பொது மின் நூலகம்
Open in Telegram
இந்த Telegram சேனலில் புதிய / பழைய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் 📚 pdf வடிவில் கிடைக்கும். புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதே இந்த சேனலின் நோக்கம். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
Show more767
Subscribers
No data24 hours
No data7 days
+130 days
Posts Archive
Unconditional Life: Discovering the Power to Fulfill Your Dreams
Author(s): Deepak Chopra, M.D.
Publisher: Random House Publishing Group
Year: 2011
ISBN: 9780307799197
Unconditional Life: Discovering the Power to Fulfill Your Dreams
Author(s): Deepak Chopra, M.D.
Publisher: Random House Publishing Group
Year: 2011
ISBN: 9780307799197
Description:
Deepak Chopra, M.D., has emerged as one of the most powerful leaders in the revolutionary field of mind/body medicine. His extraordinary bestseller Quantum Healing explored the mind's connection to seemingly miraculous cures for cancer and other serious illnesses. Now, in Unconditional Life, he undertakes an even greater challenge: to explain how consciousness can lead the way to total freedom and perfect health. Unconditional Life brings together disciplines ranging from modern physics and neuroscience to the ancient traditions of Indian wisdom to show how our perceptions create our reality for good or ill—and how the outside world can be shaped by altering the world within. In a book filled with hope and inspiration, Dr. Chopra offers compelling proof of the power of consciousness and a daring new vision of our own unlimited potential.
ரத்தம், யூரியா, நைட்ரஜன் ஆகியவற்றின் அளவு ஹெரால்டு என்பவரின் உடலில் 90 விழுக்காடு இருந்தபோதும், எப்படி அவர் நாற்பது ஆண்டுகளாக ஒரு மருந்து மாத்திரையும் எடுத்துக்கொள்ளாமல் சந்தோஷமாக, டாக்டர்களால் எச்சரிக்கப்பட்ட பிரச்னைகளில் ஒன்றுகூட வராமல் ஆரோக்கியமாக இருந்தார்? டாக்டர் தீபக் சோப்ரா தனது Unconditional Life என்ற நூலில் விவரிக்கிறார்.
Unconditional Life: Discovering the Power to Fulfill Your Dreams
Author(s): Deepak Chopra, M.D.
Publisher: Random House Publishing Group
மனம் எனும் மாய தேவதை (ஒரு மனோதத்துவ சுய முன்னேற்ற நூல்)
நூலாசிரியர் : ரா.பிரபு
மொழி : தமிழ்
நூல் வகை : மனநலம், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, சுயமுன்னேற்றம், மனோதத்துவம்,
வருடம் : 2017
இந்த புத்தகத்தை இணையத்தளத்தில் படிக்க விரும்பினால் இந்த முகவரிக்குச் செல்லுங்கள் https://reghahealthcare.blogspot.com/2024/06/blog-post_09.html
மனம் எனும் மாய தேவதை (ஒரு மனோதத்துவ சுய முன்னேற்ற நூல்)
நூலாசிரியர் : ரா.பிரபு
மொழி : தமிழ்
நூல் வகை : மனநலம், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, சுயமுன்னேற்றம், மனோதத்துவம்,
வருடம் : 2017
குறிப்பு :
மனம் எனும் மாய தேவதை குறித்து உலகளவில் நம் நாட்டினர் போல ஆழமாக அலசிய அறிஞர்கள் உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லை.
மு. வரதராசனார் எழுதிய "நலவாழ்வு" என்ற புத்தகம் தொடங்கி சுகி சிவம் அவர்களின் மனசே நீ ஒரு மந்திர சாவி வரை, எம். எஸ். உதயமூர்த்தி அவர்கள் எழுதிய தன்னம்பிக்கை நூல்கள் முதல் விவேக்கானதர் புத்தகங்கள் வரை, கீதையில் கண்ணன் முதல் ஓஷோவின் புத்தகங்கள் வரை இந்த மனம் எனும் மாய தேவதை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்கள்.
