cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Abdullah Uwais Meezani

தமிழ் மொழி மூலமான தூய இஸ்லாமியக் கல்வி மற்றும் அழைப்புக்கான தளம்

إظهار المزيد
مشاركات الإعلانات
463
المشتركون
لا توجد بيانات24 ساعات
+37 أيام
+330 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

Photo unavailableShow in Telegram
الرابطة الهندية للتوعية بلغة القرآن is inviting you to a scheduled Zoom meeting. Topic: اليوم العالمي للغة العربية Time: Dec 17, 2023 04:30 PM Riyadh Join Zoom Meeting https://us06web.zoom.us/j/85145720843?pwd=zPNmu9mmPrfOKJHLMAvpo5vSJMsnhD.1 Meeting ID: 851 4572 0843 Passcode: 698640
إظهار الكل...
*🔰G-TOP ACADEMY🔰* *வழங்கும்* 🗒️ ஹதீஸ் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு 📜📜 💫 மாதாந்த ஸூன்னா மஜ்லிஸ் 💫 *🎤CONDUCTED BY:* அஷ்ஷெய்க். அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி 📃 தொடர் 2️⃣ ✳️ ஹதீஸ் 02 📅 30.11.2023 ⏰ 8:30 P.M 🛗 ZOOM LINK https://us06web.zoom.us/j/84770599900?pwd=RS9kUnExRUdUTUh1M0RtNXN3Z2ppZz09 Meeting ID: 847 7059 9900 Passcode: 246135 🎴YOUTUBE LIVE https://youtube.com/@G-TopAcademy ➖➖➖➖➖➖➖➖➖➖ 🔘இவ்வகுப்பில் இணைந்து பயன்பெற விரும்புவோர் , இக்குழுமத்தில் இணையவும் 👇👇👇 🥏 https://chat.whatsapp.com/JVAFDu2KeDzBd2XOUgv1jg மேலதிக விபரங்களுக்கு 📞 GTOP ACADEMY 070 48 47 027 (whatsapp)
إظهار الكل...
Join our Cloud HD Video Meeting

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, conference, huddle, and training rooms, as well as executive offices and classrooms. Founded in 2011, Zoom helps businesses and organizations bring their teams together in a frictionless environment to get more done. Zoom is a publicly traded company headquartered in San Jose, CA.

*🔰G-TOP ACADEMY🔰* *வழங்கும்* 🗒️ ஹதீஸ் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு 📜📜 💫 மாதாந்த ஸூன்னா மஜ்லிஸ் 💫 *🎤CONDUCTED BY:* அஷ்ஷெய்க். அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி 📃 *இவ்வகுப்பின் உள்ளடக்கமாக*..... ✳️ இமாம் நவவி அவர்களின் ஹதீஸ் தொகுப்பின் விளக்கங்களுடன் 💭 CLASS DETAILS ▫️START FROM : 26.10.2023 ▫️THURSDAY ▫️ FOR GENTS & LADIES ▫️1 HOUR PER SESSION ▫️8:30 - 9:30 PM ▫️VIA ZOOM WITH RECORDINGS ▫️FREE ➖➖➖➖➖➖➖➖➖➖ 🔘இவ்வகுப்பில் இணைந்து பயன்பெற விரும்புவோர் , இக்குழுமத்தில் இணையவும் 👇👇👇 🥏 https://chat.whatsapp.com/JVAFDu2KeDzBd2XOUgv1jg மேலதிக விபரங்களுக்கு 📞 GTOP ACADEMY 070 48 47 027 (whatsapp)
إظهار الكل...
🌟GTOP🌟HADHEES 🧭

