Periva Kural
Ir al canal en Telegram
2 582
Suscriptores
+124 horas
+77 días
Sin datos30 días
Carga de datos en curso...
Canales Similares
Nube de Etiquetas
Sin datos
¿Algún problema? Por favor, actualice la página o contacte a nuestro gerente de soporte.
Menciones Entrantes y Salientes
---
---
---
---
---
---
Atraer Suscriptores
septiembre '26
septiembre '26
+8
en 1 canales
agosto '26
+32
en 1 canales
Get PRO
julio '26
+22
en 1 canales
Get PRO
junio '26
+23
en 1 canales
Get PRO
mayo '26
+24
en 1 canales
Get PRO
abril '26
+19
en 0 canales
Get PRO
marzo '26
+6
en 0 canales
Get PRO
febrero '26
+13
en 0 canales
Get PRO
enero '26
+10
en 0 canales
Get PRO
diciembre '25
+14
en 0 canales
Get PRO
noviembre '25
+9
en 0 canales
Get PRO
octubre '25
+9
en 0 canales
Get PRO
septiembre '25
+13
en 0 canales
Get PRO
agosto '25
+14
en 1 canales
Get PRO
julio '25
+13
en 0 canales
Get PRO
junio '25
+12
en 0 canales
Get PRO
mayo '25
+15
en 0 canales
Get PRO
abril '25
+10
en 0 canales
Get PRO
marzo '25
+13
en 0 canales
Get PRO
febrero '25
+17
en 0 canales
Get PRO
enero '25
+25
en 0 canales
Get PRO
diciembre '24
+16
en 0 canales
Get PRO
noviembre '24
+33
en 0 canales
Get PRO
octubre '24
+23
en 1 canales
Get PRO
septiembre '24
+37
en 0 canales
Get PRO
agosto '24
+53
en 1 canales
Get PRO
julio '24
+23
en 0 canales
Get PRO
junio '24
+14
en 0 canales
Get PRO
mayo '24
+27
en 0 canales
Get PRO
abril '24
+35
en 0 canales
Get PRO
marzo '24
+20
en 0 canales
Get PRO
febrero '24
+11
en 0 canales
Get PRO
enero '24
+21
en 0 canales
Get PRO
diciembre '23
+18
en 0 canales
Get PRO
noviembre '23
+14
en 0 canales
Get PRO
octubre '23
+22
en 0 canales
Get PRO
septiembre '23
+9
en 0 canales
Get PRO
agosto '23
+6
en 0 canales
Get PRO
julio '23
+12
en 0 canales
Get PRO
junio '23
+7
en 0 canales
Get PRO
mayo '23
+10
en 0 canales
Get PRO
abril '23
+7
en 0 canales
Get PRO
marzo '23
+6
en 0 canales
Get PRO
febrero '23
+8
en 0 canales
Get PRO
enero '23
+16
en 0 canales
Get PRO
diciembre '22
+12
en 0 canales
Get PRO
noviembre '22
+11
en 0 canales
Get PRO
octubre '22
+3
en 0 canales
Get PRO
septiembre '22
+18
en 0 canales
Get PRO
agosto '22
+36
en 0 canales
Get PRO
julio '22
+59
en 0 canales
Get PRO
junio '22
+85
en 0 canales
Get PRO
mayo '22
+18
en 0 canales
Get PRO
abril '22
+15
en 0 canales
Get PRO
marzo '22
+37
en 0 canales
Get PRO
febrero '22
+13
en 0 canales
Get PRO
enero '22
+23
en 0 canales
Get PRO
diciembre '21
+42
en 0 canales
Get PRO
noviembre '21
+3 731
en 0 canales
| Fecha | Crecimiento de Suscriptores | Menciones | Canales | |
| 06 septiembre | +1 | |||
| 05 septiembre | +2 | |||
| 04 septiembre | +2 | |||
| 03 septiembre | +2 | |||
| 02 septiembre | 0 | |||
| 01 septiembre | +1 |
Publicaciones del Canal
மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - சக்கரம் வச்ச வண்டியில் ஏறுவது இல்லை
பண்டரிபுரத்தில் பெரியவா தங்கியிருந்த சமயம். அருகேயிருந்த சர்க்கரை ஆலையின் அதிகாரி, பெரியவாளிடம் அவரது பாதாரவிந்தங்கள் தமது ஆலையை ஒரு முறை மிதிக்க வேண்டும் என்று வேண்டி, அப்பொழுதே வருவதாக இருந்தால் தமது வண்டியிலேயே அழைத்துப்போய் வந்து விடுவதாகக் கூறினார்.
