SUCCESS CREATION TNPSC ACADEMY
SUCCESS CREATION TNPSC ACADEMY - DHARMAPURI ONLINE TEST BATCH For GROUP-IV YouTube https://youtube.com/@successcreationdpi?si=fbd-ULKb2sd6XaR_ Contact no: 95009 78125
Ko'proq ko'rsatish551
Obunachilar
+224 soatlar
+127 kunlar
+1730 kunlar
- Kanalning o'sishi
- Post qamrovi
- ER - jalb qilish nisbati
Ma'lumot yuklanmoqda...
Obunachilar o'sish tezligi
Ma'lumot yuklanmoqda...
Hammasini ko'rsatish...
SUCCESS CREATION TNPSC ACADEMY
SUCCESS CREATION TNPSC ACADEMY - DHARMAPURI ONLINE TEST BATCH For GROUP-IV YouTube
https://youtube.com/@successcreationdpi?si=fbd-ULKb2sd6XaR_Contact no: 95009 78125
SUCCESS CREATION இன் இலவச குரூப் 4
தேர்வு எண் 14
தேர்வு நாள் 22-05-2024
# மாவீரன் பகத்சிங் பிறந்த தினம் - செப்டம்பர் 28.
#BhagatSingh
❇️ பகத்சிங் சிறுகுறிப்பு:
🌀 இயற்பெயர்: பகத் சிங்
🌀 புனைப்பெயர் - "ஷாஹித் பகத்சிங்"
(ஷாஹித் - மாவீரன்)
🌀 பிறந்த தினம்: செப்டம்பர் 28, 1907
🌀பெற்றோர்: சர்தார் கிசன் சிங் மற்றும் வித்யாவதி
🌀 பிறந்த இடம்: பங்கா [ பஞ்சாப் ]
🌀 மறைந்த தேதி: மார்ச் 23, 1931 [24 வயதில் தூக்கிலிடப்பட்டார்].
❇️ பகத்சிங் விடுதலைப் போராட்ட வரலாறு:
💫 1919ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு பகத் சிங் மனதில் நீங்கா துயரை ஏற்படுத்தியது அந்த சம்பவம் நிகழ்ந்த போது அவருக்கு அவரது வெறும் 12 மட்டுமே.
💫 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார்.
💫 பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்
💫 ஆங்கில ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் இவரும் ஒருவர் ஆவர்.
💫 காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு காந்தியின் அகிம்சை முறையினை விடுத்து சண்டையிட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அவர் நினைத்தார்.
💫 இந்தியாவின் அரசியல் அமைப்பு நிலைமையினை பற்றி தெரிந்துகொள்ள ஆங்கிலேய அரசு ஒரு குழுவினை இந்தியாவில் நியமித்தது அந்த குழு தான் ” சைமன் குழு ”.
💫 இந்த சைமன் குழுவினை எதிர்த்து லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் அமைதியான ஒரு அணிவகுப்பினை நடத்தினார்.
💫 அவர்களை கலைக்க ஆங்கிலேய காவல் மேல் அதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் உத்தரவிட்டார். மேலும் லாலா லஜபதி ராயை நேரடியாக தாக்கினார். இதனால் லாலா லஜபதி ராய் அவர்கள் படுகாயம் அடைந்தார்.
💫 ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்பவர் மூலம் படுகாயம் அடைந்த லாலா லஜபதி ராய் அடிபட்ட அடுத்த மாதம் காலமானார்.
💫 இதனால் கோபமுற்ற பகத் சிங் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்று நினைத்து அவருக்கு பதிலாக சாண்டர்சை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி மூலம் சுட்டுக்கொன்று அங்கிருந்து தப்பிச்சென்றார்.
❇️ இறப்பு:
💠 1929 ஆக.,8ல் சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங் தனது 24 வயதில் ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோருடன் ஆங்கில அரசால் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
❇️ சிறப்பு மற்றும் கௌரவம்:
🔅1981-ம் ஆண்டு மார்ச் 23-ம் நாள் பகத்சிங்கின் 50 ஆவது நினைவு தினம் அன்று அவரது மூதாதையர்கள் கிராமமான கட்கர் கலனில் “ஷாஹித் இ அசாம் சர்தார் பகத்சிங்” என்னும் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
🔅பகத்சிங் எங்கு குண்டெறிந்தாரோ அதே இடத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் 2008 சுதந்திர தினத்தன்று அவரது 18 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
🔅2008 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ இதழ் ‘சிறந்த மனிதர்’ என்கிற பட்டத்திற்காக நடத்திய கணக்கெடுப்பில் காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸை விட பகத் சிங் அதிகபட்சமான வாக்குகளை பெற்றும் “சிறந்த இந்தியர்” என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🔅பகத்சிங் தாயார் வித்யாவதி பஞ்சாபின் தாயார் என புகழப்பட்டார்.
📝குறிப்பு:
✍️ பகத்சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 ஆம் நாள் "ஷஹீத் திவாஸ்" (Shaheed Diwas) அல்லது "சர்வோதயா தினம்" என்று அழைக்கப்படுகிறது.
👍 5