en
Feedback
மாந்திரீகம் கேள்வி-பதில்

மாந்திரீகம் கேள்வி-பதில்

Open in Telegram
450
Subscribers
+424 hours
+47 days
+430 days
Attracting Subscribers
November '24
November '24
+1
in 0 channels
October '24
+520
in 0 channels
Date
Subscriber Growth
Mentions
Channels
01 November+1
Channel Posts
கேதுவின் காதலன் பேசுகிறேன் செவ்வாய் புதனில் நீசம் புதன் சனியில் நீசம் சனி சுக்கிரனில் நீசம் சுக்கிரன் செவ்வாயில் நீசம் சந்திரன் குருவில் நீசம் குரு சூரியனில் நீசம் சூரியன் ராகுவில் நீசம்.. கேதுவில் யாரும் நீசம் இல்லை #கேதுவை #நம்பிக்கெட்டவர் #யாருமில்லை.. நம் அம்சம் நம் மாணவர்கள் #கேதுவின் #காதலன்..GS

2
TVA_BOK_0003573_தமிழ்_மந்திரம்.pdf
502
3
AUDIO-2024-08-20-09-10-53.mp3
692
4
Om Namo Narayani, Dear Respectfully, Sri Sakthi Amma's discourse on the full moon day (19.08.2024).
Om Namo Narayani, Dear Respectfully, Sri Sakthi Amma's discourse on the full moon day (19.08.2024).
676
5
உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்தி கொண்டது. கையில் உப்பை வைத்துக் கொண்டிருக்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். கிராமங்களில் 'உப்பு மந்திரம்' என்று வேடிக்கையாக ஒன்றைச் சொல்வதுண்டு. உப்பைக் கையில் வைத்துக்கொண்டு நாம் யாரைப் பார்க்க நினைக்கிறோமோ, அவர்களை எண்ணி தியானித்து வீசி வேண்டினால், அவர்கள் வேண்டுதல் தொடங்கிய 7 நாள்களுக்குள் அவர்கள் உங்களைக் காண வந்துவிடுவார்கள் என்று நம்பிக்கை. இதைத்தான் டெலிபதி, ஈ.எஸ்.பி பவர் என்றெல்லாம் சொல்கிறோம். ஆக, உப்பு என்பது மருத்துவம், ஆன்மிகம், நம்பிக்கை என்று எல்லா விஷயங்களிலும் நம் வாழ்க்கையில் கலந்து, ஒன்றோடு ஒன்றாகவே இருந்துவருகிறது. இனி, `உப்புக்குப் பெறாத விஷயம்’ என்று எதையுமே சொல்லாதீர்கள். ஏனென்றால், *கடல் பரமாத்மா, உப்பு ஜீவாத்மா.*🙏🙏
809
6
*உப்பு... இறைவனை உணர்த்தும் ஓர் அடையாளம் !* உப்பு உணவில் மட்டுமல்ல, நமது ஆன்மிக வாழ்விலும் முக்கியமானது. விதையும் இல்லாமல் மண்ணுமில்லாமல் கடலில் தோன்றும் இந்த 'அதிசய விளைச்சலை' வியக்காத ஞானியரே இல்லை. நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும். *உப்பு ஜீவாத்மாவைப் போன்றது.* *கடலே பரமாத்மா.* *'சமுத்திரமணி', 'நீர்ப்படிகம்', 'கடல் தங்கம்', 'பூமிகற்பம்', 'சமுத்திர ஸ்வர்ணம்', 'வருண புஷ்பம்’, 'சமுத்திரக்கனி', 'ஜலமாணிக்கம்'* என்றெல்லாம் உப்பு போற்றப்படுகிறது. *சைவ சமயத்தில், 'ஸ்பரிச தீட்சை' என்று ஒன்று நடைபெறும்.* அதாவது குருவானவர், சிஷ்யரின் தலையைத் தொட்டு மந்திர முறைகளைச் சொல்லிக் கொடுப்பார். அப்போது குரு, சிஷ்யர் ஆகிய இருவரின் உப்புத்தன்மை விகிதமும் சரியான அளவில் ஒன்றாகி வரும்போது அந்த சிஷ்யர் மிகச்சிறந்த மாணவராக விளங்குவார் என்பது ஐதீகம். உடலில் சேரும் உப்பே நமது அனைத்து குணநலன்களையும் தீர்மானிக்கிறது என்பது சீனர்களின் நம்பிக்கை. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை. உப்பு, கடவுளை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சங்கும் முத்தும் பிறப்பது உப்பால்தான். கடவுளர்க்கே அதிகம் படைக்கப்படுவதும் அதனால்தான். கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமியின் அம்சமாக 'உப்பு' சொல்லப்படுவதால்தான், உப்பைச் சிந்தக் கூடாது’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தனர். உப்பைக் காலில் மிதிக்கக் கூடாது’ என்றும் சொல்வார்கள். வீட்டில், 'திருஷ்டி', 'துர்சக்திகள் தொல்லை' ஏதாவது இருந்தால், உப்பு நீரைப் பாத்திரத்தில் இட்டு, வீட்டின் மையத்தில் இருக்குமாறு வைத்து மூன்று நாள்கள் கழிந்த பிறகு கால்படாத இடத்திலோ நீர் நிலைகளிலோ ஊற்றிவிடுவது தமிழர்களின் நெடுநாளைய வழக்கம். இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நாம் காணக்கூடிய நடைமுறையே. உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது. உப்பைக் கடனாகக் கொடுக்கக் கூடாது’ என்பது இன்றும் உள்ள வழக்கம். உப்பைக் கொடுத்தால், அந்த இடத்திலிருந்து மகாலட்சுமி நீங்கிவிடுவாள் என்பது ஐதீகம். உப்பை விற்கக் கூடாது என்று முன்னர் வழக்கத்தில் இருந்ததும் இதனால்தான். உப்பை மண்பானை அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு வைப்பதே நல்லது. அப்படித்தான் வைத்தும் இருந்தோம். மண்பானைக்கு 'ஸ்வர்ண பாத்திரம்' என்றே ஒரு பொருள் உண்டு. அதனாலேயே ஸ்வர்ணத்தின் அதிபதியான மகாலட்சுமி மண் பானையில் உப்பு வடிவில் இருக்கிறாள் என்றும் சொல்வார்கள். பிறந்த குழந்தைக்குச் சர்க்கரை, உப்புத் தண்ணீர் ஊற்றுவது தொடங்கி, இறந்த உடலைப் பக்குவப்படுத்துவது வரை மனித வாழ்வில் உப்பு பெரும்பங்கு எடுத்துக்கொள்கிறது. எதிரிகளை அடங்கிப்போகச் செய்ய, உப்பால் கணபதி செய்து வழிபடுவது ஒரு வழக்கமாக உள்ளது. பித்ருக்களின் வழிபாட்டின்போது உப்பில்லாமல் அவர்களுக்கு உணவு படைப்பது வழக்கம். காரணம், உப்பில்லாத உணவை வெறுத்து அவர்கள் பூமியை விட்டுவிட்டு மேலே சென்றுவிடுவார்கள் என்பது நம்பிக்கை. முக்கியமாக, அமாவாசையன்று கடற்கரையில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதுவும் உப்புக்காற்றுபட்டு அது நமது உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்தவே என்றும் கூறப்படுகிறது. உப்பைத் தலையில் வைத்து ஆசீர்வதித்து, மந்திரங்கள் சொன்னால் நோய்கள் விலகும் என்பது சாக்த வழிபாட்டில் வழக்கமாக உள்ளது. உப்பையும் மிளகையும் கோயிலின் பலிபீடத்தில் போட்டு வழிபடுவதை நாம் பல கோயில்களில் பார்த்திருப்போம். முக்கியமாக, அம்மன் கோயில்களில் இது சகஜம். உப்பையும் மிளகையும் பலிபீடத்தில் போட்டு வழிபட்டால் எதிரிகள் ஒழிந்துவிடுவார்கள் என்பதும் சில பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்துவருகிறது. உப்பும் மிளகையும் கொட் டி வழிபடுவதை மரு, வீக்கம் போன்றவை நீங்க கொட்டுவதாகவும் சிலர் சொல்வார்கள். ஆனால், உண்மையில் நம்மை எதிர்நோக்கி வரும் துன்பங்கள் யாவும் உப்பைப்போல கரைந்துவிட வேண்டும் என்பதற்கே கொட்டப்படுகிறது. விடியல் நேரத்தில் இரு கைகளிலும் உப்பை வைத்துக்கொண்டு 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்ற ஆதி சங்கரரின் சௌபாக்ய மந்திரத்தை 16 முறை உச்சரித்து, அந்த உப்பைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்படியே 48 நாள்கள் கழித்து, மொத்த உப்பையும் நீர்நிலைகளில் போட்டுவிட வேண்டும் என்று சமயப் பெரியோர்களால் சொல்லப்படுவது உண்டு. *வடமொழியில் உப்பை லவணம்’ என்பார்கள். இந்த லவணத்தைக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனைகள், வடமாநிலங்களில் அநேகம் உண்டு. லட்சுமியின் அருள்வேண்டி பலவிதங்களில் லவண பூஜைகள் அதிகாலைகளில் நடைபெற்று வருகின்றன.* *ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம்: மம சௌக்யம் தேகிமே ஸதா'* என்று வேண்டியபடி உப்பை வைத்து சூரியனை வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
610
7
+1
No text...