அப்படி படித்த பல புத்தகங்களில் இருந்த நல்ல கருத்துகளைத்தான் நான் இந்த தொடரில் எனது பாணியில் பகிர்ந்து உள்ளேன். மனம் எனும் மாய தேவதையை காதலிக்க வேண்டும் என்றால் அப்புத்தகங்களை தேடி படித்து பாருங்கள் நிறைய தெளிவுகள் கிடைக்கும்.
உங்கள் அனைவருக்கும் மனம் எனும் மாய தேவதை வசமாகி வளமான மனமும் வாழ்க்கையும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
இந்த புத்தகத்திலிருந்து சில வரிகள்...
* உங்களிடம் ஒரு கருவி உள்ளது அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்... என்று வைத்து கொள்ளுங்கள். அந்த கருவி பற்றி அது செயல்படும் விதம் பற்றி தெரிந்து வைத்து கொண்டால் அதை இன்னும் சிறப்பாக நீங்கள் செயல்படுத்த முடியும் அல்லவா... இந்த உண்மை மனதிற்கும் பொருந்தும்.
* முழு மக்கா சோளத்தில் ஒரே ஒரு கடி கடித்து தூக்கி போடுவது போல மூளையில் ஒரு குறிபிட்ட பகுதி பயன்பாட்டோடு நிறுத்தி கொள்கிறோம். பயன் படுத்தாத பொருட்கள் கால போக்கில் மங்கி போகும் என்பது இயற்கை விதி. அப்படி மூளையை பல இடங்களில் சரியாக பயன்படுத்தாமல் விட்டதன் விளைவு இன்று மிருகங்களின் உணர்வு நிலையை விட நாம் நிறைய பின் தங்கி விட்டோம்.
* பயன் படுத்தாமல் விட்ட மூளை என்ன ஆகும் என்று சோதிக்க நீங்கள் பெரிதாக பரிணாம கோட்பாடு எல்லாம் படிக்கத் தேவையில்லை. இன்று கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட முயற்சி செய்து பார்த்தால் போதும். ஒரு 10... 20 ஆண்டுகளுக்கு முன் நாம் போட்ட மன கணக்கு இன்று ஏன் சாத்தியப்படவில்லை என்று புரியும்.
* தியானம் என்பதை பற்றி ஒரு அடிப்படை விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பொருள் அல்லது கருத்து மீது கவனத்தை குவிப்பது "Meditation" அல்ல. அது "Concentration''. எதையோ ஒன்றை பற்றியே சிந்திப்பது தியானம் அல்ல அது "Thinking". தியானம் என்பது செயல் அல்ல அது ஒரு நிலை. ஏதும் செய்யாது அனைத்தையும் உள்வாங்கும் விழிப்பு நிலை.
* தேம்ஸ் நதிக்கரையில் இளைஞர்கள் சிலர் ஆற்றில் மிதந்து வரும் முட்டை ஓட்டை சுடும் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களை உற்று கவனித்த விவேகானந்தர் அவர்களிடம் துப்பாக்கி கேட்டு வாங்கி அதை சுட்டு பார்த்தார். ஒரு குறி கூட தவறாமல் அனைத்தையும் அடித்ததை பார்த்த இளைஞர்கள், "எத்தனை வருட பயிற்சி அய்யா" என்று கேட்டார்கள். "நான் துப்பாக்கி பிடிப்பது இதான் முதல் தடவை" என்றார் விவேகானந்தர். அதெப்படி சாத்தியம் என்று திகைத்து போய் கேட்டவர்க்கு "இது ஒன்னும் அற்புதம் அல்ல மனதை ஒருங்கிணைக்க கற்று கொண்டால் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம்" என்றார்.
* உங்களை கோபப்படுத்தும் அல்லது எரிச்சலூட்டும் மனிதர்கள் அல்லது வெளி சூழ்நிலைகளுக்கு மறுமொழி ஆற்றாதீர்கள். காரணம் உங்கள் மறுமொழி இல்லாமல் அவைகள் சக்தி அற்றவைகள். அவைகளுக்கு சக்தி கொடுபதே நீங்கள் தான். நாம் நமக்குள் இருந்து செயலாற்றாத வரை வெளி சூழ்நிலைகள் நம்மை எந்த வகையிலும் மாற்றவோ பாதிக்கவோ முடியாது என்பது மிக பெரிய உண்மை.