பெரியவாள் உடனே சிரித்து விட்டு, “நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை” என்று கூறினார். வந்த அதிகாரி மிகவும் ஆச்சர்யப்பட்டு “இந்த இருபதாம் நூற்றாண்டிலே தாங்கள் இப்படி இருக்க வேண்டுமா ? வண்டியில் வந்தால் பல மணி நேரம் மிச்சமாகுமே, அதிகமான இடங்களைக் காண வாய்ப்புக் கிடைக்குமே” என்றார்.
பெரியவாள், “நான் பதிமூன்று வயதில் பட்டத்திற்கு வந்த உடனே சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை என்று சங்கற்பித்துக் கொண்டேன். ஒரு முறை நான் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். மழையே இல்லாமல் இருந்த அந்த ஊரில் என்னவோ தெரியவில்லை, நல்ல மழை பிடித்துக் கொண்டது. போகும் வழியில் இருபுறமும் பள்ளமாகவும் நடுவே சற்று மேடாகவும் இருந்ததால், ஓடும் நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்நிலத்திலிருந்த ஜீவராசிகள் பலவும் மேட்டுக்கு வந்து விட்டன. அப்பொழுது சாலையில் சென்ற பல வாகனங்களால் அவற்றிற்கு அழிவு ஏற்பட்டது. அன்றே நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறி ஜீவ ஹிம்சைக்குக் காரணமாகக் கூடாது என்று மீண்டும் சங்கல்பித்துக் கொண்டேன் .
இன்னொரு காரணமும் உண்டு.
வண்டியில் போவதால் பல ஊர்களைக் காண இயலாது போய் விடும். வாஹனத்தில் திடீரென்று ஓர் ஊருக்குப் போய் இறங்கினால் அங்கு உள்ளவர்களுக்குச் சிரமம். நடந்து போவதால் போகும் இடத்திலுள்ள மக்கள் அடுத்த ஊருக்கு முன்பே தெரியப்படுத்தி வசதி செய்து தருகின்றார்கள் இல்லையா ?” என்ற வினா எழுப்பிச் சுற்றி நின்றவர்களைப் பார்த்து தமது அருளைப் புன்னகையோடு குழைத்து அளித்தார்.
வாருங்கள். பாரதம் வலம் வந்த பாதமலர்களுக்கு பூஜைகள் செய்திடுவோம்!
பெரியவா சரணம்!
தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org
| 2 | Sri Maha Periva Divya Darshan - Part 28 | 180 |
| 3 | Periva Kural - Dharma Prachaaram series
Sanatana Dharma - part 11
Periva saranam!
We are pleased to bring to your attention this video - Sanatana Dharma - part 11 - upanyasam by Maatusree Prema Krishnamurthi (Ram Ram Mami)
Link:
https://www.youtube.com/watch?v=bUgRoFIo8hc
Periva Saranam!
Compiled by: Periva Kural Channel | https://t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | 237 |
| 4 | Sri Maha Periva on Lord Krishna | 247 |
| 5 | Periva Saranam. Kanchi Periva Forum wishes everyone on the holy occasion of Gokulashtami and is pleased to present this compilation of beautiful explanation by Sri Maha Periva titled "Madhuram, Madhuram" (in Tamil). | 240 |
| 6 | கோகுலாஷ்டமி - ஸ்ரீ க்ருஷ்ண வைபவம் - மஹா பெரியவா
"அவனைப்பத்தின அத்...தனையுமே மதுரந்தான்!" தன்னுடைய மதுரமதுரக் குரலில், மதுரமான சிரிப்போடு மதுராநாதனைப் பற்றி பெரியவா சொன்னார்....
"அவன் பொறந்ததே மதுரைல. நம்ம பாண்ட்யதேசத்து மதுரை இல்லே! இங்கே மதுரமயமா அம்பாள் இருக்கா......அவகிட்டேர்ந்துதான் சங்கீதம் பொறந்தது. நான் சொன்னது வடமதுரை. அங்கே அவன் பொறந்த ஒடனேயே அப்பாக்காரர் வஸுதேவர் கொழந்தையை தூக்கிண்டு கோகுலத்துல கொண்டு போயி விட்டுட்டார். யமுனையோட மேலக்கரைல கோகுலம்; பிருந்தாவனம்..ல்லாம் கீழக்கரை. ஆத்துல அளைஞ்சுண்டே தாண்டிப்போய் கோகுலத்ல யசோதைக்கு பக்கத்ல விட்டுட்டு, அப்பத்தான் அவளுக்கு பொறந்திருக்கற பொண் கொழந்தையை தூக்கிண்டு ஜெயிலுக்கு திரும்ப போய்ட்டார்....இங்கே எல்லாமே திருட்டு மயம்.." பெரிதாக சிரித்தார்.