538
8
குளவிகள் வீடுகளில் கூடு கட்டுவது நல்லதா? கெட்டதா? இந்த குளவி கூட்டினை நாம் கலைக்கலாமா? குளவிகள் கூடு கட்டுவது குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளவை யாவை? பொதுவாக வீடுகளிலும், வீடுகளுக்கு பக்கத்திலும் தேன்கூடு இருக்க கூடாது என்பார்கள். காரணம், தேன் கூடு வீட்டில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்குமாம். அத்துடன் கடன் தொல்லைகளும், வறுமையும் சேர்ந்து கொள்ளும் என்பார்கள். ஆனால் குளவிகளை அப்படி சொல்வதில்லை. வீட்டில் குளவி கூடு கட்டுவது மிகவும் நல்லது என்கிறார்கள். பொதுவாக, இந்த குளவிகள், அதன் கூடுகளை பார்த்து பார்த்து கவனமாக கட்டுமாம்.. மென்மையான மண்: முழுக்க முழுக்க தூய்மையான மண்ணை கொண்டே இந்த கூட்டினை குளவிகள் கட்டுகின்றன.. அதாவது, மரத்தின் கூழிலிருந்தும், சிதைந்துபோன மரங்களிலிருந்து மரத்தூளை கொண்டு வந்து, பற்களாலேயே கடித்து அதனை மென்மையாக்கி விடுமாம்.. இந்த தூளில் தன்னுடைய எச்சிலை கலந்து, அதில்தான் அறுகோண கூட்டை உருவாக்கும். இந்த கூட்டிலேயே அறைகளையும் அமைத்து கொள்ளும். ஒவ்வொரு அறைக்குள்ளும், ஒவ்வொரு முட்டையை பத்திரமாக வைத்து கொள்ளும். பெரும்பாலும், இனப்பெருக்கத்துக்காகவே இந்த கூடுகளை குளவிகள் கட்டுகின்றன. எனவே, வீட்டில் குளவிகள் கூடு கட்டினால், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பார்கள். வீட்டின் நிதி ஆதாயமும் சீராக இருக்குமாம். கடன் வாங்கியிருந்தாலும், அதை எளிதாக திருப்பி தர முடியும். கடன் கொடுத்திருந்தாலும், அந்த பணம் சிரமமின்றி திரும்ப கிடைத்து விடுமாம். வடகிழக்கு: அதுமட்டுமல்ல, பூஜை அறையில் குளவிகள் கூடுகள் கட்டினால் அது மிகவும் நல்லது. அதுவும் வடகிழக்கு மூலையில் கூடு கட்டினால், அது இன்னும் நன்மைகளை தரக்கூடியது. இந்த கூடுகளை எக்காரணம் கொண்டும் கலைத்துவிடக்கூடாது. ஆனால், சமையலறையில் கூடுகளை கட்டிவிட்டால், அது நிதி ஆதாரத்தை பலவீனமாக்கி, வறுமையில் தள்ளிவிடுமாம். அதேபோல, புதிதாக கூட்டை கட்டிவிட்டு, குளவிகள் அதிலிருந்து வெளியேறி விட்டால், வீட்டில் ஏதோ சிக்கல் என்று அர்த்தமாம். இது அபசகுணமாகவும் கருதப்படுவதால், உடனே அந்த கூட்டினை கலைத்து அப்புறப்படுத்திவிட வேண்டும். சுண்ணாம்பு: அதேபோல, குளவிகள் எதிர்பாராமல் கொட்டிவிட்டால், விஷம் ஏறிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். குளவி கொட்டிய இடத்தில் சிறிதளவு சுண்ணாம்பு வைத்தால், விஷம் ஏறாமல் இருக்கும் என்பார்கள்.. அதேபோல குழந்தைகளுக்கு கை எட்டும் இடத்தில் எதிர்பாராமல் குளவி கூடு கட்டிவிட்டால், அந்த கூட்டினை கலைத்துவிட வேண்டும். மேலும், அந்த இடத்தில் கோமியத்தை மீண்டும் மீண்டும் தெளித்து வந்தால், அதே இடத்தில் குளவிகள் கூடு கட்டாது. 🙏🙏🙏🙏
602
9
சித்தர்கள் கூறும் தானங்கள் பலன்கள் 🌿🌼 ::::::::::: 🌿 🌼 🌿 :::::::::🌿 🌼 🌿 ::;:::::🌿 🌼 🌿 1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும் 2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும் 3. தங்கம் தானம் தர தோஷம் விலகும் 4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும் 5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும் 6. நெய் தானம் தர நோயைப் போக்கும் 7. பால் தானம் தர துக்கநிலை மாறும் 8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும் 9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும் 10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும் 11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும் 12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும் 13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும் 14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும் 15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.✍🏼🌹
506
10
