தமிழ் மின் நூலகம்
Открыть в Telegram
தமிழ் மின் நூலகம் Telegram சேனலில் புதிய மற்றும் பழைய புத்தகங்கள் 📚 pdf வடிவில் கிடைக்கும். புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதே இந்த சேனலின் நோக்கம். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
Больше4 240
Подписчики
Нет данных24 часа
Нет данных7 дней
Нет данных30 день
Архив постов
4 240
கிச்சன் to கிளினிக் (நோயற்ற வாழ்வுக்கான உணவு ரகசியம்)
நூலாசிரியர் : அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
நூல் வகை : சமையல், உணவு விழிப்புணர்வு, ஆரோக்கியம்
குறிப்பு:
இனி உங்கள் சமையலறை உங்கள் இல்லத்தில் அனைவருக்கும் ஆரோக்கியத்தைத் தரட்டும்!
4 240
கிச்சன் to கிளினிக் (நோயற்ற வாழ்வுக்கான உணவு ரகசியம்)
நூலாசிரியர் : அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்
குறிப்பு:
புதிது புதிதாகப் பல நோய்கள் வருகின்றன எனக் கவலைப்படும் நாம், நிறைய நோய்களுக்கு நம் உணவே காரணம் என்ற உண்மையை ஏற்க மறுக்கிறோம். நம் உணவின் சாரம்தான் நாம். ஒரு தலை முறைக்கு முன்பு கடைவீதியில் பார்த்தால், விதைகளைக் கோணியில் பரப்பி விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அவரை, வெண்டை, பூசணி, கத்தரி என இந்த விதைகளை வாங்கித் தோட்டத்தில் நட்டு நம் சமையலுக்குப் பயன்படுத்தி வந்தோம். கனிந்து சிவந்த தக்காளி ஒன்றைத் தோட்டத்து மண்ணில் பிழிந்துவிட்டால், செடிகளாய் முளைத்துக் காய்க்கும். கொத்தமல்லி விதைகளைத் தூவிவிட்டால், மல்லித்தழை வளர்ந்து நிற்கும்.
பையைத் தூக்கிக்கொண்டு காய்கறி மார்க்கெட்டுக்கு போனவர்கள் குறைவு. அன்று விதைகள் விற்ற கடைகளில் இன்று காய்கள் மட்டுமே விற்கிறார்கள். நம் தோட்டத்தைத் துறந்துவிட்டு, எந்த மண்ணிலோ, எந்தத் தண்ணீரிலோ, என்னென்னவோ மருந்துகள் கொட்டி விளைவித்த காய்களையும் கனிகளையும் வாங்கிச் சாப்பிடுகிறோம். அதையாவது சரியாகச் செய்யலாமே என்ற ஆதங்கத்தின் விளைவுதான் இந்த நூல். ‘குங்குமம்’ இதழில் இது தொடராக வெளிவந்தபோது, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. ‘எதெல்லாம் கெட்டது’ என்பதை மட்டுமே சொல்லி பயமுறுத்தாமல், ‘எப்படி நல்லவற்றைத் தேடலாம்’ என்று சொல்லும் ஆரோக்கிய வழிகாட்டியாகவும் இருப்பது இந்த நூலின் சிறப்பு.
இனி உங்கள் சமையலறை உங்கள் இல்லத்தில் அனைவருக்கும் ஆரோக்கியத்தைத் தரட்டும்!
4 240
கிச்சன் to கிளினிக் (நோயற்ற வாழ்வுக்கான உணவு ரகசியம்)
நூலாசிரியர் : அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
நூல் வகை : சமையல், உணவு விழிப்புணர்வு, ஆரோக்கியம்
4 240
'முடியும் முடியும்' என்றே சிந்தியுங்கள்!
குறிப்பு:
கல்கண்டு வார இதழில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள்.
இந்த நூலில் ‘முடியும் முடியும்’ என்று சிந்தித்து வெற்றிபெற 75க்கும் மேற்பட்ட சாதனையாளர்களின் வெற்றி இரகசியங்களும், குணநலன்களும் தரப்பட்டுள்ளன.
4 240
'முடியும் முடியும்' என்றே சிந்தியுங்கள்!
நூல் வகை : தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம்
குறிப்பு:
கல்கண்டு வார இதழில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள்.