...."அங்க ஜெயில் காவலாளிகளுக்கு தெரியாம திருட்டுத்தனமா வெளில வந்தது, இங்க கோகுலத்ல ப்ரஸவிச்சவளுக்கும் சரி, ப்ரஸவம் பாத்தவாளுக்கும் சரி, பொறந்தது பொண் கொழந்தைன்னோ...அதுக்கு பதில புள்ளைக்கொழந்தையை வஸுதேவர் வெச்சுட்டு போனதோ, தெரியாது! இங்கேயும் திருட்டுத்தனம்! க்ருஷ்ணன்..ன்னாலே ஒரே திருடு.ங்கறோமே! வெண்ணையையும் திருடினான்....மனசையும் திருடினான்! நவநீத சோரன், சித்த சோரன்...ங்கறோமே.....அவனுக்கு அந்த திருட்டு புத்தி எப்டி வந்துதுன்னா.....அவனோட அப்பா அவன் பொறந்த ஒடனேயே பண்ணின திருட்டுத்தனந்தான், அவனுக்கும் பிதுரார்ஜிதமா வந்துடுத்துன்னு தோண்றது!..." கண்ணனின் திருட்டில் ஊறிய புன்னகை பெரியவா முகத்தில் சோபை பெற்றது.......தொடர்ந்தார்....
"ஆனா, அப்டி நெனைக்கறது செரியில்லே! சும்மாக்காக வேடிக்கை பண்ணினேன். வஸுதேவர் பாவம், ஸாது! கொஞ்சங்கூட திருட்டுபொரட்டே தெரியாதவர்! அவரை திருட்டுத்தனம் பண்ணப் பண்ணினதே இந்தக் கொழந்தைதான்! அது பொறந்த ஒடனேயே காவலாள்ளாம் மயக்கம் போட்டா மாதிரி தூங்கினதாலதான் அவர் ஜெயில்லேர்ந்து தப்பிச்சு போக முடிஞ்சுது...ஜெயில் பூட்டு தானா தொறந்துண்டது......அங்க கோகுலத்துலேயும் எல்லாரும் தூங்கி வழிஞ்சதாலதான் அவர் கார்யத்தை சௌகர்யமா முடிக்க முடிஞ்சுது. இதெல்லாம் பாவம் அந்த அப்பாவி மனுஷரா பண்ணினார்? அவருக்கு பிள்ளையா வந்தானே ! ஒரு அப்பன்! அவன்தான் இத்தனையும் மாயாவித்தனமா பண்ணினது!
அயோத்திக்கப்புறம் சப்த மோக்ஷபுரில, மதுரா இருக்கு. அவன் அவதாரம் பண்ணின ஊருக்கே அவனோட ஸ்வபாவம் இருக்கே! க்ருஷ்ணன்..ன்னா என்ன? மதுரந்தான்! தித்திப்புன்னா....தித்திப்பு! அப்டியொரு தித்திப்பு அவன்! மதுரம்ன்னு சொல்லறச்சே கூட "dhu "கொஞ்சம் கடுமையா இருக்கு. இன்னும் நைஸா "ஸ்வாது"ன்னும் ஒரு வார்த்தை இருக்கு. "ஸ்வாது" லேர்ந்துதான் "ஸ்வீட்" வந்தது.....இப்போ, நான் ஒரு விஷயம் செரியா சொல்லலைனா....கொஞ்சம் apologise பண்ணிக்கறா மாதிரி சரி பண்ணிக்க பாத்தேனோல்லியோ?...கிருஷ்ணனா இருந்தா, அப்டி பண்ண மாட்டான்! அவன் பண்ணறதுல... ஸரி, ஸரியில்லை..ங்கற ரெண்டே கெடையாது! அந்த வார்த்தைகளே அவனோட அகராதியில ஏறாது! அவன் பண்ணற சகலமும் மதுரம், மதுரம்...ங்கற ஒண்ணுதான்! மத்தவா பண்ணினா ஸரியில்லாததெல்லாங்கூட அவன் பண்ணறப்ப, மதுரந்தான்! இதை நெனைச்சுத்தான் பரம பக்தரான ஸ்ரீ வல்லபாச்சார்யார்... ங்கறவர் "மதுராதிபதே அகிலம் மதுரம்"..ன்னு பாடி வெச்சுட்டுப் போய்ட்டார்."
