இயற்கை மருத்துவம்
Open in Telegram
New Update : 2020 iyarkaimaruthuvam Chat Link : @chat786_bot
Show more1 887
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
1 887
சூதக வலிக்கு கைகண்டது
கரும்சீரகம் கழற்ச்சிபருப்பு திரிகடுகு இந்துப்பு காந்தம் வெள்ளுள்ளி சீரகம் ஓமம் காயம் நேர்வாளம் வகைக்கு துலாம் 1 எடுத்து அரைத்து பசுவின் நெய்யில் போட்டு வெந்து குழம்பானால் இறக்கி வைத்து கொண்டு சூதகம் கண்ட 3 நாள் 3 பொழுது கொடுக்க நன்று அதில் தீரவில்லை எனில் *மறு சூதகத்தில் கொடுக்கவும் கைகண்டது*
குறிப்பு :-
அளவுகளை சரி பார்த்து கொள்ளவும்
சரக்குகளை சுத்தி செய்யவும்
ஓலைசுவடி முறை
1 887
பிராண முத்திரை.
ஆக்ஸிஜனை பிராண வாயு என்பார்கள். நாம் உயிர் வாழ இந்த
ஆக்ஸிஜன் அவசியம். ஒருவர் இறந்து விட்டால் பிராணன் போய்
விட்டது என்பார்கள். அதனால்தான் ஆக்ஸிஜனை, பிராண வாயு என்று
சொல்கிறோம். ஒருவர் இறக்கும் தருவாயில் படும் அவஸ்தையை
பிராண அவஸ்தை என்பார்கள். எனவே, பிராணன் என்பது வாயு
அல்லது காற்று என்று கொள்ளலாம்.
நமது உடலில் ஐந்து விதமான வாயுக்கள் இருப்பதாக பாரம்பரிய
வைத்திய முறைகள் சொல்கின்றன. அவை: பிராணன், அபானன்,
சமானள், உதானன், வியானன் என்பதாகும். இந்த ஐந்து வாயுக்களும்
நல்ல முறையில் இயங்க வேண்டும். அவ்வாறு இயங்கினால்
மட்டுமே உடலின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இந்த ஐந்தில் முக்கியமான வாயு ‘பிராணன்' என்ற வாயு. இந்த
வாயுவை வளர்த்துக்கொள்ளவும், சக்தி உள்ளதாகச் செய்யவும் உதவும்
முத்திரையே பிராண முத்திரை.
செய்முறை
பெரு விரல் நுனியை, சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகளைத்
தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இரு விரல்களான
ஆள்காட்டி விரலும் நடு விரலும் நேராக இருக்க வேண்டும்.
பிராண முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து செய்ய வேண்டும்.
முதுகை வளைக்காமல் நேராக அமர வேண்டும். இதனால், பிராணன்மேல் நோக்கி எழ முடியும். நேராக அமர முடியாதவர்கள் நேராகப்
படுத்துக்கொண்டு செய்யலாம்.
நேர அளவு
கால நேரமின்றி எவ்வளவு நேரமும் செய்யலாம். இருப்பினும்
தினமும் தொடர்ந்து 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். சிரமமாக
இருந்தால், முதலில் 15 நிமிடங்கள் செய்து படிப்படியாக அதிகரித்துக்
கொண்டு போகலாம். நேரம் இல்லாதவர்கள், 45 நிமிடங்களை மூன்று
பகுதிகளாகப் பிரித்து காலை, மதியம், இரவு நேரங்களில் செய்யலாம்.
பெரு விரல் - நெருப்பு, மோதிர விரல் - நிலம், கண்டு விரல் - நீர்.
இந்த மூன்று பூதங்களின் சேர்க்கையால் உடலில் உள்ள அசுத்தங்கள்
அகன்று, மனம் தூய்மையாகி, பிராணன் புதிதாக உருவாகும்.
பலன்கள்
1. உடல் வலுவாகும்.
2. ரத்தக் குழாய் அடைப்புகள் சரியாகும்.
3. உற்சாகம் உண்டாகும்.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5. கண் பார்வை குணமாகும். கண் சம்பந்தமான நோய்கள் குறையும்.
6. களைப்பு நீங்கும்.
7. நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
8, பக்கவாத நோய்கள் குணமாகும்.
9. நினைவாற்றல் அதிகரிக்கும்.
10. சுவாச உறுப்புகள் உறுதியாகும். சுவாசம் சீரடையும். ஆஸ்துமா
நோய் குணமாகும்.
1 887
ஓமத்தி நீர்
1) ஓமம் ஒரு ஸ்பூன்
2) சீரகம் ஒரு ஸ்பூன்
🔹 இரண்டையும் அரை லிட்டர் தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து குறைந்த வெப்பநிலையில் கால் லிட்டர் ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.
🔹 பின்னர், சூடு ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது எவர்சில்வர் பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம்.
🔹 குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் கொடுக்கலாம்
🔹 பெரியவர்களுக்கு 2 ஸ்பூன் கொடுக்கலாம்
🔸 அஜீரண கோளாறு, தூக்கமின்மை, கேஸ் ட்ரபுள், செரிமான கோளாறு, வயிற்று வலி, தலைவலி, அல்சர், வாயு தொந்தரவு ஆகியவை குணமாகும்.
🔺 இது ஒரு சர்வ ரோக நிவாரணி எனவே அனைத்து வியாதிகளுக்கும் பயன்படுத்தலாம்.
🔺 இதை பயன்படுத்துவதற்கு வயதுவரம்பு கிடையாது.
◾️ இதை 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
◽️ அனைவர் வீட்டிலும் எப்பொழுதுமே இருக்க வேண்டிய ஒரு அருமையான, அற்புதமான, எளிமையான, சிறப்பான மருந்து.