சப்த ரிஷிகள் காயத்திரி மந்திரங்கள் காஸ்யபர் ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே ஆத்ம யோகாய தீமஹி தன்னோ காஸ்யப ப்ரசோதயாத் அத்ரி ஓம் சத்கர்மபலதாய வித்மஹே சதாக்நிஹோத்ராய தீமஹி தன்னோ அத்ரி ப்ரசோதயாத் பரத்வாஜர் ஓம் தபோரூடாய வித்மஹே சத்ய தர்மாய தீமஹி தன்னோ பரத்வாஜ ப்ரசோதயாத் விஸ்வாமித்ரர் ஓம் தநுர்தராய வித்மஹே ஜடாஜுடாய தீமஹி தன்னோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத் கவுதமர் ஓம் மஹாயோகாய வித்மஹே சர்வபாவநாய தீமஹி தன்னோ கௌதம ப்ரசோதயாத் ஜமதக்னி ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே அக்ஷசூத்ராய தீமஹி தன்னோ ஜமத்கனி ப்ரசோதயாத் வசிஷ்டர் ஓம் வேதாந்தகாய வித்மஹே ப்ரம்ஹசுதாய தீமஹி தன்னோ வசிஷ்ட ப்ரசோதயாத் அதிதி தேவி ஓம் மஹாதேவ்யைச வித்மஹே கஸ்யப பத்னியைச தீமஹி தன்னோ அதிதி ப்ரசோதயாத் அனுசூயா தேவி ஓம் வேதாத்மன்னியை வித்மஹே அத்ரி பத்னியை ச தீமஹி தன்னோ அனுசூயா ப்ரசோதயாத் சுகிலா தேவி ஓம் மஹா சக்தியை ச வித்மஹே பரத்வாஜ் பத்னியை ச தீமஹி தன்னோ சுசிலா ப்ரசோதயாத் குமுத்வதி தேவி ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஸ்வாமித்ர பத்னியை ச தீமஹி தன்னோ குமுத்வதி ப்ரசோதயாத் அகல்யா தேவி ஓம் மஹா சக்தியை ச வித்மஹே கௌதம பத்னியை ச தீமஹி தன்னோ அஹல்யா ப்ரசோதயாத் ரேணுகா தேவி ஓம் ஆதி சக்தியை ச வித்மஹே ஜாமதக்னி பத்னியை ச தீமஹி தன்னோ ரேணுகா ப்ரசோதயாத் அருந்ததி தேவி (கணவன், மனைவி ஒற்றுமை பெற) ஓம் ஞானாத்மிகாயை வித்மஹே வசிஷ்ட பத்னியை தீமஹி தன்னோ அருந்ததி ப்ரசோதயாத்
694
11
*நவக்கிரகங்கள் இல்லாத சிவாலயங்கள்* *தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும். நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்களில் முக்கியமானவை பதினொன்று ஆகும்.* எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாஞ்சியம் அங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம். நான்காவது ஸ்தலம் திருவாவடுதுறை. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக வரலாறுகள் உள்ளன. திருப்பைஞ்சீலி, வாழை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் கிடையாது. திருக்கடையூரில் மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம் காளஹஸ்தி ஆறாவது ஸ்தலம் . பஞ்சபூத தலங்களில் இது வாயு ஸ்தலம். அங்கு ஒன்பது படிகள் கொண்ட தங்கஏணியில் (golden ladder) ஒவ்வொன்றிலும் மூன்று மலர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த 3*9 என்பது 27 நட்சத்திரத்தைக் குறிக்கும். 27 நட்சத்திரங்களும் இந்த ஏணியில் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏணி சிவலிங்கத்தின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதைத் தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் பார்க்க முடியும். திருமழபாடி. திருவையாற்றுக்கு அருகில் உள்ளது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை. திருக்கடையூர் . இதன் தலபுராணம் வித்தியாசமானது. எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது. ஒன்பதாவது ஸ்தலம் திருமழபாடி திருவையாறு அருகில் இருக்கிறது. பின் பத்தாவது ஸ்தலம் திருவெங்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விடப் பழமையானவர். அடுத்து திருப்புரம்பியம் பதினோராவது ஸ்தலம். இங்கும் நவக்கிரகம் கிடையாது *சிவாய நம* *திருச்சிற்றம்பலம்*
633
12
பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். ஜென்ம நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும் என்பது ஜோதிட விதி. *வாழ்க வளமுடன்*
946
13
ஜென்ம நட்சத்திற்கு ஏற்ற நன்மை தரும் நட்சத்திரங்கள்... அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம். மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
696
14
No text...
611
15
