cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

வணக்கம் நண்பர்களே நமது சமையல் குறிப்பு சேனலில் Best YouTube Cooking & Review சேனல் வீடியோ பதிவுகள் தினமும் அப்லோடு செய்யப்படும் 🔰சைவ&அசைவ சமையல் 🔰ஆரோக்கியமான சமையல் 🔰நோயை குணப்படுத்தும் சமையல் 🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

Больше
Рекламные посты
722
Подписчики
Нет данных24 часа
+77 дней
+3130 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

மட்டன் தக்காளி கூட்டு.ரெசிபி. தேவையான பொருட்கள்: மட்டன் - 1/4 கிலோ அவித்தது சின்ன வெங்காயம் - 10 நறுக்கிய வெங்காயம் பெரிய வெங்காயம் - நறுக்கியது தக்காளி - 3 பொடியாக நறுக்கியது குழம்புப் பொடி - 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிது காஷ்மீர் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் கறிமசால் தூள் - 1 டீஸ்பூன் செய்முறை: 1. வாணலியில் 11/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் இட்டு நன்கு வதக்கவும். 2. வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளிகளை தேவையான அளவு உப்புச் சேர்த்து பேஸ்ட் ஆகும் வரை வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். 3. வெங்காயம் தக்காளி வதங்கியதும் கறி அவித்த தண்ணீர் அதில் ஊற்றி குழம்புப் பொடி மிளகாய் தூள் மற்றும் கறிமசால் சேர்த்து கலந்து விடவும். 4. இப்போது அவித்த மட்டனைச் சேர்த்து கிரேவி பதம் வரும் வரையில் லொப்பிளேமில் கொதிக்கவிடவும் . 5. கிரேவி பதம் வந்ததும் கருவேப்பிலை கொத்தமல்லி இழைகளைத் தூவி இறக்க தாராஸ் கிச்சன் ஸ்டைலில் சுவையான மட்டன் தக்காளி கூட்டு ரெடி .
Показать все...
உளுந்தங்களியின் பயன்கள்! வயதிற்கு வந்த இளம் பெண்பிள்ளைகளுக்கு கர்ப்பப்பை வலுப்பெரும். கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் பி மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. உளுந்து நார்ச்சத்து அதிகம் கொண்டதாகும். உளுந்து களி சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. உளுந்துகளியை சாப்பிடுவதால் வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை சேர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது. உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும். சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் இருக்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற செய்யும். உளுந்து அபரிமிதமான இரும்பு சத்தை கொண்டது. உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது உளுந்து களியை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். எளிதில் சோர்வடையாமல் நீண்ட நேரம்திறனை கொடுக்கும். உளுந்து களியை தினந்தோறும் இருவேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு தசைகள் நன்கு வலிமையடையும். செயலாற்றும்.
Показать все...
👍 2
கேரளா ஃபேமஸ் பழம் பொரி... தேவையான பொருட்கள்: மைதா - 1/2 கிலோநேந்திரம் பழம் - 5சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்மஞ்சள்தூள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுதேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை: பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.• மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். • பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்து, கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள். சுவையான பழம்பொரி தயார்.
Показать все...
இளநீர் பிரியாணி செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – ஒரு கப் நெய் – இரண்டு டேபிள்ஸ்பூன் முந்திரி – இரண்டு டேபிள்ஸ்பூன் திராட்சை – இரண்டு டேபிள்ஸ்பூன் இளநீர் – ஒரு கப் இளநீர் வழுக்கை (ஒன்றிரண்டாக அரைத்தது) – ஒரு கப் மில்க்மெய்ட் – கால் கப் உப்பு – ஒரு சிட்டிகை செய்முறை: பாசுமதி அரிசியை பதினைந்து நிமிடம் ஊறவிடவும். முந்திரி, திராட்சை நெய்யில் வறுக்கவும். குக்காரில் அரிசியை சேர்த்து இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட் ஆகியவற்றை ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
Показать все...
பாய் வீட்டு நெய் சோறு. தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி - 2 டம்ளர் பெரிய வெங்காயம் - 2 சின்ன தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் புதினா ,மல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு சமையல் எண்ணெய் - 3 ஸ்பூன் நெய் - 2 ஸ்பூன் முந்திரிப் பருப்பு - 5 பட்டை - இரண்டு துண்டு ஏலக்காய் - 2 கிராம்பு - 2 பிரிஞ்சி இலை - 2 சோம்பு - கால் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி கொள்ளவும். தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் ஊற்றி சூடானவுடன் பட்ட ,சோம்பு, கிராம்பு ஏலக்காய் ,பிரிஞ்சி இலை போட்டு தாளித்து அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுத்து விட்டு நறுக்கிய வெங்காயம் , பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும் . வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி ,பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். பின்பு அதனுடன் தக்காளி ,புதினா ,கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும் இரண்டு டம்ளர் அரிசிக்கு அதே டம்ளரில் மூன்றரை {3 1/2 } டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்க்கவும். தண்ணீரில் உப்பு பார்த்துவிட்டு குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைக்கவும். பின்பு 10 நிமிடம் கழித்து திறந்து கிளறினால் மிகவும் சுவையான கம கமன்னு மணக்கிற பாய் வீட்டு நெய் சோறு ரெடி. இந்த சாதத்திற்கு மட்டன் கிரேவி அல்லது சிக்கன் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
Показать все...