இந்த நூலில் ‘முடியும் முடியும்’ என்று சிந்தித்து வெற்றிபெற 75க்கும் மேற்பட்ட சாதனையாளர்களின் வெற்றி இரகசியங்களும், குணநலன்களும் தரப்பட்டுள்ளன.
சாதனையாளர்களை அடையாளம் காட்டுவதுடன் ஒவ்வொருவரும் தங்களின் உறுதியான நல்ல எண்ணங்களை நிஜத்தில் நிறைவேற்றிக் கொள்ள 27 வகையான பயிற்சி முறைகளும் தரப்பட்டுள்ளன. இவற்றுள் மனச் சித்திரமாக எழுதும் முறை, மூச்சைக் கவனிக்கும் பயிற்சி, மனஆற்றலை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி, விடாமுயற்சிக்காரராக வாழ எளிய வழி, ஆழ்மனதை ஆற்றலுடன் செயல்பட வைக்க என ஐந்து பயிற்சிகளை மட்டுமாவது தினமும் செய்து வந்தால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக, செயல் நிறைந்த நாளாக, நமக்கும் அமையும். இந்தப் பயிற்சிகள் நேரடியாக நமது மனத்தை வளப்படுத்தி எல்லாத் தடைகளையும் சமாளித்து வெற்றி பெற தேவையான சக்தியையும் தொடர்ந்து வழங்கும்.
பிரச்சினைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அமைதியால் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் சரியான வழியைக் கண்டுபிடித்து விடலாம்.
உங்கள் மன உறுதியைக் குறைக்கும் நண்பர்களையும் பிற சக்திகளையும் உங்கள் இதயத்துக்குள் அனுமதிக்காதீர்கள். எப்போதும் நல்லதை மட்டுமே எண்ணி, அதை மட்டுமே செய்வது என்பதில் உறுதியாக இருங்கள். சில பிரச்சினைகளுக்கு நாம் அமைதியாக இருந்து காரியங்களைச் செய்து கொண்டே இருந்தால் போதும். அந்தப் பிரச்சினை தானாகயே விலகிவிடும்.
ஏற்கனயே நம்மால் ஜெயிக்க முடியாத பிரச்சினைகளுக்குக் கூட நமது வெற்றிகள்தான் ஜெயிக்க வைக்கும். புதிய வெற்றிகள் பழைய தோய்விகளையும் வெற்றிகரமாக்க புதிய வழிகளை காண்பித்தருளும். எனவே, மன உறுதியுடன் காரியங்களைச் செய்பவராக உங்களை நீங்களே முயற்சி செய்து உயர்த்திக் கொள்ளுங்கள். காரியங்களைத் தொடர்ந்து செய்யும் மன உறுதியிலிருந்துதான் ஒவ்வொரு மனிதனும் நீதிநெறியிலும் நியாய உணர்விலும் பக்குவப்பட்ட மாபெரும் மனிதனாக உயர்கிறான்.
4 240
'முடியும் முடியும்' என்றே சிந்தியுங்கள்!
நூலாசிரியர் : கே.எஸ்.சுப்ரமணி
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
மொழி : தமிழ்
பக்கம் : 120
வருடம் : 2011
நூல் வகை : தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம்
4 240
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : எதிர் வெளியீடு
நூல் வகை : மருத்துவ அரசியல், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2017
குறிப்பு:
இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்.
4 240
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : எதிர் வெளியீடு
நூல் வகை : உடல் நலம், மருத்துவ அரசியல், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2017
குறிப்பு:
இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்.