கலசதாரை வார்த்தல்:- ---------------------------------------- மிகப்பெரிய வீடு கட்டினாலும் சிறிய வீடு கட்டினாலும் கிரகப்பிரவேசம் முடிந்ததும் இதைச் செய்ய வேண்டும். இக்காலத்தில் இந்த வழக்கத்தை எல்லோரும் விட்டு விட்டார்கள். பூஜையில் வைக்கப்பட்ட மூன்று கலச நீரையும் மாடிப்பகுதியில் ஈசான்ய மூலையில் வேதபண்டிதர் உறவினர் நின்று கொண்டு வீட்டின் எஜமானர் மனைவியுடன் கீழே ஈசான்யத்தில் நிற்கச் செய்து அப்படியே தாரையாக ஊற்ற வேண்டும். அவர்களுக்குக் கலசநீரை அபிஷேகம் செய்வதால் சர்வ தோஷங்களும் விலகி லட்சுமி கடாட்சம் உண்டாகும். அடுத்ததாக பால் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் எஜமானர் மனைவியோடு அருந்த வேண்டும். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள் வாழ்த்துரையோடு சீர்வரிசை மொய், பொருட்கள் கொடுப்பார்கள். அவற்றை தட்டில் வைத்து கொடுக்கலாம். தொடர்ந்து வாழ்த்துரை வழங்குவதும் மாலை அணிந்து கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு மங்கள ஆரத்தியை எடுக்கச் சொல்வது வழக்கம். அடுத்ததாக வாஸ்து தோஷங்கள் விலக, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் தற்கால வழக்கப்படி சுற்றி (திஷ்டி விலக) விட்டு வாசலில் உடைக்க வேண்டும். பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் வீட்டிற்கு சம்மந்தியாக வந்திருப்பவர்கள் சீர் கொண்டு வந்திருக்கையில் அவர்களுக்கு தாம்பூலம், பதில் மரியாதை செய்வதும், சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள், குங்குமம் கொடுத்து வாழ்த்துப் பெறவும் அவசியமாக மறக்காமல் செய்தல் வேண்டும். கிரகப்பிரவேசம் செய்த வீட்டில் அந்த நாள் இரவு மனைவி விளக்கு ஏற்றி வைத்து துளசி துதி, மகாலட்சுமி மந்திரங்களைப் படித்தல் வேண்டும். வீட்டில் வருடத்திற்கு ஒரு முறை உங்கள் விருப்ப தெய்வ மந்திரங்களைக் கூறி யக்ஞ பூஜை செய்யுங்கள். பித்ருக்கள் படத்தைத் தனி அறையில் வைத்து ஆராதிக்கலாம். சாமி படங்களோடு சேர்த்து வைத்தால் தெய்வ சாந்நித்ய சக்தி அகன்று புது வீட்டில் இடர்கள் உருவாக வாய்ப்பு உண்டு. கிரகப்பிரவேச காலத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, குபேரன், பெருமாள், லட்சுமி படங்களை வைத்து வழிபடலாம். விருப்பப்படி எல்லாம் யந்திரங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். கிரகப்பிரவேச காலத்தில் யாகம் செய்யும் போது மோகன கணபதியை அக்னியில் ஆகுதி செய்து வழிபட்டால் பெண் திருமணத்தடை விலகி சீக்கிரம் கைகூடும். கல்வி விருத்திக்கு-ஹயக்ரீவ ஹோமம் சூன்யங்கள் அகன்று நிம்மதி பெற-ஆஞ்சநேயர் மூலமந்திர முறை. வீடு கட்ட, கடன் ஒரு ஆண்டுக்குள் தீர-அங்காரக மங்கள மந்திர ஹோமம். அரசாங்க நன்மை, பணி உயர்வு பெற- இந்திர பூஜை மந்திரம். குழந்தை பாக்கியம் உங்களுக்கே தடையாக இருந்தால்-அஸ்வினி தேவர்களை நினைத்து ஹோமம். இன்னொரு வீடு யோகம் வர பூமிலாப வாஸ்து முறை ஹோமம். வீட்டுக்குள் குடிபுகுந்ததில் இருந்து ஐஸ்வர்யமும் பொருளும் சேர்ந்திட சௌபாக்ய திரவ்ய லட்சுமி ஹோமம், தொழில் உயர்ந்து வர-குபேர சிந்தாமணி மந்திர ஹோமம் என்று இலகு முறையில் சேர்த்து செய்து விட்டால் பலன் விரைவாகவும் இரட்டிப்பாகவும் கிடைக்க காணலாம். - சித்தர்களின் குரல் shiva shangar
749
16
பெண்கள் மங்களப் பொருட்களோடு வீட்டு வாசலில் நிற்கும் போது பசுவை கன்றுடன் வீட்டைப் பார்க்கும்படி நிற்க வைத்து அதற்கு வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கும் பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும். கன்றுக்கும் தரவேண்டும். இந்த நேரத்தில் பசுவை மாடு என்று பெண்கள் சொல்லவே கூடாது. பிறகு தூபதீப ஆராதனை செய்து வீட்டில் வசிக்கப்போகும் பெண் கையில் காமாட்சி தீபத்துடன் கணவனோடு பசுவை உள்ளே அழைக்க வேண்டும். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். இப்போது முக்கிய தெய்வ வழிபாட்டுடன் கிரகப்பிரவேச பூஜைகள் நடத்தப்பட வேண்டும். கணவன்- மனைவி மாலை அணிந்து அமர்க. முதலில் விநாயகர் பூஜை:- ---------------------------------------------- வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப்பான்மை தரு செய்ய தமிழ்ப்பார்மிசை விளங்க ஞான மத ஐந்துகர மூன்று விழி நால்வா யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம் - விநாயகரை வணங்கிய உடன், விச்சின்ன அக்னி சந்தானம் - என்ற விதிப்படி ஐந்து காசுகளைத் தாம்பூலத்தில் கணவன் வைத்துக்கொண்டு மனைவி அர்க்கியம் (நீர் விட) விட வந்திருக்கும் வேத பண்டிதரிடம் தரவேண்டும். இது எதற்காக எனில் புதிதாகக் கட்டிய வீட்டில் முன்பு செய்யாத அக்னி காரியங்கள் விட்டிருந்தால் புதுப்பித்தல். கலச பூஜை:- ---------------------- மூன்று கலசங்கள் விநாயகர்+லட்சுமி+நவக்ரகம். நவக்ரஹ கலசங்கள் 9 தனியாகவும் பக்கவாட்டில் வைக்கலாம். மூன்று நுனி இலைகளில் நெல் அல்லது கோதுமை பரப்பி வைத்து அதன் மேல் மூன்று இலைகளைப் போட்டு பச்சை அரிசி போட்டு கலசம் வைக்க வேண்டும். அதற்கு துணி, மலர்போட்டு முறைப்படி அலங்கரிக்க வேண்டும். கிழக்கு முகமாக எஜமானர் மனைவியுடன் அமர வேண்டும். பிறகு, கையில் பவித்ரம் அணிந்து கொண்டு கலச பூஜையை பண்டிதர் மந்திரம் ஓதி செய்யும் போது மலர் போட்டு வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து அதில் உள்ள அக்னி குண்டத்தில் இட வேண்டும். யாக வழிபாடு:- -------------------------- இந்த வழிபாடு தொடங்கும் முன் அக்னியை அதன் மேடையில் பண்டிதர் உபதேவதைகளை திக்பாலகர்கள், துர்கை, விநாயகர், நட்சத்திர தேவதா, அபயங்கரர் வாஸ்து உள்பட வர்ணித்து பூர்வாங்க பூஜை செய்வார். நெய், நவசமித்துக் குச்சிகளாலும் யாகக் கூட்டுப் பொருட்களாலும் வேத மந்திரங்களால் கிரகப்பிரவேச யக்ஞம் நடத்தப்படல் வேண்டும். ஓம் கம் கணபதியே நம. சுவாகா ஓம் வக்ர துண்டாய ஹீம் நமோ ஏரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய சௌபாக்யம் தேகிமே சுவாகா. என்றும் நவக்கிரகங்களை அவர்களுக்குரிய மந்திரங்களால் ஓம் ஆதித்யாய சுவாகா, ஓம் சோபாய நம சுவாகா ஓம் மங்களாய சுவாகா ஓம் புதாய சுவாகா. ஓம் ப்ருகஸ் பதியே சுவாகா, ஓம் சுக்ராய சுவாகா, ஓம் சனீஸ்வராய சுவாகா, ஓம் ராகுவே சுவாகா, ஓம் கேதுவே சுவாகா - என்று கூறி யாகப் பொருளை அக்னியில் இடலாம். லட்சுமி ஹோமம்-வெட்டிவேர், வில்வப்பழம், மஞ்சள், தாம்பூலம் இவற்றாலும் அஷ்ட திரவியக் கலவையாலும் ஓமம் செய்தல் வேண்டும், ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை கமல தாரிண்யை சிம்ம வாகின்யை பவாயை சுவாகா- என்று சௌபாக்கிய லட்சுமியையும், ஓம் நம: கமலவாசின்யை என்று ஸ்வர்ண லட்சுமியையும், ஓம் உனபதுமாம் கீர்திச்ச மணினா சக என்று குபேர லட்சுமியையும் வழிபட்டு, அக்னி பூஜை நடத்தி வாஸ்து பகவானையும் அவரது காயத்ரியால் யக்ஞ முறை செய்து இறுதியாக பூரண ஆகுதி என்ற யாக முடிவுறல் நிகழ்வை நடத்தி தூபதீப நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வாசற் படிக்கு நிலை பூஜை செய்து ஆரத்தி செய்தல் வேண்டும். சில குடும்பங்களில் நிலைப்படி பூஜையை பசு உள்ளே வருமுன் செய்வார்கள். விதிப்படி செய்வதானால் அக்னியில் யாகப் பொருள் இட்டு மகாலட்சுமியை அழைத்த பிறகே படி பூஜை உத்தமம் ஆகிறது. நிலைவாசல் தேவதைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கலாம். அடுப்படியில் பால் காய்ச்சுமிடத்தில் அன்னபூரணியை பூஜை செய்க. பூரண ஆகுதி முடிந்ததும் அனைவருக்கும் ஆரத்தி பிரசாதம் கொடுக்கலாம். அஷ்டதிரவியம் என்ற எட்டுவகை பிரசாதம் கொடுத்த பின் மூன்று கலசங்களில் உள்ள நீரை முதலில் வைக்கப்பட்ட வருண கும்ப கலசநீருடன் சிறிது கலந்து வீடு முழுவதும் "ஓம் கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே அஸ்மின் சின்னிதிம் குரு" என்று கூறி தெளிக்க வேண்டும். பால் காய்ச்சுதல்:- ------------------------------- ஒன்பது செங்கற்கள் அல்லது 4-ஐ வைத்து பூ சந்தனம் குங்குமம் வைத்து புதிய பால் பாத்திரத்தில் பொட்டு வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கவும். கிரகப்பிரவேசம் நடத்தப்படும் இடத்தில் சாமி படத்தின் முன்பாக காய்ச்சிய பாலை வைத்து கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சுமி, சரஸ்வதியை நினைத்து நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.