* இயற்கை தனது கொடையை ஒரு மழை போல எப்போதும் நம்மீது பொழிந்து கொண்டே தான் இருக்கிறது. அதை உள்வாங்க நமது பாத்திரத்தை நாம் கவிழ்த்து வைத்து இருக்கிறோமா அல்லது திறந்து வைத்து இருக்கிறோமா என்பது தான் இங்கு கேள்வி.
* வாழ்க்கையில் ஒரு விஷயத்தை வேலையாக பார்க்காமல் விளையாட்டாக அல்லது சவாலாக பார்க்கும் மனநிலையை நம்மால் ஏற்படுத்தி கொள்ள முடியுமென்றால் வேதனையான விஷயங்கள் கூட ஆனந்தமான விளையாட்டாக மாறிப் போகும். இந்த எளிய உண்மை தான் மனோபாவம். மனோபாவத்தை மாற்றுவதன் மூலம் நம்மை சுற்றி உள்ள சூழலின் தன்மையை மாற்ற முடியும். இந்த உலகத்தையே மாற்ற முடியும். உலகின் பெரிய பெரிய செயல்களை செய்தவர்களை அந்த செயலை செய்வித்தது அவர்களின் மனோபாவம் தான்.
* தொடர்ந்து நாம் யோசிக்கும் ஒரு எண்ணம் தான் செயல் ஆகிறது. தொடர்ந்து செய்யும் செயல் தான் பழக்கம் ஆகிறது. தொடர்ந்து செய்யும் பழக்கம் தான் ஒருவன் குணாதிசயமாகிறது. தொடர்ந்து இருக்கும் குணாதிசயம் தான் அவனை சுற்றி உள்ள சூழ்நிலையை உண்டாக்குகிறது .அவன் விதியை எழுதி அவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.
மனம் எனும் மாய தேவதை (ஒரு மனோதத்துவ சுய முன்னேற்ற நூல்)
நூலாசிரியர் : ரா.பிரபு
மொழி : தமிழ்
நூல் வகை : மனநலம், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, சுயமுன்னேற்றம், மனோதத்துவம்,
வருடம் : 2017
இனிது இனிது வாழ்தல் இனிது (கணவனும் மனைவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி!)
நூலாசிரியர் : பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
மொழி : தமிழ்
பக்கம் : 522
வருடம் : 2016
குறிப்பு : புதுமணத் தம்பதிகள் மட்டுமல்ல... திருமணத்துக்குத் தயாராகும் இளைஞர்கள் முதல் இல்லறத்தை நல்லறமாக்க விரும்பும் சீனியர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் படிக்க வேண்டிய வாழ்வியல் வழிகாட்டியே இந்நூல்.
இனிது இனிது வாழ்தல் இனிது (கணவனும் மனைவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி!)
நூலாசிரியர் : பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
மொழி : தமிழ்
பக்கம் : 522
வருடம் : 2016
நூல் வகை : கட்டுரைகள்
குறிப்பு:
காதல் மணமோ, நிச்சயிக்கப்பட்ட மணமோ - அன்பின் ஈர்ப்பு குறையாமலே, வாழ்வின் அடுத்தடுத்த அத்தியாயங்களை கடந்து செல்வதே அழகு. அதற்குத்தான் எத்தனை இடையூறுகள்? இந்த அவசர யுகத்தில் பொருள் தேடல் காரணமாக அன்புக்கு அளிக்கப்படுவது இரண்டாம் இடம்தானே? அன்பு குறைகையில் வம்பு மிகுவது வாடிக்கை. அவசியம் செய்ய வேண்டிய நல்ல விவாதங்கள் கூட வார்த்தைகளின் தடிப்பால் சச்சரவாக மாறும் சூழல் இப்போது அதிகம். சிறுதொடுதலில் பூக்கும் மலர்களை மறந்து, பெரும் சொற்களில் பிரிதலை விரும்பி வரவேற்பது தகுமா?