மருத்துவ ஆய்வுக்கூடங்கள் ஆங்கில மருத்துவத்தின் அடிப்படை அஸ்திவாரம். அதுமட்டுமல்லாமல், அறிவியல் பூர்வமானவை என்று நம்பப்பட்டு வருபவை. ஆங்கில மருத்துவத்தின் நோயறிதல் முறைகள் இவை என்ற காலம் போய், எல்லா மருத்துவங்களுக்கான பொது நோயறிதல் முறைகளாக ஆய்வுக்கூடங்கள் கருதப்படுகின்றன. மரபுவழி மருத்துவங்களின் தனித்தன்மையான நாடி பரிசோதனை போன்ற தொன்மையான கலைகளின் அழிவிற்கும் அடிகோலியவை இந்த ஆய்வுக்கூடங்கள். அறிவியல் கருவிகளான மைக்ரோஸ்கோப், கலோரி மீட்டர், செண்ட்ரிபியூஜ், ஆட்டோ அனலைசர், கம்ப்யூட்டர் போன்றவை பயன்படுத்தப்படுவதால் மருத்துவ ஆய்வுக்கூடங்கள் விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடங்கள் அளவிற்கு மரியாதை செய்யப்படுகின்றன. ஆய்வுக்கூடங்கள் குறித்த விமர்சனங்களை எழுப்பும் நபர் அறிவியலுக்கு எதிரானவராக மாற்றப்படக்கூடும் என்பதால் இவ்வகை விமர்சனங்கள் முழுமையாக எழவில்லை.
வாருங்கள்... மருத்துவ ஆய்வுக்கூடங்களில் அப்படி என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
4 240
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : எதிர் வெளியீடு
குறிப்பு:
இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்.
4 240
உங்கள் லேப் ரிப்போர்ட் பொய் சொல்லலாம்!
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : மருத்துவ அரசியல், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2015
குறிப்பு:
இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்.
மனிதர்கள் நோயாளிகளா, இல்லையா என்று ‘சோதித்து’ சான்று கொடுக்கும் மருத்துவ ஆய்வுக்கூடங்களை (லேப் - டய்க்னோஸ்டிக் சென்டர்) தொடங்க பெரிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஏதும் கிடையாது. யார் வேண்டுமானாலும் ஒரு லேபரட்டரியை தொடங்கிவிட முடியும். அவர் படித்தவரா, இல்லையா என்றுகூட யாரும் கேட்கமாட்டார்கள். அதேபோல, மருத்துவக் கவுன்சிலின் அனுமதி இல்லாமலேயே யார் வேண்டுமானாலும் சார்பு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கலாம். இந்த ஆய்வுக்கூடங்களுக்கு இந்திய அளவில் மதிப்பீட்டுச் சான்று வழங்குவது நேஷனல் அக்ரெடிஷன் போர்ட் ஃபார் டெஸ்டிங் அண்ட் காலிப்ரேஷன் லேபரட்டரீஸ் அமைப்பு மட்டுமே. ஆனால், இதில் அனுமதிபெற வேண்டும் என்பது ஆய்வுக்கூடங்களுக்கு கட்டாயமல்ல. மொத்தத்தில் ஆய்வுக் கூடங்களைக் கண்காணிப்பதற்கென்று எந்த ஒரு அமைப்பும் இல்லை.
4 240
உங்கள் லேப் ரிப்போர்ட் பொய் சொல்லலாம்!
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : உடல் நலம், மருத்துவ அரசியல், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2015
4 240
உங்களுக்கு நீங்களே டாக்டர்!
நூலாசிரியர் : டாக்டர் எம்.என்.சங்கர்
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
மொழி : தமிழ்
பக்கங்கள் : 107
4 240
உங்களுக்கு நீங்களே டாக்டர்!
நூலாசிரியர் : டாக்டர் எம்.என்.சங்கர்
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
மொழி : தமிழ்
பக்கங்கள் : 107
குறிப்பு:
லேசாக தலை வலித்தாலே ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் ஓடி, ஸ்கேன் எடுத்து, இன்னும் பல சோதனைகளைக் கடந்து தலை வலியைக் கூட்டிக் கொள்கிற புதிய தலைமுறை நோயாளிகளின் காலம் இது. ஆனால் இந்த மண்ணில்தான் மகத்தான மருத்துவப் பாரம்பரியம் இருந்தது. சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி என பல மருத்துவ முறைகளும் இங்கு இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வந்த நவீன மருத்துவம், இவை அனைத்தையும் அசுரத்தனமாக கபளீகரம் செய்துவிட்டது. ‘எங்கோ வெளிநாட்டில் இருந்து வந்தது மட்டுமே நல்ல விஷயம்’ என மாறாத நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், நமது பாரம்பரியத்தை அலட்சியப்படுத்தி விட்டோம். இன்றைக்கு நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகள் தாங்காமல் பலரும் பாரம்பரியத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘அக்குபிரஷர்’.