===========================================
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயனத்தில்ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று நடுநிசியில் பிறந்தார். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். நமக்கு உத்தராயணம் அவர்களுக்கு பகல். தக்ஷிணாயணம் அவர்களுக்கு ஒரு இரவு.
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு நேரம் ஆகிறது. இம்மாதிரியே நம்முடைய ஒரு மாதம் பித்ருகளுக்கு ஒரு நாள் ஆகிறது. நமது சுக்ல பக்ஷம் அவர்களுக்கு பகல், க்ருஷ்ண பக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண பக்ஷம் பித்ருக்களுக்கு இரவாகிறது.
அஷ்டமி திதி நடுவில் வருவதால் அன்று அவர்களுக்கு நடுநிசி பொழுது ஆகிறது. இதனால் என்ன ஏற்படுகிறது, ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் எல்லா தினுஸிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம்.
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருட்டு நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரகாலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை. அவருடைய பெயரும் கிருஷ்ணன். கிருஷ்ண என்றால் கருப்பு என்று பொருள்.அவனுடைய மேனியும் கருப்பு. இப்படி ஒரே கருப்பு மயமான ஸமயத்தில் தானும் கருப்பாக ஆவிர்பவித்தாலும் அவனே ஞானஒளி. காளமேகங்களுக்கு இடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றியதான ஒளி.
பெரியவா சரணம்!
தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | 300 |
| 7 | https://youtu.be/VZNXYAVqZiY | 1 |
| 8 | ☝️ஶ்ரீ பெரியவா குரல் - கம்போடியா 🙏பெரியவா சரணம் 🙏 | 309 |
| 9 | Sin texto... | 359 |
| 10 | https://youtu.be/C_6bIlmOV00 | 452 |
| 11 | மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்
சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தரிசனத்துக்காக இரண்டு மணி நேரம் காத்துக் கிடந்தேன். தரிசனம் கிடைக்கவில்லை. இனிமேலும் தாமதித்தால் என்னுடைய அலுவலக வேலைகள் (நான் இன்ஸ்பெக்ஷன் செய்வதற்காக அருகிலிருந்த ஜங்ஷனுக்கு வந்திருந்தேன்) தடைபட்டுவிடும் என்பதால், தொலைவிலிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு,என் அலுவலைப் பார்க்க சென்று விட்டேன்.
இரண்டு மணி நேரம் கழித்து, ஸ்ரீ மடத்துச் சிப்பந்தி ஒருவர் ரயில்வே நிலையத்துக்கு வந்து, பெரியவாள் அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லியனுப்பியதாகச் சொன்னார்.
"பெரியவா சொன்னதை அப்படியே சொல்லுங்கோ"
"சதாரா ஸ்டேஷன்லே போய்ப் பார். இன்ஸ்பெக்ஷன் பண்ணிண்டு இருப்பான் அந்த ராமஸ்வாமி. வரச்சொல்லு என்றார்கள்."
பரபரப்புடன் வேலையை முடித்துக்கொண்டு தரிசனத்துக்கு சென்றேன். மன்னிப்புக் கோரும் விதமாக, "பெரியவா ரொம்ப பிஸியாக இருந்தீர்கள்.நான் ஆபீஸ் வேலையை முழுமையாக முடிக்காமல் ஹெட் குவார்ட்டர்ஸ் போக முடியாது.என்னுடைய மேலதிகாரி சத்தம் போடுவார்..." என்று ஆரம்பித்தேன்.
பெரியவா என் பதிலை சட்டை செய்ததாகவே தெரியவில்லை! பட்டென்று," உனக்கு என்ன வேணும்?" என்றார்கள்.
அப்போது என் மனத்தில் ஒரே பிரச்னை தான் இருந்தது - என் மகள் கல்யாணம்.
"என் பெண்ணுக்கு நல்ல இடத்திலே கல்யாணம் ஆகணும்.அப்பா ரொம்ப தொந்தரவு பண்றார். அவரும் பல பேர்களுக்கு ஜாதகம் அனுப்பி, வரன் ஜாதகம் கேட்கிறார் .ரொம்ப பேர் பதில் போடுவதே இல்லை. வந்த ஜாதகங்கள் பொருத்தமாக இல்லை.."
"அவ்வளவு தானே?... சரி, போ, உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.."
