பெரியார் மண் Periyar land
Open in Telegram
308
Subscribers
No data24 hours
+47 days
+3430 days
Posts Archive
ரொம்ப சிம்பிள்ங்க....
பேய் இருக்குன்னு நம்புறவன ஈஸியா பயமுறுத்திடலாம். ஆனால் பேயே இல்லைன்னு சொல்றவன அவ்வளவு எளிதாக பயமுறுத்தி விட முடியாது...
அதே Concept தான் இங்கேயும்..
சனாதனத்தை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் தருவாயில், சாதனத்தின் பெயரால் அவர் பிறரால் அடிமையாக நடத்தப்படுகின்றான். அதேபோல் சாதனத்தை ஒருவர் எதிர்க்க துணிந்து விட்டால் வேறு வழியின்றியாவது அவர் சமத்துவத்துடன் நடத்தப்படுகின்றார்.
- இரா.இளம்பெருவழுதி மதுரைக்காரன்
சிவ லிங்கம் உருவான கதை!
"சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தார்
அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டார் சிவன்...!!
எப்படியாவது ரிஷியின் மனைவியை
அடைந்தே ஆகவேண்டும் என்று தவித்த சிவன், திட்டமிட்டு நல்லிரைவில் ரிஷியின் வீட்டருகே வந்து கூவினார் சேவலை போல்...
விடிந்துவிட்டது என்று விழித்த ரிஷி
கங்கை நதியில் குளிக்க சென்றுவிடுகிறான் ..
ரிஷி வெளியே சென்ற நேரத்தில் சிவன்
ரிஷியை போலே உருவம் மாறி ரிஷியின் மனைவியோடு படுத்து உடலுறவு கொள்கிறார்..., கற்பழித்து
முடிந்தப்பின் சிவன் ஓடிவிடுகிறார் ...!!
வீடு திரும்பிய ரிஷி, தன் மனைவியின்
உடலுறவுக்கொண்ட கோலத்தை பார்த்த கோபம்கொண்டு..!!
"நான் இல்லாத நேரத்தில் என்னை போல நடித்து என் மனைவியோடு உடலுறவு
கொண்டவனின் "லிங்கம்" அருபடட்டும்" என்று சாபம் விடுகிறான்..
உடனே சிவனின் "லிங்கம்" அறுபடுகிறது...விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே சிவனின் மனைவி பார்வதியிடம் சொல்லி அழுகிறார்கள் ..உடனே பார்வதி தனது
பிறப்புறுப்பால் அறுந்த சிவனின்
லிங்கத்தை பிடித்து காப்பாற்றுகிறாள்..!!
(இது போன்ற கதைகள் செக்ஸ் புத்தகத்தில் கூட பார்க்க முடியாது)😄
இதுதான் சிவலிங்கம் உருவான கதை
பார்த்தீர்களா மக்களே இதைதான்
இத்தனை நாட்கள் பூஜை போட்டு மாலை போட்டு மஞ்சள் தேய்த்து வணங்கி வந்து உள்ளிர்கள்...
இவர் எப்படி சாமியாக ஆக்கி
உள்ளிர்கள்...இந்த வேலை செய்பவர் எப்படி ஒழுகமானவராக இருக்க முடியும்...சிந்தியுங்கள் தமிழர்களே (ஹிந்து)நண்பர்களே...!
ஒரு சாதாரண மனிதன் கடவுள் மேல் சாபம் விட்டு அந்த சாபம் பலித்தால் அவர் எப்படி கடவுள் ஆவார்.? சிந்தியுங்கள்..
சிவன் அவர்களது லிங்கத்தையே (பிறப்பு உறுப்பு) காப்பாற்ற முடியவில்லையே
இவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்..?
பார்ப்பனர்கள் புராணம்(வேதம்) என்கிற பெயரில் பொய் புரட்டு,அசிங்க, அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்...
இது தான் அர்த்தமுள்ள ஹிந்து மதமாம்..!! 😄
கொண்டாட்டகதைகள்???