‘நீ, நான், நம் குழந்தைகள்’ என்கிற இனிய இல்லறத்திலும், நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டியவை ஏராளம் உண்டு. கூட்டுக்குடும்ப முறை அருகிவிட்ட நகரமயமாதலில் இல்லறத்துக்கும் வழிகாட்டல் அவசியமாகிறது. புதுமணத் தம்பதிகள் மட்டுமல்ல... திருமணத்துக்குத் தயாராகும் இளைஞர்கள் முதல் இல்லறத்தை நல்லறமாக்க விரும்பும் சீனியர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் படிக்க வேண்டிய வாழ்வியல் வழிகாட்டியே இந்நூல்.
இந்த புத்தகத்திலிருந்து சில வரிகள்...
மனைவியை தனக்கு இணையாக நடத்துகிற திறமை பெரும்பாலான ஆண்களுக்கு இல்லை என்பதே உண்மை. அதை ஆண்களுக்கு அழகாகப் புரிய வைக்க வேண்டிய திறமை பெண்களுக்கும் இருப்பதில்லை. இதனால் இரண்டு தரப்பிலும் ஈகோ... சண்டை... சச்சரவு!
கணவன்-மனைவி சண்டைகளுக்கு முக்கிய காரணமே எதையும் வேண்டுகோளாகக் கேட்காமல் கட்டளையாகச் சொல்வதுதான். அதைத் தவிர்த்து, பணிவான அணுகுமுறையைக் கையாள வேண்டியது முக்கியம்.
பேசும் போது துணையின் மீது பழியைப் போடும் வகையில், அதாவது, ‘நீ இப்படிப் பண்ணினதுதான் பிரச்னைக்குக் காரணம்’ என்று பேசாமல், ‘நான் இப்படி ஃபீல் பண்றேன்...’ என உங்களை பிரதானப்படுத்தி உரையாடலைத் தொடங்குங்கள்.
கணவன்-மனைவி இருவரும் தங்கள் மனதில் உள்ளவற்றை சொல்வதில் பிரச்னை இல்லை. சொல்லும் முறையில்தான் பிரச்னை. ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ்வதைவிட, பிரிவதே மேல் என யோசிக்க வைக்கும். நெகட்டிவ் சூழலை உருவாக்கியதில் நமது பங்கு என்ன என்று பார்த்து, அதை மாற்ற இருவரும் முயற்சிக்க வேண்டும்.
பிரச்னைகள் இல்லாத தாம்பத்திய வாழ்க்கையை விரும்பினால் இருவரில் ஒருவர் மாற நினைத்தாலே போதும். அடுத்தவர் மாறவேண்டும் என எதிர்பார்க்காமல், நாம் மாறுவோமே என சுய மாற்றத்துக்குத் தயாரானாலே இருவரின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய அதிசயங்கள் நிகழும்.
‘உனக்கு ஒண்ணும் தெரியாது. நீ எதுக்கும் லாயக்கில்லை’ என்று மனைவியை எப்போதும் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள் சில கணவர்கள். இதைக் கேட்டுக்கேட்டுப் பழகும் மனைவிக்கு ஒரு கட்டத்தில் தான் உண்மையிலேயே அப்படித்தான் என்கிற எண்ணம் வந்துவிடும். தான் உபயோகமற்றவர் என்றே நம்ப ஆரம்பித்துவிடுவார்.
சின்னச் சின்ன விட்டுக் கொடுத்தல்கள் இருவரது வாழ்க்கையையும் அழகாக்கும் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.
‘நீ இப்படி நடந்து கொள்’ எனச் சொல்வதற்குப் பதில் ‘நான் எப்படி நடந்து கொள்கிறேன்’ எனக் காட்டுவதே மாற்றத்துக்கான முதல் படி.
இனிது இனிது வாழ்தல் இனிது (கணவனும் மனைவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி!)
நூலாசிரியர் : பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்
'முடியும் முடியும்' என்றே சிந்தியுங்கள்!
குறிப்பு:
கல்கண்டு வார இதழில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள்.