568
17
கிரகப்பிரவேசம் செய்யும் முறை:..!!! --------------------------------------------------------------- வேதங்களில் வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர். நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு கோவில் போன்றும், இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி செய்வது முறை என்று அனைவரும் அறிய சித்தர்களின் குரல். முக பக்கத்தில் பகிர்கிறேன். வீடு கிரகப்பிரவேசம் - சிறந்த மாதம் எது? ------------------------------------------------------------------------ சுபகாரியங்கள் என்றாலே அதற்கு நல்ல நேரம், நாள், மாதம் என்று அனைத்தும் பார்ப்பது இயல்பு. அதேபோல் நாம் புதிதாக கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் வைத்து குடிபோவதற்கு, சிறந்த மாதம், நாட்கள் நட்சத்திரம் மற்றும் லக்னம் எது தெரியுமா? வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது? •• சித்திரை •• வைகாசி •• ஆவணி •• ஐப்பசி •• கார்த்திகை •• தை வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நாட்கள் எது? •• திங்கட்கிழமை •• புதன் கிழமை •• வியாழன் கிழமை •• வெள்ளிக் கிழமை வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நட்சத்திரங்கள் எது? அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வதம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்தவை. வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த லக்னம் எது? •• ரிஷபம் •• மிதுனம் •• கன்னி •• விருச்சகம் •• கும்பம் எந்த மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யவே கூடாது ஏன்? ஆனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில் தான் மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார். ஆடி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் இராவணன் தனது கோட்டையை இழந்தார். புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார். மார்கழி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் துரியோதனன் தன்து ராஜ்ஜியத்தை இழந்தார். மாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால விஷம் அருந்தி மயக்க முற்றார். பங்குனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதம் தான் சிவன் மன்மதனை எரித்த மாதமாகும். ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. கிரகப்பிரவேசம் செய்யும் முறை :- ---------------------------------------------------------- பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும். அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம். தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம். கிரஹ வழிபாட்டுக்கு இடையூறு நேராத வண்ணம் செய்து கொள்ளலாம். கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வை ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம். நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும். வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிபடம், அரிசி, உப்பு, பருப்பு, நிறை குடநீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் (5 வகை பழங்கள்) மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு (பெண்கள் சொந்த கதை பேசாமல்) தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வரவேண்டும். கோபூஜை:- ------------------
498
18
No text...
440
19
இப்படி வலது காலை தூக்கி உள்ள யானை படம்? அல்லது போட்டோ எங்கேயாவது கிடைத்தால்... வாங்கி வந்து உங்கள் வீட்டை பார்த்தவாறு அல்லது
இப்படி வலது காலை தூக்கி உள்ள யானை படம்? அல்லது போட்டோ எங்கேயாவது கிடைத்தால்... வாங்கி வந்து உங்கள் வீட்டை பார்த்தவாறு அல்லது வீட்டு வாசலை பார்த்தவாறு மாட்டுங்கள்.... வீட்டுக்கு ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். செல்வ வளம் கூடும். காசு பணம் கையில் தங்கும் 💪 உங்கள் குடும்பத்தில் இனம் புரியாத ஒரு மாற்றத்தை கொண்டு வந்து கொண்டே இருக்கும். வீட்டைப் பார்த்தவாறு மாட்டினால் அதிர்ஷ்டம் உண்டாகும் 💪 அதுவே வீட்டு வாசலை பார்த்தவாறு மாட்டினால்? உங்கள் எதிரிகள் தீய சக்திகள் கண் திருஷ்டிகள் அண்டவே அண்டாது💪 முக்கியமாக யானை வலது காலை தூக்கி உள்ள படம் மட்டுமே மாட்ட வேண்டும். இடது காலை தூக்கி உள்ள படத்தை மாட்டக்கூடாது... யானையின் வலது கால் வளர்ச்சியை குறிக்கும். யானை இடது கால் அழிவை குறிக்கும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் தாய்லாந்து மியான்மர் கேரளா போன்றவைகள்.... சொர்க்க பூமியாக இருப்பதற்கு ஒரே காரணம் அங்குள்ள யானைகளால் மட்டுமே. இது ஜோதிடம் வாஸ்து தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். 💐🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி💐🌹🙏
670
20