▫️மேலும் 2030 வரை வரும் பல வைரஸ்களுக்கு ( கொராணா, புராணா, ஓமைகிரான், ஓமைகாட், மார்பர்க், மந்தைவேலிபர்க் ) இது மருந்தாக செயல்படும்.
▫️பயன்படுத்துங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.
1 887
சிசேரியன் தையல் வலி நீக்கும் ஓமியோபதி மருந்து.
சிசேரியன் அல்லது வயிறு ஆப்ரேஷன் செய்யப்பட்ட நபர்களுக்கு தையல் போட்ட இடத்தில் வருடக்கணக்கில் வலி இருக்கும். Staphysagira -1M என்ற ஹோமியோபதி மருந்து ஒரு டோஸ் சாப்பிட முழு நிவாரணம் கிடைக்கும்.
அருகில் உள்ள ஹோமியோபதி மருந்து கடையில் ( Staphysagira -1M ) கிடைக்கும்.
எச்சரிக்கை : இந்த மருந்து ஹெவி டோஸ். எனவே அருகில் உள்ள ஹோமியோபதி மருத்துவரை ஆலோசனை பெற்று மட்டும் சாப்பிட வேண்டும்.
1 887
சிறுநீர் கழிப்பதில் கஷ்டம் நீங்க ஹோமியோபதி மருந்து.
திருமணமான புதிதில் சில பெண்களுக்கு சிறுநீர் கழிப்பதில் கஷ்டம் ஏற்பட்டு டாக்டர்இடம் சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து இருப்பார்கள் இதற்கு Staphysagira - 1000 என்ற ஹோமியோபதி மருந்து ஒரே ஒரு டோஸ் சாப்பிட்டால் முழு குணம் கிடைக்கும்.
அருகில் உள்ள ஹோமியோபதி மருந்து கடையில் ( Staphysagira - 1000 ) கிடைக்கும்.
எச்சரிக்கை : இந்த மருந்து ஹெவி டோஸ். எனவே அருகில் உள்ள ஹோமியோபதி மருத்துவரை ஆலோசனை பெற்று மட்டும் சாப்பிட வேண்டும்.
1 887
சத்து குறைபாடு ஏன் ஏற்படுகிறது?
சத்து குறைபாடு எதனால் உருவாகுகின்றது என்பதைப் பற்றி பார்ப்போம் உடலுக்கு இணக்கமில்லாத உணவுகள், நச்சு மருந்துகள் .
முதலில் நமது உடலறிவை அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் சாப்பிடும் உணவுகளில் எல்லா சத்துகளும் நிறைந்து இருக்கிறது.
நாம் உண்ட உணவு செரித்த பின், நமக்கு தேவையான சத்துகளை அதிலிருந்து உடல் உருவாக்கிக் கொள்கிறது.
பசியின்றி சாப்பிடுவது,
நச்சு மருந்துகள் ,
இவைகளால் கழிவுகள் உருவாகிறது.
கழிவுகள் தேங்கினால் உடலின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுகிறது . அதனால் உடலின் பணிகளில் சோர்வு ஏற்படுகிறது.
உடல் செய்கின்ற வேலையை வெளியே இருந்து என்ன கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது.
1 887
தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாத “ஒமிக்ரொன்” – கதவை மூடுகிறது
உருமாற்றம் வைரஸ் கிருமி அடைந்து கொண்டேதான் இருக்கும்
எப்படி உருமாற்றம் அடைந்தாலும்
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி
எப்படிப்பட்ட கிருமியாக அதை எதிர்க்கும் உத்திகளை வடிமையமைத்து எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அழித்து விட்டு
நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க முயற்சி செய்கிறோம்.
இயற்கை எதிராக இந்த உடலை செயல்படுத்த முடியாது.
இயற்கை மருத்துவர்கள், இயற்கை அனுசரித்து வாழும் உயிரினங்கள் அனைத்தும் எந்த கிருமிகளும் ஒன்று செய்ய முடியாது.
உடல் இயற்கை என்ற இயந்திரம் அதை சரி செய்ய இந்த உடலுக்கு தெரியாத இரகசியம் இல்லை.
ஒரு நாள் இயற்கை எதிராக நடக்கும் அனைத்தும் சதிகளும் காணப்போய்விடும்.
புதுசு புதுசு கண்டுப்பிடிங்கள்
ஆனால் இயற்கை எதிராக இருக்கும் எந்த கண்டுப்பிடிப்பும் பலன்யளிக்காது.
இயற்கையாக வாழகூடியவர்களையாவது விட்டுவிடுங்கள்.
நாங்கள் இயற்கையோடு ஒன்றினைந்து வாழ்கிறோம்.
எங்களுக்கு
தடுப்பூசி தேவையில்லை
இரசாயன நச்சு மருந்துகள் தேவையில்லை
கார்ப்பரேட் புட் தேவையில்லை
ஆரோக்கியம் இயற்கையாக வாழும் வாழ்க்கையில் இருக்கிறது.
இயற்கை தத்தவங்களோடு இணைந்து வாழ்வோம்.
ரீமா அக்குபங்சர்
1 887
வயிற்று வலியா?
"""""”"""""""""""""""""""""""""
வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.
வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்.
ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி?
இதோ சிம்பிள் டிரிக்.
வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.
அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.
அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.
1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.
2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் - அல்சர்.
3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.
4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் - ஃபூட் பாய்சன்.
5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,
6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,
7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.
இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்பிரச்சனைக்கு திர்வு
காணுங்கள்....
இந்த பதிவை சேமித்து வைத்து கொள்ளவும்...