*****†***
இராமனின்
அப்பனுக்கு
அறுபதாயிரம் +
பொண்டாட்டி
நம்பினாய்,
ரிசியின்
மனைவி
கள்ள
உறவால்,
சிவனின்
உறுப்பறுந்து
"சிவலிங்கம்"
உருவானது
வணங்குகிறாய்,
பார்வதி
அழுக்குரண்டை
பிள்ளை
வினாயகன்
கதைநம்பி
கொண்டாடுகிறாய்,
ஆணுக்கும்
ஆணுக்கும்
பிறந்தபிள்ளை
அய்யப்பன்
என்றதும்,
அய்யம்கேட்காமல்
இருமுடிசுமந்து
பொருளை
இழக்கிறாய்,
சீதை
பத்தினி,
அவளை
தொடாமல்
காத்த
இராவணன்,
உன்குலஎதிரியென
பூனூல்
சொல்நம்பி
"ராமலீலா"
மகிழ்கிறாய்,
பூமிகடலுக்குள்
பன்றி அவதாரம்
மீட்பு காதல் கலவி,
"நரகாசூரன்"
பிறப்பு இறப்பு
கொண்டாட்டம்
"தீபாவளி,"
ஒருநாள்
கூத்துக்கு
மீசை இழந்த
கதையாய்
கடன்சுமக்கிறாய்,
இப்படி
நூற்றுகணக்கல்ல
ஆயிரக்கணக்கில்
கதைகள்
அள்ளிவிட்டாலும்,
அனைத்திலும்
தேவர் அசுரர்
போர்
கருவாயிருக்கும்,
யார் அசுரர்
யார் தேவர்
எவர்நலன்காக்கும்
கதைகள்???,
எதுவும்
புரியாமல்
கொண்டாடும்
எம் இழிச்சவாய்
மக்களே,
எப்படி உங்களை
மீட்ப்போம்
என
மனம்தளராமல்,
ஆயிரமாண்டுகள்
அறிவீனத்தை
ஈரோட்டு
சுடர்கொண்டு
எரித்து,
மானமும் அறிவும்
மனிதர்க்கு
அழகென்பதை
விதைத்து,
பகுத்தறிவுடன்
சுயமரியாதை
வாழ்வுக்காய்
சூளுரைக்கும்
"கருப்புச்சட்டை",
-முல்லைவேந்தன்பெரியார்-
தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்று
தமிழர்கள் பெயருக்குப் பின்னால் இருந்த சாதியை அகற்றிய நாள் இன்று...
10/11/1929 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய மாநாட்டில்
இனி பெயருக்கு பின்னால் யாரும் ஜாதியை சேர்க்கக்கூடாது என தீர்மானத்தின் அடிப்படையில்
ஒரு மாநாடு நடத்தி இந்தியாவை வியக்கச் செய்தார்.
இராமசாமி நாயக்கர் எனும் நான் இன்று முதல் இராமசாமி என்று கூறி அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து
தியாகராய செட்டியார் எனும் நான் இன்று முதல் தியாகராயர் என்றார்
(அவரின் நினைவாகத்தான் தியாகராய நகர்)
சவுந்தரபாண்டி நாடார் எனும் நான் இன்று முதல் சவுந்தர பாண்டி
நடேச முதலியார் எனும் நான் இன்று முதல் நடேசன்
என அவரைத் தொடர்ந்து பலர் பின்பற்றி வழிமொழிந்த நாள் இன்று....
இவர்களின் வழியே நாமும் நிற்கின்றோம்.
ஏன் பெரியாரை பெரியாரியத்தை எதிர்ப்பவர்களும்கூட
பெயருக்குப் பின்னால் ஜாதியைச் சேர்ப்பது இல்லை.
கர்வம் கொள்வேன்
இது பெரியார் மண் தான் என்று.
கண்ணில் பட்ட பதிவு
மாணவி: சார், தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?
ஆசிரியர்: எதற்காக கேட்கிறாய்?
மாணவி: தமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.
ஆசிரியர்: அதனால் என்ன?
மாணவி: இப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?
ஆசிரியர்: கிருஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள்.
இஸ்லாமியர்கள் மிலாடி நபி கொண்டாடுகிறார்கள். அதைப் போலத்தான் இதுவும்.
மாணவி: தமிழர்களின் பண்டிகைப் பற்றிப் பேசும்போது நீங்கள் மற்ற மதத்தின் பண்டிகைகள் பற்றி பேசுறீங்களே?!
