வேகவைத்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்களில் சர்க்கரை உள்ளது. ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நாம் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளில் வெறும் 10% மட்டும் தான் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கிறது.மேலும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளில் இயற்கை சர்க்கரையும் அடங்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக உங்கள் ஓட்ஸ் மீலில் தேனை சேர்த்தால், ஓட்ஸ் மீலில் இயற்கையான மூலத்திலிருந்து சேர்க்கப்பட்ட சர்க்கரை உள்ளது.பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவுகளில் உள்ள இயற்கை சர்க்கரையை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, இதய நோய், சில புற்றுநோய்கள், பல் சிதைவு, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA)படி, ஒரு நாளில் உண்ண வேண்டிய அதிகபட்ச சர்க்கரை அளவு:ஆண்கள்: ஒரு நாளைக்கு 150 கலோரிகள் (37.5 கிராம் அல்லது 9 டீஸ்பூன்)பெண்கள்: ஒரு நாளைக்கு 100 கலோரிகள் (25 கிராம் அல்லது 6 டீஸ்பூன்)நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால், மேற்கூறிய அளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இந்த சிறிய அளவிலான சர்க்கரையை எரித்துவிடலாம்.இருப்பினும் உணவில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Показати все...
ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் பிரச்சனையா? சமையல் எண்ணெய் விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரும் சமையலுக்கு குறைந்த கலோரி எண்ணெயை பயன்படுத்துகின்றனர். அந்தவகையில், மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்து மோகம் அதிகரித்துள்ளது.குறிப்பாக, ஆலிவ் எண்ணெய் சாலட் டிரஸ்ஸிங்கிற்கு பயன்படுத்தப்பட்டது. ஆலிவ் எண்ணெய் நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நிபுணர்களின் கூற்றுப்படி, சமையலுக்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில், நாம் ஆலிவ் எண்ணெயை சூடாக்கும் போது, அது ஸ்மோக் பாயின்ட்டை விட சூடாகும். இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் கலவைகள் தீப்பொறிகளாக உடைகின்றன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களாக மாறி நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க ஆரம்பிக்கின்றன.இந்த தீவிர கலவைகள் உடலில் உள்ள டிஎன்ஏ, லிப்பிடுகள் மற்றும் புரதங்களுடன் வினைபுரியத் தொடங்குகின்றன. இதனால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருக்கலாம். இதன் காரணமாக, அழற்சி நோய்கள், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
Показати все...
குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க... பொதுவாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை, அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து குறைவாகவே காணப்படுகிறது. எனவே குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்து, வயதிற்கேற்ற உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்கவேண்டும்.எல்லா குழந்தைகளும் விளையாட்டுத்தனமாகதான் இருக்கும், எனவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை, அவர்களுடன் விளையாடிக்கொண்டே ஊட்ட முயற்சிப்பது மிக சிறந்த வழியாகும். குறைந்தது 1 மணி நேரமாவது உணவு தர செலவிடவேண்டும்.எதை விரும்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்து, அவர்களுடன் குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பது சற்று கடினமான விஷயம் என்றாலும், விடாமுயற்சியால் அவற்றை இலகுவாக்க முயற்சிக்கவேண்டும். தற்போது உணவிலும் ரசாயன கலவை இருப்பதால், எதிர்பார்க்கும் அளவிற்கு ஊட்டச்சத்துள்ள பொருட்கள் நமக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க எவ்வகையான உணவு கொடுக்கலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.வால்நட் பொதுவாக குழந்தைகளுக்கு மூளை செயல்பாடு எப்போதும் சுறுசுறுப்பாக தான் இருக்கும்.