இந்த நூலில் ‘முடியும் முடியும்’ என்று சிந்தித்து வெற்றிபெற 75க்கும் மேற்பட்ட சாதனையாளர்களின் வெற்றி இரகசியங்களும், குணநலன்களும் தரப்பட்டுள்ளன.
'முடியும் முடியும்' என்றே சிந்தியுங்கள்!
நூல் வகை : தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம்
குறிப்பு:
கல்கண்டு வார இதழில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள்.
இந்த நூலில் ‘முடியும் முடியும்’ என்று சிந்தித்து வெற்றிபெற 75க்கும் மேற்பட்ட சாதனையாளர்களின் வெற்றி இரகசியங்களும், குணநலன்களும் தரப்பட்டுள்ளன.
சாதனையாளர்களை அடையாளம் காட்டுவதுடன் ஒவ்வொருவரும் தங்களின் உறுதியான நல்ல எண்ணங்களை நிஜத்தில் நிறைவேற்றிக் கொள்ள 27 வகையான பயிற்சி முறைகளும் தரப்பட்டுள்ளன. இவற்றுள் மனச் சித்திரமாக எழுதும் முறை, மூச்சைக் கவனிக்கும் பயிற்சி, மனஆற்றலை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி, விடாமுயற்சிக்காரராக வாழ எளிய வழி, ஆழ்மனதை ஆற்றலுடன் செயல்பட வைக்க என ஐந்து பயிற்சிகளை மட்டுமாவது தினமும் செய்து வந்தால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக, செயல் நிறைந்த நாளாக, நமக்கும் அமையும். இந்தப் பயிற்சிகள் நேரடியாக நமது மனத்தை வளப்படுத்தி எல்லாத் தடைகளையும் சமாளித்து வெற்றி பெற தேவையான சக்தியையும் தொடர்ந்து வழங்கும்.
பிரச்சினைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அமைதியால் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் சரியான வழியைக் கண்டுபிடித்து விடலாம்.
உங்கள் மன உறுதியைக் குறைக்கும் நண்பர்களையும் பிற சக்திகளையும் உங்கள் இதயத்துக்குள் அனுமதிக்காதீர்கள். எப்போதும் நல்லதை மட்டுமே எண்ணி, அதை மட்டுமே செய்வது என்பதில் உறுதியாக இருங்கள். சில பிரச்சினைகளுக்கு நாம் அமைதியாக இருந்து காரியங்களைச் செய்து கொண்டே இருந்தால் போதும். அந்தப் பிரச்சினை தானாகயே விலகிவிடும்.
ஏற்கனயே நம்மால் ஜெயிக்க முடியாத பிரச்சினைகளுக்குக் கூட நமது வெற்றிகள்தான் ஜெயிக்க வைக்கும். புதிய வெற்றிகள் பழைய தோய்விகளையும் வெற்றிகரமாக்க புதிய வழிகளை காண்பித்தருளும். எனவே, மன உறுதியுடன் காரியங்களைச் செய்பவராக உங்களை நீங்களே முயற்சி செய்து உயர்த்திக் கொள்ளுங்கள். காரியங்களைத் தொடர்ந்து செய்யும் மன உறுதியிலிருந்துதான் ஒவ்வொரு மனிதனும் நீதிநெறியிலும் நியாய உணர்விலும் பக்குவப்பட்ட மாபெரும் மனிதனாக உயர்கிறான்.
'முடியும் முடியும்' என்றே சிந்தியுங்கள்!
நூலாசிரியர் : கே.எஸ்.சுப்ரமணி
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
மொழி : தமிழ்
பக்கம் : 120
வருடம் : 2011
நூல் வகை : தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம்
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : எதிர் வெளியீடு
நூல் வகை : மருத்துவ அரசியல், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2017
குறிப்பு:
இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்.
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : எதிர் வெளியீடு
நூல் வகை : உடல் நலம், மருத்துவ அரசியல், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2017
குறிப்பு:
இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்.