இந்த தெளிவான பதில் என்னை அதிர்ந்து போகச் செய்தது. "நான் நடத்தி வைக்கிறேன்..."
என்மேல் பனிமழை பொழிந்தாற் போலிருந்தது. எதிர்பாராத இன்பத் தாக்குதலை அனுபவித்தவர்களுக்குத் தான் என் நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். உடனே சற்றும் யோசிக்காமல் மகா பாமரத்தனமாக,"சத்தியமாச் சொல்றேளா?" என்று கேட்டு விட்டேன்.
சத்திய ஸ்வரூபத்திடம் இப்படி ஒரு கேள்வி! இப்போது நினைத்தாலும் என் உடம்பு நடுங்குகிறது
கருணை வள்ளல் மெல்லச் சிரித்தது. அவ்வளவே. இந்த நிகழ்ச்சி அப்போது என் மனத்தில் ஆழமாகப் பதியவேயில்லை.
நான் ஊருக்குப் போய் என் வேலையில் மூழ்கிவிட்டேன். இரண்டு மாதத்துக்குப் பிறகு, மும்பையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. என் அப்பா எப்போதோ எழுதிய கடிதத்துக்குப் பதில் - வரன் ஜாதகத்துடன்.
ஜாதகங்கள் பொருந்தி இருந்தன. மற்ற நடைமுறைகள் நடந்து கல்யாணமும் நடந்து விட்டது. இரண்டு வருஷங்களுக்கு மேல் இடைவெளி.
கர்னூலில் ஸ்ரீமடம் முகாம். நான், என் பெண், பெண்ணின் குழந்தை - பெரியவா தரிசனத்துக்குச் சென்றோம்.
பெரியவா காலடியில், அருட்பார்வையில் குழந்தையைப் போட்டு விட்டு, பெரியவாளின் விசாரணைகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம்.
பெரியவா பிரசாதம் கொடுத்ததும் நான், என் பெண்ணுடன் புறப்பட்டு நாலைந்து தப்படி வைத்து விட்டேன். பெரியவா விரலைச் சொடுக்கி கூப்பிட்ட மாதிரி இருந்தது. திரும்பினோம்.
"இந்த கொழந்தையை மடத்திலே வெச்சுண்டு, நான் எப்படி சம்ரட்சிக்கிறது? எடுத்துண்டு போ!"
எங்களுக்கு மகா வெட்கம்.பெரியவா தரிசன பேரானந்தத்தில் குழந்தையை மறந்து விட்டோம்.
என் பெண் ஓடிச்சென்று குழந்தையை எடுத்துக் கொண்டாள். அப்போது பெரியவா அருகிலிருந்த ஸ்ரீகண்டன் என்ற தொண்டரிடம், "ராமஸ்வாமிக்கு திருப்தியான்னு கேளு" என்றார்கள்.
எனக்குப் புரியவில்லை.இப்போது அப்படி ஒரு கேள்வி எதற்கு? நாங்கள் சந்தோஷமாகத்தானே புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்?
பதில் சொல்ல முடியவில்லை.
"அவன் பெண்ணோட பேரென்னன்னு கேளு"-பெரியவா
"உமா" என்றேன்.
"மாப்பிள்ளை பேரு?" -பெரியவா
"சதாசிவன்"...நான்
"சரிதானே?..என்னைக் குத்தம் சொல்லக் கூடாது? பெயர் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் செய்து வெச்சுருக்கேன்!.."
என் கண்களில் பொல பொலவென்று நீர் வழிந்தது. இப்படி ஒரு ஞாபக சக்தியா? இப்படி ஓர் அனுக்ரஹமா? கோடி ஜன்ம புண்ணியம் இப்படித்தான் ஒன்று இரண்டு வரும் போலிருக்கிறது
பெரியவா சரணம்!
தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org | 493 |
| 12 | Sri Maha Periva Divya Darshan - Part 27 | 419 |
| 13 | Periva Kural - Dharma Prachaaram series
Sanatana Dharma - part 10
Periva saranam!
We are pleased to bring to your attention this video - Sanatana Dharma - part 10 - upanyasam by Maatusree Prema Krishnamurthi (Ram Ram Mami)
Link:
https://www.youtube.com/watch?v=RwjDHK4Onqg
Periva Saranam!