👍 1
ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிடலாம்? ஒரு நாளைக்கு உண்ணக்கூடிய சர்க்கரையின் அளவு என்பது நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளின் அளவு மற்றும் நமது செயல்பாடுகளை பொறுத்தது.பொதுவாக முடிந்தவரை அதிகமான சர்க்கரைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கவில்லை. அதிக சர்க்கரை சாப்பிடுவது தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும். இது கூடுதல் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் கலோரிகளை வழங்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு வளர்சிதை மாற்றத்தை சேதப்படுத்தும். பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் இருந்து இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் மற்றும் சர்க்கரைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பது மிகவும் முக்கியம்.பழங்கள், காய்கறிகளில் நீர், நார்ச்சத்து மற்றும் பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் முற்றிலும் நல்லது, ஆனால் சேர்க்கப்பட்ட சர்க்கரைக்கு இது பொருந்தாது.மிட்டாய்களில் சர்க்கரை முக்கிய மூலப்பொருளாகும். குளிர்பானங்கள், வேகவைத்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்களில் சர்க்கரை உள்ளது. ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நாம் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளில் வெறும் 10% மட்டும் தான் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கிறது.மேலும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளில் இயற்கை சர்க்கரையும் அடங்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக உங்கள் ஓட்ஸ் மீலில் தேனை சேர்த்தால், ஓட்ஸ் மீலில் இயற்கையான மூலத்திலிருந்து சேர்க்கப்பட்ட சர்க்கரை உள்ளது.பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவுகளில் உள்ள இயற்கை சர்க்கரையை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, இதய நோய், சில புற்றுநோய்கள், பல் சிதைவு, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA)படி, ஒரு நாளில் உண்ண வேண்டிய அதிகபட்ச சர்க்கரை அளவு:ஆண்கள்: ஒரு நாளைக்கு 150 கலோரிகள் (37.5 கிராம் அல்லது 9 டீஸ்பூன்)பெண்கள்: ஒரு நாளைக்கு 100 கலோரிகள் (25 கிராம் அல்லது 6 டீஸ்பூன்)நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால், மேற்கூறிய அளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இந்த சிறிய அளவிலான சர்க்கரையை எரித்துவிடலாம்.இருப்பினும் உணவில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Показать все...
ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் பிரச்சனையா? சமையல் எண்ணெய் விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரும் சமையலுக்கு குறைந்த கலோரி எண்ணெயை பயன்படுத்துகின்றனர். அந்தவகையில், மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்து மோகம் அதிகரித்துள்ளது.குறிப்பாக, ஆலிவ் எண்ணெய் சாலட் டிரஸ்ஸிங்கிற்கு பயன்படுத்தப்பட்டது. ஆலிவ் எண்ணெய் நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நிபுணர்களின் கூற்றுப்படி, சமையலுக்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில், நாம் ஆலிவ் எண்ணெயை சூடாக்கும் போது, அது ஸ்மோக் பாயின்ட்டை விட சூடாகும். இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் கலவைகள் தீப்பொறிகளாக உடைகின்றன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களாக மாறி நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க ஆரம்பிக்கின்றன.இந்த தீவிர கலவைகள் உடலில் உள்ள டிஎன்ஏ, லிப்பிடுகள் மற்றும் புரதங்களுடன் வினைபுரியத் தொடங்குகின்றன. இதனால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருக்கலாம். இதன் காரணமாக, அழற்சி நோய்கள், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
Показать все...