மருத்துவ ஆய்வுக்கூடங்கள் ஆங்கில மருத்துவத்தின் அடிப்படை அஸ்திவாரம். அதுமட்டுமல்லாமல், அறிவியல் பூர்வமானவை என்று நம்பப்பட்டு வருபவை. ஆங்கில மருத்துவத்தின் நோயறிதல் முறைகள் இவை என்ற காலம் போய், எல்லா மருத்துவங்களுக்கான பொது நோயறிதல் முறைகளாக ஆய்வுக்கூடங்கள் கருதப்படுகின்றன. மரபுவழி மருத்துவங்களின் தனித்தன்மையான நாடி பரிசோதனை போன்ற தொன்மையான கலைகளின் அழிவிற்கும் அடிகோலியவை இந்த ஆய்வுக்கூடங்கள். அறிவியல் கருவிகளான மைக்ரோஸ்கோப், கலோரி மீட்டர், செண்ட்ரிபியூஜ், ஆட்டோ அனலைசர், கம்ப்யூட்டர் போன்றவை பயன்படுத்தப்படுவதால் மருத்துவ ஆய்வுக்கூடங்கள் விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடங்கள் அளவிற்கு மரியாதை செய்யப்படுகின்றன. ஆய்வுக்கூடங்கள் குறித்த விமர்சனங்களை எழுப்பும் நபர் அறிவியலுக்கு எதிரானவராக மாற்றப்படக்கூடும் என்பதால் இவ்வகை விமர்சனங்கள் முழுமையாக எழவில்லை.
வாருங்கள்... மருத்துவ ஆய்வுக்கூடங்களில் அப்படி என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : எதிர் வெளியீடு
குறிப்பு:
இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்.
உங்கள் லேப் ரிப்போர்ட் பொய் சொல்லலாம்!
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : மருத்துவ அரசியல், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2015
குறிப்பு:
இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்.
மனிதர்கள் நோயாளிகளா, இல்லையா என்று ‘சோதித்து’ சான்று கொடுக்கும் மருத்துவ ஆய்வுக்கூடங்களை (லேப் - டய்க்னோஸ்டிக் சென்டர்) தொடங்க பெரிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஏதும் கிடையாது. யார் வேண்டுமானாலும் ஒரு லேபரட்டரியை தொடங்கிவிட முடியும். அவர் படித்தவரா, இல்லையா என்றுகூட யாரும் கேட்கமாட்டார்கள். அதேபோல, மருத்துவக் கவுன்சிலின் அனுமதி இல்லாமலேயே யார் வேண்டுமானாலும் சார்பு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கலாம். இந்த ஆய்வுக்கூடங்களுக்கு இந்திய அளவில் மதிப்பீட்டுச் சான்று வழங்குவது நேஷனல் அக்ரெடிஷன் போர்ட் ஃபார் டெஸ்டிங் அண்ட் காலிப்ரேஷன் லேபரட்டரீஸ் அமைப்பு மட்டுமே. ஆனால், இதில் அனுமதிபெற வேண்டும் என்பது ஆய்வுக்கூடங்களுக்கு கட்டாயமல்ல. மொத்தத்தில் ஆய்வுக் கூடங்களைக் கண்காணிப்பதற்கென்று எந்த ஒரு அமைப்பும் இல்லை.
உங்கள் லேப் ரிப்போர்ட் பொய் சொல்லலாம்!
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : உடல் நலம், மருத்துவ அரசியல், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2015
உங்களுக்கு நீங்களே டாக்டர்!
நூலாசிரியர் : டாக்டர் எம்.என்.சங்கர்
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
மொழி : தமிழ்
பக்கங்கள் : 107
உங்களுக்கு நீங்களே டாக்டர்!
நூலாசிரியர் : டாக்டர் எம்.என்.சங்கர்
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
மொழி : தமிழ்
பக்கங்கள் : 107
குறிப்பு:
லேசாக தலை வலித்தாலே ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் ஓடி, ஸ்கேன் எடுத்து, இன்னும் பல சோதனைகளைக் கடந்து தலை வலியைக் கூட்டிக் கொள்கிற புதிய தலைமுறை நோயாளிகளின் காலம் இது. ஆனால் இந்த மண்ணில்தான் மகத்தான மருத்துவப் பாரம்பரியம் இருந்தது. சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி என பல மருத்துவ முறைகளும் இங்கு இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வந்த நவீன மருத்துவம், இவை அனைத்தையும் அசுரத்தனமாக கபளீகரம் செய்துவிட்டது. ‘எங்கோ வெளிநாட்டில் இருந்து வந்தது மட்டுமே நல்ல விஷயம்’ என மாறாத நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், நமது பாரம்பரியத்தை அலட்சியப்படுத்தி விட்டோம். இன்றைக்கு நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகள் தாங்காமல் பலரும் பாரம்பரியத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘அக்குபிரஷர்’.