சீனாவிலிருந்து வந்த மருத்துவ முறை என இதை நினைத்துக் கொண்டிருக்கிற தமிழ் மக்களுக்கு, ‘இதுவும் நம் மண்ணிலிருந்து அங்கு போனதுதான்’ என்ற வரலாற்றைச் சொல்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர். புகழ்பெற்ற சித்தரான போகர் உருவாக்கிய ‘பொன்னூசி சிகிச்சை’ முறையே ‘அக்குபஞ்சர்’. அதில் ஊசிகளுக்கு பதிலாக விரல்களைப் பயன்படுத்துவதுதான் ‘அக்குபிரஷர்’. அந்த சிகிச்சை முறைகள் பற்றியே இந்த நூல் விவரிக்கிறது.
‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் பகுதி, பிறகு நூல் வடிவம் பெற்றது.
* கட்டை விரல் தவிர்த்து, இரண்டு கை விரல் நகங்களையும் தினமும் காலையும் இரவிலும் 10 நிமிடங்கள் உரசச் செய்தால் முடி உதிர்வது நிற்கும்.
* இடது கை கட்டைவிரலை வலது கை விரல்களாலும், வலது கை கட்டைவிரலை இடது கை விரல்களாலும் பிடித்து 30 முறை சுழற்றினால் தலைவலி குணமாகும்.
* காதின் முன்புறமாக கன்னத்தை ஒட்டி இருக்கும் மூன்று அக்குபுள்ளிகளை அழுத்திக் கொடுத்தால், செல்போன் பேசுவதால் ஏற்படும் காது பிரச்னைகள் சரியாகும்.
* கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஐஸ்கட்டியை சில நிமிடங்கள் வைத்தால் பல்வலி பறந்து போகும்.
இப்படி இந்த நூல் முழுக்க எளிமையான மருத்துவக் குறிப்புகள் ஏராளம் உண்டு. சில ஆண்டுகளிலேயே பல பதிப்புகளைக் கண்டு விற்பனையில் சாதனை புரிந்துவரும் நூல் இது.
இந்தப் புத்தகத்தில் கீழ்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1. உங்களுக்கு நீங்களே டாக்டர்!
2. முடிப் பிரச்னைக்கு முடிவுகட்டும் நக சிகிச்சை!
3. விரலைச் சுழற்றினால் தலைவலி மாயமாகும்!
4. கண்ணுக்கு காந்தக் கண்ணாடி அழகு!
5. இ.என்.டி... பராமரிப்பு கியாரண்டி!
6. பற்களில் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து விடுபட!
7. முதுகுவலிக்கு குட்பை சொல்லும் வேக்யூம் சிகிச்சை!
8. உள்ளங்கையில் இதய சிகிச்சை!
9. சுவாசக் கோளாறுக்கான எளிய சிகிச்சை!
10. கல்லீரல் பலமானால் குழந்தை பிறக்கும்!
11. கிட்னியை பாதிக்கும் வலி நிவாரண மருந்துக்கள்!
12. நம் சருமத்தைக் காக்கும் அக்கு சிகிச்சைகள்!
13. மூட்டுவலிக்கு தடை போடும் கட்டாந்தரை நடை மற்றும் வாழ்வியல்முறை!
14. மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்!
15. பெண்களின் நகை சிகிச்சை
16. உடலுக்குள்ளே சில விஷமிகள்!
17. தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!
4 240
உங்களுக்கு நீங்களே டாக்டர்!
நூலாசிரியர் : டாக்டர் எம்.என்.சங்கர்
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
மொழி : தமிழ்
பக்கங்கள் : 107
4 240
நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!
தினம் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடலில் எந்தவித நோய்களும் அண்டாது என சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். நம்முடைய உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச் சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது நெல்லிக்கனி. தினமும் தொடர்ந்து நெல்லிக்காயைச் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காத ஒரு செயலாக மாறும். அப்படிப்பட்டவர்கள் நெல்லிக்காய் தண்ணீரை குடிக்கலாம். நெல்லிக்காய் தண்ணீரை உட்கொள்வதன் மூலம், உடலில் பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த நூலில் பார்க்கலாம்.
4 240
நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!