சில முக்கியமான உணவுகள் மூளையின் போதுமான வளர்ச்சிக்கு மேலும் உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த வகையான உணவுகள் சேர்த்துக்கொள்ளுங்கள். யதேர்ச்சையாக மூளையைப் போன்றே தோற்றமளிக்கும் வால்நட் மூளை வளர்ச்சிக்கும் உகந்ததாக உள்ளது. நுங்கு சாப்பிடுவது மார்பகத்திற்கு நல்லது என்ற சித்த மருத்துவர் கருத்து மாதிரி இல்லை இது. பல முன்னணி ஆங்கில இதழ்களில் வெளியான தகவல்தான் வால்நட்டின் நன்மைகள். வால்நட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு மூளை அல்சைமர் நோய்களைத் வராமல் தடுக்கிறது. தினமும் 3-5 வால்நட் கொடுத்தாலே போதுமானது.பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமை காலை அல்லது மாலையில் கொடுக்கலாம், இரவில் கொடுக்கக்கூடாது இரவில் கொடுப்பது செரிமான கோளாறு ஏற்படலாம்.தினமும் 5 முதல் 10 பாதாம் வரை கொடுக்கவேண்டும்,அதிக அளவு வயிற்றுப்போக்கு உண்டாக்கும்.முட்டை இதில் ஒமேகா 3 கொலஸ்ட்ரால் அமிலங்கள் மற்றும் கொலின் ஊட்டச்சத்து உள்ளது,தினமும் ஒரு 1 வேகவைத்த முட்டையை கொடுங்கள், 1 அல்லது 2 முட்டை கொடுக்கலாம், குழந்தைகள் ஆக்டிவ்வாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும்,மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் மீன் வைட்டமின் டி மற்றும் பி12 கால்சியம், பாஸ்பர் நிறைந்துள்ளன, எனவே இது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு நல்லது மற்றும் நினைவக சக்தியை அதிகரிக்கிறது.எந்த வகையான மீனாக இருந்தாலும் கொடுக்கலாம்,ஆனால் முள் அதிக அளவு உள்ள மீனை கட்லெட்,புட்டு போன்ற ஸ்னாக்ஸ் முறையில் கொடுத்தால்,குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் வாரம் இருமுறை மீன் கொடுக்கலாம், இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தி மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது,அதில் கால்சியம், புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன, இவை அனைத்தும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நல்ல ஞாபக சக்தியை அளிக்கிறது,பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வரும்.
Показати все...
நெத்திலி கருவாடு குழம்பு செய்முறை: தேவையான பொருட்கள்: நெத்திலி கருவாடு – 200 கிராம் கத்தரிக்காய் – 1/4 கிலோ முருங்கைக்காய் – 2 பச்சை மிளகாய் – 2 தக்காளி – 2 (நறுக்கியது) புளி – 1 எலுமிச்சை அளவு வெந்தயம் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு மசாலா அரைப்பதற்கு: சின்ன வெங்காயம் – 1 கையளவு மல்லித் தூள் – 50 கிராம் சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2 (காய்ந்த மிளகாய்) கறிவேப்பிலை – சிறிது பூண்டு – 4 பற்கள் துருவிய தேங்காய் – 1/4 கப். செய்முறை: முதலில் கருவாட்டை வெந்நீரில் ஊறவைத்து சில நேரங்கள் கழித்து கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்பு கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். புளியை ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, ஊறியதும் புளியை கரைத்து வைத்து கொள்ளவும். ஒரு மண்சட்டியை எடுத்து கொள்ளவும் அவற்றை அடுப்பில் வைத்து மண்சட்டியில் சூடேறியதும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் காய்ந்தமிளகாயை வறுத்து, பின்பு அதனுடன் சின்ன வெங்காயம், மல்லித் தூள், சீரகம், பூண்டு, மிளகு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை வதக்கி ஆறியதும் அதனுடன் தேங்காவை சேர்த்து மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும். அம்மியில் அரைத்தால் குழம்பு சுவையாகவும், மிகவும் வாசனையாகவும் இருக்கும். பின்பு மற்றொரு மண்சட்டியை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்பு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அவற்றில் கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் அவற்றில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில நேரம் கொதிக்க விடவும். பின்பு கரைத்து வைத்துள்ள புளிச்சாறை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். புளிசாறானது நன்கு கொதித்ததும், அதில் நெத்திலி கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும். அம்புட்டுதான் சுவையான நெத்திலி கருவாடு குழம்பு ரெடி.
Показати все...
Оберіть інший тариф

На вашому тарифі доступна аналітика тільки для 5 каналів. Щоб отримати більше — оберіть інший тариф.