அப்படினா தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்பது தெளிவாகிறது. அது இந்துமத பண்டிகை என்று புரிகிறது.
ஆசிரியர்: 🥺
மாணவி: சரி, கிறிஸ்துமஸ் கிறிஸ்து பிறந்த நாள், மிலாடி நபி
முகமதுநபி பிறந்தநாள். தீபாவளி யாருடைய பிறந்த நாள் சார்?
ஆசிரியர்: தீபாவளி - நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்.
மாணவி: 🤔 மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத் தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது இந்துமதம் மட்டும் நரகாசுரனின் இறந்த தினத்தை ஏன் இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுகிறது?
ஆசிரியர்: நரகாசுரன் என்கிற கருப்பான பயங்கரமான அசுரன், பார்ப்பனர்கள் யாகம் செய்யவிடாமல் தடுத்தான். அதனால் பார்ப்பனர்களும் தேவர்களும், பகவானிடம் சென்று முறையிடவே கிருஷ்ண அவதாரம் எடுத்து நரகாசுரனை கொன்றாராம்.
மாணவி: இந்தக்கதையில் பார்ப்பனர்கள் என்பது யாரென்று புரிகிறது சார். பார்ப்பனர்கள் இன்றும் கூட இருக்கிறார்கள். அப்படியானால் அந்த அசுரர்கள் யார்? எங்கு இருக்கிறார்கள்?
ஆசிரியர்: புராணங்களில் வரும் வருணனைகளை வைத்துப் பார்த்தால் பெரும்பாலான அசுரர்கள் என்பவர்கள் தமிழர்கள் தான்.
மாணவி: அப்படியானால் தீபாவளி பார்ப்பனர்களின் வெற்றி விழா. தமிழர்களை வீழ்த்திய நாள் 😾😾
ஆசிரியர்: 🥺
மாணவி: பார்ப்பனர்களுக்கு ஆதரவாக தமிழர்களை அழித்தக் கடவுள் எப்படி தமிழர்களுக்கு கடவுளாவார்?
பிராமணர்கள் தங்களைக் காத்த அந்தப் பிராமணக் கடவுளை நினைத்து பெருமையுடன் தீபாவளி கொண்டாடலாம்.
ஆனால் தமிழர்களான நாம் நம் தன்மானத்தை இழந்து எப்படி தீபாவளியை கொண்டாட முடியும்? இது நமக்கு அவமானம் இல்லையா!
ஆசிரியர்: 🥺
மாணவி: நரகாசுரனின் பிறந்த நாளை அல்லவா தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடவேண்டும்.
ஆசிரியர்: நரகாசுரனின் பிறந்த நாள் தான் தெரியாதே?!
மாணவி: நரகாசுரன் இறந்த நாளைக் கண்டுபிடித்த ஆரியப் வைதீக மதத்திற்கு அவரின் பிறந்த நாள் தெரியாதா? இது அயோக்கியத்தனமில்லையா?
தமிழ் அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் ஏன் இதுபற்றி ஒருபோதும் பேசியதில்லை? ஏன் சார் ?
ஆசிரியர்: 🥺 உனக்கு ஏம்மா இவ்ளோ கோவம்?
மாணவி: இனிவரும் தலைமுறைக்காவது சரியான விளக்கத்தைச் சொல்லி இனமானமிக்க தமிழர்களை உருவாக்க வேண்டும் சார்!
ஆசிரியர்: நீ சொல்வது சரி தான் மா.🥺🥺🤔
தமிழர்களின் திருவிழா தைத்திருநாள் தைப்பொங்கல் அதனால் தான் தைப்பொங்கலை திராவிட இயக்க தலைவர்கள் வாழ்த்து சொல்வதோடு நிற்க்காமல் அவர்களும் குடும்பத்துடன் கொண்டாடுவார்கள் ஆனால் தான் வடநாட்டு விழாவான தீபாவளிக்கு திராவிட இயக்க தலைவர்கள் வாழ்த்து சொல்வதில்லை
தீபாவளிக்கு ஏன் திராவிட தலைவர்கள் வாழ்த்து சொல்லுவதில்லை என்பதற்கான விளக்கம் தான் இந்த பதிவு
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1.ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3.விரிந்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4.ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய் வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி ஒரு கோள் என்று கூடத் தெரிய வில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?
