1 146
Subscribers
No data24 hours
-37 days
-630 days
Posts Archive
1 146
தமிழக விவசாய தொழிலாளர்கள் மத்தியில் சிறுநீரக செயலிழப்பு அதிகரிப்பது ஏன்? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/cqx3gvw2q44o
1 146
*தென்னை பரப்பு விரிவாக்கத் திட்டம்*
*திட்டத்தின் நோக்கம்:*
֍ புதிய பரப்பளவில் தென்னை தோட்டங்களை உருவாக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நிதி உதவி வழங்குதல்.
*திட்டக் காலம்:*
֍ 2 ஆண்டுகள்.
*நிதி உதவி:*
֍ ஒரு ஹெக்டேருக்கு ₹56,000 இரண்டு தவணையாக பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் (முதல் வருடம் ₹28,000 & இரண்டாவது வருடம் ₹28,000).
*தகுதி:*
*பரப்பளவு:* குறைந்தபட்சம்: 0.08 ஹெக்டேர் (20 சென்ட்) / பயனாளி (குறைந்தபட்சம் 1௦ நாற்றுகள் நடவு செய்திருக்க வேண்டும்)
*அதிகபட்சம்:* 2 ஹெக்டேர் / பயனாளி
*நிபந்தனைகள்:*
֍ புதிய நடவு செய்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெறமுடியும்.
֍ ஏற்கனவே உள்ள மரங்களுக்கு இடையில் நடுதல் அனுமதிக்கப்படாது.
֍ எல்லை நடவு / வரப்பு நடவு / வயலோர நடவு அனுமதிக்கப்படாது.
*விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:*
֍ பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் புதியதாக நாற்றுகள் நடப்பட்ட நிலத்தில் பயனாளி நின்று புவிசார் குறியீடுடன் (GPS) புகைப்படம் வைக்கவேண்டும்.
֍ அங்கீகரிக்கப்பட்ட நாற்றங்கால் நிறுவனத்திலிருந்து பில் / வவுச்சர்கள்
֍ ஆதார் அட்டையின் நகல்
֍ வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (ஆதார் இணைக்கப்பட்ட கணக்கு)
֍ அடங்கல் மற்றும் சிட்டா நகல்கள்
֍ தோட்டக்கலை துறை அலுவலரின் சான்றிதழ் (நடவு மற்றும் செலவினங்கள் பற்றிய பரிந்துரை)
*விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய:*
https://coconutboard.gov.in/docs/aepapltamil1.pdf
*தொடர்புக்கு:*
தென்னை வளர்ச்சி வாரியம், மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்.
☎ 0422 – 2993684
1 146
[18/08, 12:49 pm] PONNUSAMY K: https://www.facebook.com/100064054751782/videos/2358577827876860/?mibextid=rS40aB7S9Ucbxw6v
[18/08, 12:49 pm] PONNUSAMY K: https://www.facebook.com/reel/2049181425819689/?mibextid=rS40aB7S9Ucbxw6v
1 146
👆அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த "வாழைத் திருவிழா", திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 32வது நிறுவன நாள் விழா, வருகிற 21.08.2025 அன்று (வியாழக் கிழமை) விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியை *" வளம் நலம் தரும் சீர்மிகு வாழைச் சாகுபடி "* என்னும் கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், வாழை விவசாயத்தில் இணையதளம், ஆளில்லா விமானம், செயற்கைக் கோள் தகவல், செயற்கை நுண்ணறிவு (AI) ஒன்றிணைப்பில், தானியங்கி நீர்வழி-உரமிடலுடன் கூடிய *துல்லிய பண்ணையம்* செய்முறையில் நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. இது முற்றிலும் புதுமையான "அதிநவீன" முறையாகும்.
காலநிலை மாறுபாடு, வேளாண் இடுபொருள் விலையேற்றம், விவசாயத் தொழிலாளர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், இந்த தொழில்நுட்பங்கள் நம்முடைய விவசாய நண்பர்களுக்கு ஒரு அரிய வரப்பிரசாதமாக அமைய உள்ளன.
மேலும், இது சம்பந்தமான ஆழ்ந்த அனுபவம் கொண்ட வல்லுனர்களைக் கொண்டு, தொழில்நுட்பக் "கருத்துக்கடைவு" (தொழில்நுட்ப அமர்வு) நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் வாழை விவசாயிகளுக்கு இது முற்றிலும் புதுமையான தகவலாக அமையவுள்ளது.
மேலும், இதில் ஆர்வத்துடன் விரைந்து வந்து, பதிந்து கொண்டு கலந்துகொள்ளும் வாழை விவசாயிகளுக்கு திசுவாழைக்கன்று, திரவ-பனானா சக்தி, நுண்ணுயிர் எதிர்உயிரிக் கலவை, தொழில்நுட்ப கையேடுகள் கொண்ட *பொற்கிழியும்* வழங்கப்பட உள்ளன ... முந்துங்கள்!
மேலும், வாழைச் சாகுபடியில் பயன்படுத்தும் வேளாண் இடுபொருள் உற்பத்தி/விற்பனையாளர்கள் பங்கு கொள்ளும் கருத்துக்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை அனைத்து வாழை விவசாயிகளும் பயன்படுத்திக் கொண்டு, வாழை விவசாயத்தில் உச்சத்தை அடைய, தங்களை *"வருக வருக ...🙏🙏"* என வரவேற்கிறது, திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.
*குறிப்பு:*
👉மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
👉சாதனை புரிந்த விவசாயிகள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்திக் குழு, வேளாண் சமூக ஊடகம், வேளாண் அறிவியல் நிலையம்... போன்றவர்களுக்கு விருது வழங்குதல்.
👉தேசிய வாழை ஆராய்ச்சி மைய பண்ணையை பார்வையிடல்.
👉விழாவிற்கு கட்டணமில்லா அனுமதி.
👉திருச்சி பஸ்நிலையத்தில் இருந்து விழா நிகழ்விடத்திற்கு, காலை 8.30 மணிக்கு, வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