சீனாவிலிருந்து வந்த மருத்துவ முறை என இதை நினைத்துக் கொண்டிருக்கிற தமிழ் மக்களுக்கு, ‘இதுவும் நம் மண்ணிலிருந்து அங்கு போனதுதான்’ என்ற வரலாற்றைச் சொல்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர். புகழ்பெற்ற சித்தரான போகர் உருவாக்கிய ‘பொன்னூசி சிகிச்சை’ முறையே ‘அக்குபஞ்சர்’. அதில் ஊசிகளுக்கு பதிலாக விரல்களைப் பயன்படுத்துவதுதான் ‘அக்குபிரஷர்’. அந்த சிகிச்சை முறைகள் பற்றியே இந்த நூல் விவரிக்கிறது.
‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் பகுதி, பிறகு நூல் வடிவம் பெற்றது.
* கட்டை விரல் தவிர்த்து, இரண்டு கை விரல் நகங்களையும் தினமும் காலையும் இரவிலும் 10 நிமிடங்கள் உரசச் செய்தால் முடி உதிர்வது நிற்கும்.
* இடது கை கட்டைவிரலை வலது கை விரல்களாலும், வலது கை கட்டைவிரலை இடது கை விரல்களாலும் பிடித்து 30 முறை சுழற்றினால் தலைவலி குணமாகும்.
* காதின் முன்புறமாக கன்னத்தை ஒட்டி இருக்கும் மூன்று அக்குபுள்ளிகளை அழுத்திக் கொடுத்தால், செல்போன் பேசுவதால் ஏற்படும் காது பிரச்னைகள் சரியாகும்.
* கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஐஸ்கட்டியை சில நிமிடங்கள் வைத்தால் பல்வலி பறந்து போகும்.
இப்படி இந்த நூல் முழுக்க எளிமையான மருத்துவக் குறிப்புகள் ஏராளம் உண்டு. சில ஆண்டுகளிலேயே பல பதிப்புகளைக் கண்டு விற்பனையில் சாதனை புரிந்துவரும் நூல் இது.
இந்தப் புத்தகத்தில் கீழ்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1. உங்களுக்கு நீங்களே டாக்டர்!
2. முடிப் பிரச்னைக்கு முடிவுகட்டும் நக சிகிச்சை!
3. விரலைச் சுழற்றினால் தலைவலி மாயமாகும்!
4. கண்ணுக்கு காந்தக் கண்ணாடி அழகு!
5. இ.என்.டி... பராமரிப்பு கியாரண்டி!
6. பற்களில் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து விடுபட!
7. முதுகுவலிக்கு குட்பை சொல்லும் வேக்யூம் சிகிச்சை!
8. உள்ளங்கையில் இதய சிகிச்சை!
9. சுவாசக் கோளாறுக்கான எளிய சிகிச்சை!
10. கல்லீரல் பலமானால் குழந்தை பிறக்கும்!
11. கிட்னியை பாதிக்கும் வலி நிவாரண மருந்துக்கள்!
12. நம் சருமத்தைக் காக்கும் அக்கு சிகிச்சைகள்!
13. மூட்டுவலிக்கு தடை போடும் கட்டாந்தரை நடை மற்றும் வாழ்வியல்முறை!
14. மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்!
15. பெண்களின் நகை சிகிச்சை
16. உடலுக்குள்ளே சில விஷமிகள்!
17. தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!
உங்களுக்கு நீங்களே டாக்டர்!
நூலாசிரியர் : டாக்டர் எம்.என்.சங்கர்
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
மொழி : தமிழ்
பக்கங்கள் : 107