1. பூமி தட்டையா? உருண்டையா?
2. தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
3. எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
4. சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?
5.எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?
6. விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
7. அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
8. பூமி மனித உருவா? மிருக உருவமா?
9.மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
10. பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும். இவைகளைக் கொஞ்ச மாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் சொல்லுகிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்துவதும் பட்டாசு சுடுவதும், இந்த பார்ப்பனர்கள் வந்து பார்த்து “கங்கா ஸ்நானம் ஆயிற்றா” என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?
இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக்காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும்.
நாயன்மார்களை பற்றி கருத்துக்கூறும் கவர்னர் R.N ரவிக்கு ! பெரியார் காலத்திலே கிழித்து தொங்க விட்டியிருக்கிறார் ....
பெரிய புராணத்தில் காணும் நாயன்மார்கள் பலர் அவர்களில் அறுபத்துமூவர் சிறந்தவர்கள்.
இவர்கள் "நற்கருமங்கள் செய்து கைலாயத்தை அடைந்தவர்கள்." இதில் "கடவுளே நேரில் வந்து முக்தி கொடுக்கப்பட்டவர்கள் பலர்."
முக்தி பெற இவர்கள் செய்த நற்கருமம் என்ன? என்பது பற்றி சிந்திப்போம்.
1.திருநீலக்கண்ட நாயனார்
இவர் ஜாதியில் குயவர். நடத்தையால் மிக்க இழி நிலை உடையவர். அதாவது காமக்காந்தகரராய் திரிந்தவர் என்பதை அறிந்து இவரது மனைவியார் தம்மை இனி தீண்டக் கூடாது என்றார்.
அதனால் இவர் எந்த மாதரையும் தீண்டாமல் இருந்தார். இவை அறிந்து பரமசிவன் வந்து முக்தி அளித்தார்.
2.இயற்பகை நாயனார்
அவர் தனது மனைவியை ஓர் அயோக்கியப் பார்ப்பான் விரும்ப, அவனுக்கு அளித்து விட்டார்! அதற்காக சிவபெருமான் வந்து முக்தி அளித்தார்.
3.இளையான்குடி மாற நாயனார்
இவர் மனைவி தனது வீட்டுக் கூரையைப் பிடுங்கி அடுப்பெரித்து ஒரு பார்ப்பானுக்கு சோறு சமைத்துப் போட்டார்.
அதற்காக சிவபெருமான் வந்து இருவருக்கும் முக்தி அளித்தார்.
4.மெய்ப்பொருள் நாயனார்
இவர் ஓர் அரசர். இவருக்கு ஞானாபதேசம் செய்வதாய், இந்த அரசரது பகைவன் சிவனடியார் வேடம் தரித்துக்கூற, இவர் மெய்யெனக்கருதி வணங்கும்போது இவரை சிவனடியான் கொன்று விட்டான். அந்த சிவனடியானை, அரசனின் ஆள் கொல்லுகையில் சிவன் வந்து தடுத்தார். இதனால் இவர் முக்தி பெற்றார்.
5.அமர்நீதி நாயனார்
இவரிடம் ஒரு பிரம்மச்சாரி கொடுத்து வைத்த கோவணம் காணாமல் போனதால் அதற்காக சரி எடையாக வேறு துணி கொடுப்பதாகக் கூறி, ஒரு கோவணத்துணிக்கு சரி எடை பார்க்கையில் தானும் தன் மனைவியும் திராசுத் தட்டில் உட்கார்ந்து சரி செய்து அந்த பிரம்மச்சாரிக்கு தங்களை அடிமைப்படுத்திக் கொண்டார்கள்.
அதனால் சிவன் இவர்களுக்கு முக்தி கொடுத்தார்.
