பதிவு: 79
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005; தறுதலைச்சட்டமா?
நியாயம்தான் சட்டம் என்பதை உணர்ந்ததாலே, அநியாயத்தைத் தட்டிக்கேட்க வேண்டும் ஆர்வகோளாறு எல்லோருக்கும் சகஜமான ஒன்றுதான். அதற்கு, நீங்க மட்டுமல்ல, நானுமோர் உண்மையே!
தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு எல்லோருமே ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அது அரசூழியர்களை காப்பாற்றுவதற்கான, அடிப்படை சட்டங்களுக்கு எதிரான, நியாயம் இல்லாத தறுதலைச் சட்டமாகும்.
ஆம், இதனை விட இந்திய சாட்சிய சட்டத்தின் உருபுகள் 74, 76, 77 ஆகியனவே போதுமானது என 2003 முதலே எதிர்த்து வரும் ஒரே நபர் நானாகத்தான் இருக்க வேண்டும். இதனை 2004 ஆம் ஆண்டில், எழுதிய பிணை எடுப்பது எப்படி நூலிலேயே சொல்லியுள்ளேன்.
ஆமாம், தகவல் பெறும் உரிமைச்சட்டம் அமலுக்கு வந்ததே 2005 தானே! பின்ன நீங்க மட்டும் எப்படி 2003 முதலே எதிர்க்க முடியும் என நீங்கள் நினைத்தால், அது தவறு.
தமிழ்நாடு அரசுதான் முதன்முதலில் இத்தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை 1997இல் கொண்டுவந்தது என்பது பலருக்கும் தெரியாத சட்ட வரலாறு. 2005இல் மத்திய அரசும் இச்சட்டத்தை கொண்டு வந்ததால், மாநிலச் சட்டம் காலாவதியாகி விட்டது. அவ்வளவே!
மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் மாநில அரசின் சட்ட விதிகள் இருக்க வேண்டும் என்கிற இந்தியச் அரசியல் சாசனக் கோட்பாடு 251க்கு எதிராக, தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்திற்கு மத்திய அரசு ரூ-10 மட்டுமே கட்டணமாக நிர்ணயித்து இருந்தது.
அதனால், தமிழ்நாடு அரசு ரூ-50ஐ வசூல் செய்ததற்கு குடியரசுத் தலைவரிடம் இருந்து சிறப்பான அனுமதி ஏதும் பெறப்பட்டுள்ளதா எனவும், அப்படிப் பெறப்பட்டு இருந்தால் அவ்வுத்தரவின் நகலைச் சாட்சியச் சட்டத்தின் உருபு 76இன் கீழ் சான்று நகலாக வழங்கக் கோரியும் தமிழ்நாடு பொதுத் தகவல் அதிகாரிக்கும், அதன் நகலைக் குடியரசுத் தலைவருக்கும் சமர்ப்பித்ததன் காரணமாக கட்டணம் ரூ10 ஆகக் குறைக்கப்பட்டது.
இப்படிக் கட்டணம் குறைக்கப்பட்ட பிறகே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடு மிகவும் அதிகமாகியது. உண்மையில் தறுதலைச் சட்டமான அச்சட்டத்தை எதிர்ப்பதையே கடமையாக கொண்டுள்ள நான், அச்சட்டம் அடிப்படையில் செழித்துவளர்வதற்கு காரணகர்த்தாவாகவும் இருந்து விட்டேன் என்பது, வேதனைதான்.
நமது சட்ட விழிப்பறிவுணர்வில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பலரும், எனது பாணியில் சாட்சியச் சட்டத்தின் கீழ் சான்றுநகல் கோரி வெற்றிகரமாகப் பெற்றுவரும் நிலையில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி கேட்காமல், சாட்சியச் சட்டத்தின் கீழ் சான்று நகலாகக் கோரும் போதும், அதை கொடுத்துதான் ஆக வேண்டும் என, மத்தியத் தகவல் ஆணையமும் சட்டப்படி மிகச்சரியான, அதிரடியான உத்தரவை Decision No.CIC/SG/A/2008/00043/SG/1287 and 1288 ஆகிய இருவழக்குகளில் 27-01-2009 அன்றே பிறப்பித்து விட்டது.
இப்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவையில்லை; தேவையான தகவல்களைச் சான்று நகலாகப் பெற, இந்தியச் சாட்சியச் சட்டம் இருக்கிறது என்று வெளிப்படையாகத் தெரியும் போது, இந்த தகவல்பெறும் உரிமைச் சட்டமும், அதன்கீழான செயல்பாடுகளும் தேவையற்றவை எனவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நீக்கிட அல்லது செயலிழக்கச் செய்து, ஆணையத்தையும் கலைத்துவிட அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டியது தானே நியாயம்! ஏன் செய்யவில்லை?
தகவல்பெறும் உரிமைச்சட்ட ஆர்வக்கோளாறுகள் இருக்கிற வரை, தன்னைத்தேடி வருகிற வருமானத்தையும், பதவி சுகத்தையும் இழக்க இவர்கள் மக்களின் ஊழியர்கள் அன்று! மாறாக, மக்களின் பணத்தில் எப்படியெல்லாம் வசதியாக வாழலாம் என கணக்கு போட்டு வாழும் ஈனப்பிறவிகளே!!
இந்தியச் சாசனக் கோட்பாடு 19(1)(அ) இன் கீழான, எனது பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை, கருத்துரிமையின் கீழ், நீங்களும் உங்களது கருத்தை அல்லது மாற்றுக்கருத்தை எனக்கு மட்டுமல்ல; யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஏனெனில், இவை அத்தனையும் பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையின் ஓர் அங்கமாகவே அடங்கி விடும். இதுகூடப் புரியாத அறிவு வறுமைவாதிகளான ஆட்சியாளர்கள், என்னமோ ஏற்கெனவே மக்களுக்கு இல்லாத உரிமையைத், தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 இன் மூலம் பாரிவள்ளல் போல வாரிவழங்கி விட்டதாக பீற்றிக் கொள்கிறார்கள்.
2005 இல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்றால், நாடு குடியரசான 1950 முதல் 2005 வரை, சுமார் 55 ஆண்டுகள் யாருமே, எந்தவிதத் தகவலையும் பெறவில்லையா என்ற அறிவுப்பூர்வமான கேள்வி, தன்னார்வத் தறுதலைகளுக்கு எழ வேண்டாமா?
ஒருவேளை எழவில்லை என்றே வைத்துக் கொண்டாலும் கூட, நான் இப்படி எவ்வளவுதான் விளக்கமாக எடுத்துச் சொன்னாலும், கண்டுகொள்ளாமல் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆடும் தனிநபர்களையும், ஃபண்டு நிறுவனங்கள் மற்றும் இயக்கங்களின் தன்னார்வலர்களைத்,
தறுதலைகள் என்றும், எதற்கும் உதவாத அச்சட்டத்தை
தறுதலைச் சட்டம்
என சொல்லுவதில் என்ன தவறு?
Below click and join
https://t.me/lawterrorist2