நெல்லிக்காய் தண்ணீர் செய்முறை:
நெல்லிக்காயை துண்டு துண்டாக வெட்டி, ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், அந்த நீரை குடிக்கலாம். இந்த நெல்லிக்காய் தண்ணீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கலாம். மற்ற நேரங்களில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உணவு உண்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம்.
4 240
நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!
தினம் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடலில் எந்தவித நோய்களும் அண்டாது என சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். நம்முடைய உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச் சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது நெல்லிக்கனி. தினமும் தொடர்ந்து நெல்லிக்காயைச் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காத ஒரு செயலாக மாறும். அப்படிப்பட்டவர்கள் நெல்லிக்காய் தண்ணீரை குடிக்கலாம். நெல்லிக்காய் தண்ணீரை உட்கொள்வதன் மூலம், உடலில் பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த நூலில் பார்க்கலாம்.
4 240
நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!
நெல்லிக்காய் தண்ணீர் செய்முறை:
நெல்லிக்காயை துண்டு துண்டாக வெட்டி, ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், அந்த நீரை குடிக்கலாம். இந்த நெல்லிக்காய் தண்ணீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கலாம். மற்ற நேரங்களில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உணவு உண்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம்.
4 240
உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டீன் ஆகலாம்
நூலாசிரியர் : என். சி. ஸ்ரீதரன்
பதிப்பகம் : நிலாச்சாரல் லிமிடட்
மொழி : தமிழ்
வருடம் : 2014
நூல் வகை : கல்வி, குழந்தை உளவியல்
4 240
உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டீன் ஆகலாம்
நூலாசிரியர் : என். சி. ஸ்ரீதரன்
பதிப்பகம் : நிலாச்சாரல் லிமிடட்
மொழி : தமிழ்
வருடம் : 2014
நூல் வகை : கல்வி, குழந்தை உளவியல்
குறிப்பு:
‘குழந்தைகளுக்குள் நல்ல திறமைகளையும் புத்திசாலித்தனத்தையும் எப்படி வளர்ப்பது?’ என்பதுதான் பலருக்கு ஒரு புதிராகவே இருக்கிறது. இந்தப் புதிருக்கு ஒரு பதில் கொடுக்கத்தான் இந்தப் புத்தகம்.
கற்றலில் மிகுந்த சோதனைகளைச் சந்தித்தவர் ஐன்ஸ்டீன். அவரால் எதையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாத கற்றல் குறைபாட்டினைக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஐன்ஸ்டீன் மாபெரும் விஞ்ஞானியாக, உயரிய விருதான நோபல் பரிசினை வெல்லும் அளவிற்கு மாற்றமடைந்ததென்பது அசாதாரண விஷயம். பெற்றோர்கள் குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் கல்வியில் அவர்கள் மேன்மை பெறுவதற்கு சிறந்த முறையில் வழிகாட்ட உதவும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலிலிருந்து சில வரிகள்...
குழந்தைகளுக்கு ஒட்டுமொத்தமான அறிவு வளர்ச்சி இருக்க வேண்டுமென்றால், அவர்கள் ஓரளவு சுதந்திரமான சூழ்நிலையில் வளர்க்கப்பட வேண்டும், 'அங்கு ஓடாதே, இங்கு குதிக்காதே, சும்மா உட்கார்ந்திரு’ என்றெல்லாம் தேவையில்லாத கட்டுப்பாட்டோடு வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் தங்களுடைய திறமைகளை முழுமையாக வெளிக் கொண்டு வரமுடியாது.
நம்முடைய குழந்தைகள் படித்ததை நன்றாக மனதில் பதித்துத் தேவையானபோது நினைவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றால், பகல் முழுவதும் படித்தும் விளையாடியும் நேரத்தைக் கழிக்க வேண்டும். இரவு நன்றாகத் தூங்க வேண்டும்.