பாவ காரக விளக்கம் --------------------------------- ஜோதிட சாஸ்திரம் என்பது மனிதர்களின் வாழ்க்கை சபவங்களை மட்டும் முன்னறிந்து சொல்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதனால் ஜோதிட சாஸ்திரத்தை காலப்புருச தத்துவம் என்பர். ஜோதிடத்தில் காலத்தை அளக்கும் கருவியாக ராசி சக்கரத்தை பயன்படுத்துகிறார்கள். எனவே காலம் என்பது ஒரு வட்டமாகும். மனிதனுடைய வாழ்க்கை இந்த கால வட்டத்திற்குள்தான் இயங்குகிறது. இதை உருவகப்படுத்தும் விதமாக பன்னிரண்டு ராசிகளையும் புருச அங்கங்களாக (மனித உடல் உறுப்புகளாக) பாவித்து, ராசி என்னும் அண்ட இயக்கத்தையும் , மனித உடல் என்னும் பிண்ட இயக்கத்தையும் ஒப்பிட்டு ஒரு சாஸ்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவே ஜோதிட சாஸ்திரமாகும். மனிதன் தன் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும்பொழுது முதலில் அவன் சிரசு தோன்றுகிறது, இது உடலின் முதல் உறுப்பாகும் , அடுத்து முகம், கைகள், மார்பு, வயிறு என வரிசையாக தோன்றி கடைசியாக கால் பாதம் தோன்றுகிறது. முதலில் தோன்றிய உடல் உறுப்பை முதல் ராசியிலும் , அடுத்தடுத்து தோன்றிய உடல் உறுப்புகளை அடுத்தடுத்துள்ள ராசிகளில் வரிசைக்கிரமாக வைத்து கடைசி உடல் உறுப்பான கால் பாதத்தை கடைசி ராசியான மீனத்தில் வைத்து ராசி வட்டத்தை மனிதனாக உருவகப்படுத்தியுள்ளது ஜோதிடம். இதன் மூலம் ஜோதிடம் மனிதர்களுக்கு பலன் சொல்வதற்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. ராசிகளும் உடல் உறுப்புகளும்: மேசம்- சிரசு ரிசபம் – நெற்றி, கண், கண் புருவம், மூக்கு, வாய், பல், நாக்கு, கன்னம், தாடை மிதுனம்- காது, கழுத்து, குரல்வளை, தொண்டை, தோள்கள், கைகள், கை விரல்கள் கடகம்- மார்பு, இருதயம், நுரையீரல் சிம்மம்- தொப்புள், மேல் வயிறு, இரைப்பை, ஜீரண உறுப்புகள் கன்னி- அடி வயிறு ,இடுப்பு, மலக்குடல், சிறு நீர்ப்பை, சிறு நீரகம் துலாம்- இன விருத்தி உறுப்புகளான கருப்பை, கருக்குழாய், யோனிக்குழாய், விந்துப்பை, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு விருச்சிகம்- கழிவு நீக்க உறுப்புகளான மலவாய், மூத்திரக்குழாய் தனுசு- தொடைகள் மகரம்- கால் மூட்டுகள் கும்பம்- முழங்கால்,கணுக்கால் மீனம்- பாதம், பாத விரல்கள் மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்தே ஜோதிடத்தில் பாவ காரகம் என்னும் பலன் கூறப்பயன்படும் ஜோதிட காரணியை கூறியிருக்கிறார்கள். லக்கின பாவ காரக விளக்கம் -------------------------------------------- மனிதனின் சிரசு உதய நேரத்தைக்கொண்டே லக்கினமென்னும் முதல் பாவம் குறிக்கப்படுகிறது. அதாவது ஜாதகத்தில் முதல் பாவம் சிரசை குறிக்கிறது. சிரசுக்குள் உள் உறுப்பாக மூளை அமைந்துள்ளது. மூளையின் வேலை எண்ணுவதாகும். எனவே முதல் பாவம் மனிதனின் எண்ணங்களை குறிக்கிறது. மனிதனுக்கு ஆசை, விருப்பம், வெறுப்பு, குறிக்கோள், நோக்கம் இவை அனைத்தும் எண்ணங்களாக மூளையில் தோன்றுகின்றன. மனிதனின் செயல்பாடுகள் அனைத்திற்கும் எண்ணங்களே காரணமாகும். எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள். பிரதானம் என்றால் முக்கியம் என்று பொருள். மேலும் சிரசு என்பது மனித உடலின் உச்சிப்பகுதியாகும். மற்ற உடல் உறுப்புகள் அனைத்தும் சிரசிற்கு கீழேதான் அமைந்துள்ளன. உடல் உறுப்புகள் அனைத்தும் மூளையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. எனவே மூளையானது உடல் உறுப்புகள் அனைத்திற்கும் தலைவன் போன்றதாகும். தலைவனின் வேலை தன்னை சார்ந்துள்ளவர்களை வழி நடத்தி செல்வதாகும். தலைவனை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதனால் முதல் பாவம் பிரபலத்தன்மையை குறிக்கிறது (பெயர்,புகழ்). சொந்த மூளையை பயன்படுத்துபவர்கள் அனைவரிடத்திலும் ஒரு வித தனித்துவம் இருப்பதைக்காணலாம். மனிதனுக்கு மூளை என்று ஒன்று இல்லாவிட்டால் அவன் இயக்கம் எதுவும் இல்லாத பிணத்திற்கு சமமாகி விடுவான். பிறப்பின் நோக்கங்கள் மூளையில் எண்ணங்களாக தோன்றி பின்பு அவை செயல் வடிவம் பெறுகின்றன. இதனால் தான் விதியை தலை எழுத்து என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அடிப்படையில் லக்கினத்தை விதி என்று குறிப்பிடுகிறார்கள். எண்ணங்கள் எவ்வழியோ விதி அவ்வழியாகும். மேலும் மனிதன் தன் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் செயல்படும் விதத்தைத்தான் அவனுடைய குணங்களாக சொல்கிறார்கள். மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் லக்கின பாவத்தின் காரகங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. லக்கின பாவத்தின் காரகங்கள் கீழே தரப்பட்டுள்ளன. சிரசு, மூளை, தலை முடி, ஜாதரின் விருப்பு, வெறுப்புகள், ஜாதரின் ஆசைகள், ஜாதகரின் குணங்கள், ஜாதகரின் பெயர், புகழ் , ஜாதகரின் தனி அடையாளங்கள். ஜாதகரின் முயற்சிகள். ஜாதகரின் தலை விதி லக்கினம் எந்த ராசியில் அமைகிறதோ அந்த ராசியின் தன்மைகள், லக்கினத்தில் நின்ற மற்றும் லக்கினத்தைப் பார்த்த கிரகங்களின் தன்மைகளை ஒட்டியே ஒரு மனிதனின் எண்ணங்கள் மற்றும் குணாதிசயங்கள் அமைந்திருக்கும். சித்தயோகி சிவதாசன் ரவி 9444918645
504