Compiled by: Periva Kural Channel | https://t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | 495 |
| 14 | https://youtu.be/lSbjtf9vtyM | 523 |
| 15 | https://youtu.be/e1scyk70g3g | 589 |
| 16 | Sin texto... | 618 |
| 17 | https://youtu.be/_XEwqbYmS7Q | 668 |
| 18 | மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - மாந்த்ரீகரும், மஹா பெரியவாளும்
பெரியவர் மராத்தி மாநிலத்தில் பயணம் ஏதோ ஓர் ஊரில் (பூனா என்று சொன்ன ஞாபகம்) முகாம்.
அங்கு வாழ்ந்து வந்த ஒரு அன்பர் - இப்போதைக்கு அவர் வம்பர் - ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது மந்திரம் வைப்பது பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர் யாரிடம் நல்ல பெயர் இல்லாதவர்.
பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி ‘நான் பெரியவனா இல்ல. அவர் பெரியவரான்னு பார்த்து விடுகிறேன் இன்று என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும் இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன்’ என்றெல்லாம் கொக்கரித்து இருக்கிறார்.
அவர் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அன்று பெரியவர் பூஜை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த வம்பரும் சென்று ‘கடைசியில் கடைசியாய்’ இருந்து கொண்டு கையில் மையை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்தார், செய்தார், செய்தார்.
அங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார். பூசை முடிந்தது - திருநீர் பிரசாத விநியோகம் இனிதே நடந்தது. ஸ்வாமிகள் கை சொடுக்கி அழைத்தார் இவரை. இவருக்கோ ஒரே ஆச்சரியம். எப்படி இந்த ஆயிரம் ஆயிரம் ஜனத்தில் நம்மை குறி வைத்து அழைக்கிறார். குறி வைத்து தான் விட்டாரே!
யாரை வசியப்படுத்துவேன் என்றாரோ அவரிடமே வசியப்பட்டு, யாரை பொம்மை ஆக்குவேன் என்றாரோ அவரிடமே பொம்மையென சென்றார் அமர்ந்தார் அந்த வம்பர்.
ஐயன் அவரை உற்று பார்த்தார். பின் மெல்ல பகர்ந்தார். ‘பின்னாடி திரும்பி பார்’.
பார்த்தார் வம்பர். நடுநடுங்கினார். பின்னால் இருந்த மொத்த அடியார் கூட்டமும் ஐயனாய் தெரிந்தது அவருக்கு. ஆம் - அத்துணை அத்துணை மகாபெரியவர் உருவங்கள். மேலே கீழே இடது வலது என்றெல்லாம் பார்க்க சொன்னார். எங்கெங்கு காணினும் ஐயன் திருவுருவங்கள்!
வம்பர் கதறி காலில் விழுந்தார். மன்னிக்க கோரினார். பாவமன்னிப்பு கேட்டார்.
சொன்னார் பெரியவர் ‘சித்து பெரிய விஷயமே இல்லே.. ஒர்த்தர் கிட்ட கூட ஒனக்கு நல்ல பேரு இல்லே.. கெட்ட வழிலே இவ்வளவு பணம் பண்ணிருக்கே’.
வம்பர் சொன்னார் - ‘அத்தனையும் விட்டுடறேன். பெரியவா கூட மடத்துக்கு வந்து சொச்ச காலத்தையாவது சேவகம் பண்ணி பாவம் போக்குகிறேன்’.
‘இல்லே இன்னும் நிறைய வேலை இருக்கு ஒனக்கு. பாவ வழிலே சம்பாதிச்சாலும் பணம் பணம் தான். அதுனாலே அத்தனை பணத்தையும் நல்ல வழிலே செலவு செய். நெறைய கல்யாணம் பண்ணிவை ஏழை கொழந்தேளுக்கு. அவாள படிக்க வை, அம்பாளை ப்ரார்த்திச்சிண்டே இரு. எல்லோரோட க்ஷேமத்துக்காகவும் பண்ணு.. நீயும் க்ஷேமமா இருப்பே’.
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை போக்குகின்ற தீர்த்த பெருக்கு நம் மஹா பெரியவர்!
பெரியவா சரணம்!
தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org | 661 |
| 19 | Sri Maha Periva Divya Darshan - Part 26 | 543 |
| 20 | Periva Kural - Dharma Prachaaram series
Sanatana Dharma - part 9
Periva saranam!
We are pleased to bring to your attention this video - Sanatana Dharma - part 9 - upanyasam by Maatusree Prema Krishnamurthi (Ram Ram Mami)
Link:
https://youtu.be/bpo8-Uu8cZw
Periva Saranam!
Compiled by: Periva Kural Channel | https://t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | 646 |