மூளையில் இருக்கும் கோடிக் கணக்கான பாகங்களில் 'நியூரான்கள்' என்று சொல்லப்படும் திசுக்கள் மூலமாக கற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. அமெரிக்காவில் ஒரு வித்தியாசமான பரிசோதனையை நடத்தினார்கள். பள்ளிக்கூடத்தையும் அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்ட குழந்தைகளின் மூளையையும், அவைகளை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளாத குழந்தைகளின் மூளையையும் ஆராய்ந்து பார்த்தார்கள். முதலில் சொல்லப்பட்ட குழந்தைகளின் மூளையில் நியூரான்களின் அடர்த்தி மிக அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குழந்தைகள் வளரும் சூழ்நிலையில் மன இறுக்கமும் அழுத்தமும் அதிகமாக இருந்தால், நச்சுத்தன்மை நிறைந்த Hormoneகள் சுரந்து நாளடைவில் மூளையின் இயக்கம் பாதிக்கப்படும். இதனால் அவர்களுடைய முழுமையான திறமைகளை வெளியே கொண்டு வரவேண்டிய சக்தி அமையப் பெறமாட்டார்கள். எனவே, இனிமையான இசை, மனதிற்குச் சாந்தியைக் கொடுக்கும் வார்த்தைகள் மற்றும் நகைச்சுவை கதைகளோடு இருக்கும் சூழலை உண்டு பண்ணவேண்டும்.
நன்றாகப் படிக்கும் குழந்தைகளுக்கும், சுமாராகப் படிக்கும் குழந்தைகளுக்கும் உள்ள ஒரு வேறுபாடு, வளரும் சூழ்நிலைதான். ஒரு குழந்தைக்கு முதல் ஆசான் பெற்றோர்கள்தான். இன்னும் சொல்லப் போனால் ஒரு குழந்தையின் முதல் டீச்சர் அம்மாதான்.
நம் புத்திக்கூர்மை, அறிவுக்கூர்மை போன்றவைகள் நாம் வளரும் சூழ்நிலையைப் பொருத்துதான் அமையும். ஒரு குழந்தை அதிபுத்திசாலியாக இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அந்தக் குழந்தை அதற்கேற்ற ஒரு சூழ்நிலையில் வளர்ந்தது என்பதுதான். அதே போன்று அதிக புத்திக் கூர்மை இல்லாத ஒரு குழந்தை இருக்கிறது என்றால் இதற்கும் அந்தக் குழந்தை வளர்ந்த சூழ்நிலைதான் காரணம்.
அறிவு என்பது ஒரே நாளில் வருவது அல்ல. நம்முடைய உடலில் தசைகளை சீரான உடற்பயிற்சியால்தான் பெற முடியும். அதேபோல நல்ல பொது அறிவை முயற்சியால்தான் அடைய முடியும்.
இந்தப் புத்தகத்தில் கீழ்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1. உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டீன் ஆகலாம்
2. புத்திசாலித்தனத்தின் ரகசியம்
3. குழந்தைகளை யோசனை செய்ய விடுங்கள்
4. உங்கள் குழந்தை ஓர் இளம் ஆராய்ச்சியாளர்!
5. மூளை என்ற ஓர் அதிசயம்
6. 'படிப்பது' வேறு ‘புரிந்து கொள்வது வேறு'
7. மூளையைத் “தயார் செய்யுங்கள்”
8. சத்துணவின் அவசியம்
9. காலத்திற்கேற்ற விளையாட்டுகள்
10. தேவை: தொடர் பயிற்சிகள்
11. கவனமின்மை எதனால் ஏற்படுகிறது?
12. கவனம் - என்பது என்ன?
13. மூளையைப்பற்றிய மற்றுமொரு பரிமாணம்
14. அச்சுறுத்தல் தேவையில்லை!
15. தேவை: தோல்வியையும் ஏற்கும் முதிர்ச்சி
16. இதோ சில பயிற்சிகள்...
17. படிப்பு: அறிவைத் தூண்டும் இனிய தொடர் அனுபவம்
18. குழந்தைகளுக்குத் தேவை நல்ல சூழ்நிலை
19. படங்கள் சொல்லும் பாடங்கள்
20. குழந்தைகளால் சுயமாகச் சிந்திக்க முடியும்
21. நல்ல பொது அறிவை முயற்சியால் அடையலாம்!
22. தேவை நல்ல சூழ்நிலைதான்!
23. ஆற்றல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
24. சிந்தனை செய்ய ஒரு தனி அறை
25. வாழ்க்கை வரலாறுகளைச் சொல்லிக் கொடுங்கள்!
26. சான்றோனாக்குதல் உங்கள் கையில்
27. புதைந்து கிடக்கும் புதையல்கள்!
