தினம் ஒரு விவசாய புத்தகம்
Open in Telegram
இங்கு விவசாய சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கும்
Show more2 099
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
கோழி, செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு.
*திட்டம் குறித்து*:
பாரத பிரதமரின் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குவது.
*திட்டத்தின் சிறப்பம்சம்*
● இத்திட்டத்தின் கீழ், 1000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை மானியம்.
● ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.
● பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் + 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
● தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகப்பிற்காக ஓராண்டில் 2,000 - 2400 மெட்ரிக் டன் வைக்கோல் / ஊறுகாய் புல் / ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம் / தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
*திட்டம் பெற தகுதி உடையவர்கள்*
● தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவர்.
● முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும்.
● தொழில்முனைவோர் /தகுதியுள்ள நிறுவனங்கள் இத்திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும், திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற்றிருக்க வேண்டும்.
*திட்டம் பெறும் முறை*
https://nim.udyamimitra.in/ இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு, கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும்.
பின்னர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும்.
பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் இரு தவணைகளில் வழங்கப்படும்.
மேலும் விவரங்கள்: அறிய அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் ( அ ) கால்நடை பல்கலைக்கழக அலுவலர்கள் ( அ ) தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலர்கள்
*திட்டம் குறித்து மேலும் தகவல்களுக்கு*
Link 01:
https://nlm.udyamimitra.in/
Link 02:
Tamil Nadu Livestock Development Agency (TNLDA):
http://www.tenders.tn.gov.in/innerpage.asp?choice=tc5&tid=tnl202901&work=1
நன்றி,
மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு, mallesan 9566855152