6.எறிபத்த நாயனார்
இவர் வேறு ஒரு சிவனடியார் கடவுளுக்குப் பூசை செய்ய பூக்குடலை எடுத்து வருகையில் ஒரு யானை அந்தப் பூக்குடலையைப் பிடுங்கி நாசமாக்கிவிட்டது. அதுகேட்டு எறிபத்த நாயனார் அந்த யானையையும் யானைப் பானையும் வெட்டிக் கொன்றுவிட்டார். இதற்காக சோழராஜன் விசாரித்து அக்குற்றத்திற்குத் தன்னை கொல்லும்படி உடைவாளை எறிபத்தரிடம் கொடுத்தார். எறிபத்தர் அதை வாங்கி தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றார்.
இதற்காக சிவன் வந்து முக்தி அளித்தார்.
7.ஏனாதி நாயனார்
இவரை இவரது பகைவன் கொல்ல நெற்றியில் விபூதி தரித்து வந்து விபூதிப் பையைக் காட்ட நாயனார் வணங்கி செயலற்று நிற்க உடனே பகைவன் கொன்றுவிட்டான்.
அதற்காக சிவபெருமான் முக்தி கொடுத்தார்.
8.கண்ணப்ப நாயனார்
இவர் தனது இரண்டு கண்ணையும் தோண்டி எடுத்து கடவுளுக்குப் புதைத்து தான் குருடனாக இருந்து கொண்டே கடவுளுக்குப் பூசை செய்தவர்.
இவரது இரண்டாவது கண்ணைப் பிடுங்கி கடவுள் கண்ணில் புதைக்கும் போது, கடவுளின் கண் இருக்குமிடம் தெரிவதற்காக தனது ஒரு செப்புக்காலை கடவுள் கண் இருக்குமிடத்தில் வைத்து அடையாளம் கண்டுபிடித்து கண்ணை ஒட்ட வைத்தார்.
பன்றி மாமிசத்தைச் சுவைத்து ருசி பார்த்து கடவுளுக்கு ஊட்டினார். அதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி அளித்தார்.
9.அரிவாட்ட நாயனார்
இவர் தனது செந்நெல் அரிசியைக் கடவுளுக்குப் படைத்துவிட்டு தாம் கார்நெல் அரிசி சாப்பிட்டு வந்தார். அந்த ஊரில் கார்நெல் அரிசி விளையவில்லை. அதனால் பசியோடு இருந்தே செந்நெல் அரிசியை கடவுளுக்கு படைத்து வந்ததால் ஒரு நாள் படைக்க எடுத்துக் கொண்டு கோவிலுக்கு போகும்போது பசி களைப்பால் கால் இடறி விழுந்து விட்டார். படைப்பு உணவு கீழே சிந்திவிட்டது. கடவுளுக்கு இன்று படைக்க உணவு இல்லையே என்று கருதி நாயனார் தன் கழுத்தை அறுத்துக் கொள்ள கத்தியை கழுத்தில் வைத்தார்.
இதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி கொடுத்தார்.
10.ஆனாய நாயனார்
இவர் புல்லாங்குழலில் பஞ்சாட்சரத்தை வாசிப்பார். சராசரங்கள் எல்லாம் ஸ்தம்பித்து நிற்கும். இதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி அளித்தார்.
இந்தப் பத்து நாயன்மார்கள் முக்தி பெற்ற சரிதம் இது. இதைத்தான் பெரிய புராணம் கற்பிக்கிறது. இன்னும் உள்ள நாயன்மார் சரித்திரம் பின்னால் வரும்.
இப்படித்தான் பக்தி செலுத்துவதா? இதற்குத்தான் சிவபெருமான் முக்தி கொடுப்பதா?
இதில் இருந்து பக்தர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்க வேண்டி இருக்கிறது?
கடவுள்கள் எவ்வளவு இழிதன்மை உடையவர்களாக இருக்க வேண்டி இருக்கிறது?
நாயன்மார்களின் புராணத்தைப் படிக்க வேண்டும் என்று கூறும் கவர்னர் R.N ரவி சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
------------------------------------------
சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை-----"விடுதலை", 06.05.1950
அன்புடன்
பெரியார் அம்பேத்கர் கண்ணன் C
மனிதாபிமானத்தை குற்றச் செயலாக பார்ப்பது எத்தகையான போக்கு நீதிபதி கேள்வி? மூத்த பத்திரிகையாளர் சமூக ஆர்வலர் அய்யநாதன்