இளம் வயது மாரடைப்பு: தவிர்ப்பது எப்படி? அனைவரது வேலையில் அழுத்தம் இருக்கதான் செய்கிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி இந்த மூன்று விஷயங்களிலும் நேரத்தை செலவிட வேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இதற்கு நாம் நேரம் செலவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை உடலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் கட்டாயம் அவசியம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக தைராய்டு, BP, கொலஸ்ட்ரால், சர்க்கரை, உடல் எடை, ஈசிஜி, எக்கோ, திரெட்மில் ஆகிய அடிப்படை பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது அவசியம்.இந்த பரிசோதனைகளை செய்வதன் மூலம் உடலில் ஏதாவது பிரச்சனை உள்ளதா? மாரடைப்பு வருவதற்க வாய்ப்பு உள்ளதா? முன் குடும்பத்தில் யாருக்காவது சிறு வயதில் மாரடைப்பு வந்துள்ளதா? புகைபிடித்தல் பழக்கம், மது அருந்து பழக்கம் போன்ற பழக்கங்கள் உள்ளதா? இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.யாருக்கு அபாயகரமான அறிகுறிகள் உள்ளதோ அவர்களில் நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.உணவு, உறக்கம், உடற்பயிற்சி எல்லாம் நாம் மருத்துவர்களிடம் சென்ற பிறகே ஒழுங்கு படுத்த முயற்சிக்கோம். ஆனால் இந்த பழக்கம் எல்லாம் குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளிகளில் கற்றுதர வேண்டும். பள்ளிகளில் உணவு பற்றிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு பற்றி ஆலோசனைகளை குழந்தை பருவத்தில் இருந்தே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ குழந்தைகளில் ஆழ்மனத்தில் பதிய வைக்க வேண்டும்.இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு உடல் எடை, உணவு முறை போன்ற பிரச்சனைகள் இருந்த உடல் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரை அணுகுவது நல்லது. தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்து நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். முக்கியம் பயம் என்பது அனைவருக்கும் வருவது உண்டு. சின்ன படபடப்பு இருந்தால் உடனே அது கார்டியாக் இருக்குமோ என்ற பயம் அனைவரும் வந்து விடுகிறது. நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.சரியான உடற்பயிற்சியும், உணவு பழக்கமும் மாரடைப்பு தடுக்க வாய்ப்புள்ளது.
Показать все...
சர்க்கரை அளவை குறைக்க உதவும் பேரிச்சம் பழ விதை பவுடர்! இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த நீரிழிவு நோய். உலகளவில் உள்ள மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான நோயாகவே நீரிழிவு நோய் இருந்து வருகிறது. இந்த வகை நீரிழிவு நோயைத் தவிர்க்க சில ஆரோக்கியமான உணவுமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் கையாள்வது அவசியமாகும்.அந்த வகையில் நீரிழிவு நோயைத் திறம்பட கட்டுப்படுத்துவதில் பேரிச்சம்பழ விதை பவுடர் பெரிதும் உதவுகிறது. அதென்ன பேரிச்சம்பழ விதை?இன்று பெரும்பாலானோர் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு, பேரிச்சம்பழ கொட்டையைத் தூக்கி எறிகின்றனர். ஆனால், பேரிச்சம்பழம் மட்டுமல்லாமல் அதன் விதைகள் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கிறது. இதில் நீரிழிவு நோயாளிகளுக்கு பேரிச்சம்பழ விதை பவுடர் தரும் நன்மைகளைக் காணலாம்.பேரிச்சம்பழம் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கும் பண்புகளுக்காக மிகவும் பெயர் பெற்றதாகும். ஆனால், இதன் விதைகளை நம்மில் பெரும்பாலானோர் நிராகரித்து விடுகிறோம். ஆனால், இந்த பேரிச்சம்பழ விதைகள் சத்தானதா என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அதிலும் குறிப்பாக இதை தூளாக அரைத்து உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. அதில் ஒன்றே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாகும்.பேரிச்சம்பழத்தினைப் போலவே, பேரிச்சம்பழ விதைகளும் ஊட்டச்சத்து மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பேரிச்சம்பழ விதைகள் டயட்டரி ஃபைபர், பாலிபினால்கள் மற்றும் ஒலிக் அமிலம், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த விதைகளில் உள்ள கூறுகள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. எனவே, இவை நீரிழிவு நோயாள் அல்லது நீரிழிவு நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.பேரிச்சம்பழ விதைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், சீரான தன்மையை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.பேரிச்சம்பழ விதை பவுடரை தயார் செய்யும் முறை* முதலில் குறிப்பிட்ட அளவிலான பேரிச்சம்பழ விதைகளை எடுத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து, வெயிலில் ஒரு நாள் முழுவதும் உலர வைக்கலாம். பின்னர், விதைகளை கடாய் ஒன்றில் சேர்த்து, மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ள வேண்டும். இதில் விதைகள் எரிக்கப்படாமல் அல்லது கருகாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். மேலும், இந்த விதைகள் மிருதுவாகும் வரை கையால் நசுக்க வேண்டும்.இவ்வாறு வறுத்த விதைகளை கைகளால் நசுக்கி பிறகு மிக்சியில் அரைத்துக் கொள்ளலாம். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமிக்க பேரிச்சம்பழ விதைத்தூள் தயாராகி விட்டது.இந்த பொடியை ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் கலந்து தினந்தோறும் காலை நேரத்தில் குடிக்கலாம்.கவனிக்க வேண்டியவைபேரிச்சம்பழ விதைகள் சாத்தியமான பலன்களைத் தருவதாக இருப்பினும், இதை மிதமாக உட்கொள்வது அவசியமாகும். முதலில் மெதுவாகத் தொடங்கி, உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக வேறு ஏதாவது உடல்நல பிரச்சனைகள் இருப்பின், எந்தவொரு பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன்னர் நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்வது நல்லது.
Показать все...
Выберите другой тариф

Ваш текущий тарифный план позволяет посмотреть аналитику только 5 каналов. Чтобы получить больше, выберите другой план.