WhatsApp Group Invite

❇️ *அடிப்படை ஹதீஸ் கலைக் கற்கை நெறி- Level 01* 📖 *பாடம்*: 07 🎙 *ஆசிரியர்:-* அப்துல்லாஹ் உவைஸ் மீஸானீ (M.A KSA PhD () KSA) *ஓடியோ* 30 நிமிடங்கள் அளவு 7 MB *இன்றைய நாள் வகுப்பில்* (23-10-2023)⬇️⬇️⬇️ ➡️ ஒரு ஹதீஸின் உள்ரங்கமான குறைகளை அறிவது எவ்வாறு? *வாராந்தம் பிரதி ஞாயிறுதோறும் நடைபெறும் வகுப்பில் கலந்துபயன் பெற விரும்புவோர் கீழுள்ள லிங்க் மூலம் எம்மோடு இணைந்து பயன்பெறலாம்.* வட்ஸப் லிங்க் https://chat.whatsapp.com/CTrffz6bFGg41myxZKesJ5 (இக்குழுமத்தில் உள்ள உறுப்பினர்கள் எவருக்கும் மற்றவர்களின் இலக்கங்களை பார்வையிட முடியாது என்பது சிறப்பம்சமாகும்) பாடத்திற்கான டெலிகிராம் லிங்க் https://t.me/Uloomulhadhees01 ---------------------------------------------- *கீழ்காணும் telegram லிங்க் மூலம் இணைந்து ஆசிரியரின் ஏனைய வகுப்புக்கள், ஆய்வுகள், ஆக்கங்கள், உரைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.* ⬇️⬇️⬇️⬇️ ------------------------------------------ https://t.me/Abdullahuwaismeezani
إظهار الكل...
Voice 210.mp36.93 MB
4. முஃமின்களுக்கான அல்லாஹ்வின் உதவி என்பது நேரடியாகக் கிடைக்கும் வெளிரங்க வெற்றி மாத்திரமல்ல. உள்ளங்களை உறுதிப்படுத்தி அவற்றில் அமைதியை ஏற்படுத்துவதும் வெற்றிதான். பத்ருப் போரைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நான் உங்களுடனே இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும். 8:12 இதனால்தான் சிறு சிறு துன்பங்களின் போது பலர் வீழ்ந்துவிடும் போது மனிர்களால் தாங்க முடியாத பெரும் அல்லல்களை காஸா மக்கள் தாங்கிக்கொள்வதை நாம் பார்க்கலாம். 5. மறுமையில்தான் கூலி, இவ்வுலகம் தற்காலிகமானது, ஏமாற்றத்தை தரக்கூடியது, அழிந்துபோகக் கூடியது, மறுமை நாளையில்தான் எவருக்கும் அநீதி இடம்பெறாமல் நீதியை நிலைநாட்டப்படும் என்பதை அல்குர்ஆனில் அல்லாஹ் நமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளான். நரகம், வேதனை, பாவிகளைத் தண்டித்தல் போன்றவற்றையும் கூறியுள்ளான். அங்குதான் முழுமையான நீதி கிடைக்கும். ஒரு கண்ணால் பார்ப்பவரால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. 6. அல்லாஹ் விதித்த விதியை எக்காரணத்தைக்கொண்டும் மாற்ற முடியாது. உஹது யுத்தத்தில் பல நபித்தோழர்கள் மரணித்தபோது சில நயவஞ்சகர்கள் கூறினார்கள் அவர்கள் எம்மோடு இருந்திருந்தால் இறந்திருக்கவோ கொல்லப்பட்டிருக்கவோ மாட்டார்கள் என்று. அதற்கு பதிலளித்த அல்லாஹ் “முடியுமானால் உங்களை மரணத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்” எனக் கூறி மரணம் உங்கள் மீது விதிக்கப்பட்டால் அது நிகழும் இடத்திற்கு நீங்கள் வீட்டுக்குள் இருந்தால் அங்கு சென்றுதான் ஆக வேண்டும் என மரணம் எங்கிருந்தாலும் வரத்தான் போகின்றது. போர் செய்யாமல் இருந்ததற்காக மரணம் வராமலிருக்காது எனக் கூறுகின்றான். இவ்வாறான தவறான எண்ணங்களால்தான் மனக்கவலைகள் அதிகரிக்கின்றன. அல்லாஹ் விதித்தது நடந்துதான் ஆகுமென்ற நம்பிக்கை இருந்தால் எவ்வளவு இன்னல்களையும் சகித்துக்கொள்ள முடியும். 7. அதிக உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் நாம் தோல்வியுற்றோம் என்பதற்கான அடையாளமல்ல. மாறாக தோல்வி மனப்பான்மை கோழைத்தனம், பலவீனப்படுதல் போன்றவையே தோல்விக்கான அடையாளங்களாகும். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேலானவர்கள். 3:139. மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான். 3:146. 8. எப்படியிருந்தாலும் இறுதியில் இவ்வுலகில் நல்ல முடிவு மார்க்கத்தைப் பின்பற்றி அதற்கு உதவும் முஃமின்களுக்கே. நூஹ், இப்ராஹீம், ஹுத், ஸாலிஹ், லூத், மூஸா, ஈஸா மற்றும் முஹம்மத் அலை அவர்களுக்கு உதவியது போல் உதவி கிடைக்கும். இவ்வெற்றி அவர்களுக்கு மாத்திரமானதல்ல மாறாக சோதனையை வெற்றிகரமாகக் கடக்கும் அனைவருக்கும் பொதுவானதாகும். 12:110. (நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். எங்களால் முடியுமானவற்றைச் செய்து அல்லாஹ் விரும்பும் விடயங்களை மேற்கொண்டால் அல்லாஹ் வாக்குறுதிக்கு மாற்றம் செய்யப்போவதில்லை.
إظهار الكل...
உஹத் போரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தோல்வியைப் பற்றி பேசும் போது அல்குர்ஆன் உங்களுக்கு முன்பிருந்தவர்களோடு எவ்வாறு நாம் நடந்துகொண்டோம் என்பதை நீங்கள் சிந்தித்துப்பாருங்கள் எனக் கூறுவதன் மூலம் சோதனைகள் நமக்கு மாத்திரம் உரியதல்ல மாறாக அனைவருக்கும் பொதுவானது எனக் கூறுகின்றான். இவ்வாறான சோதனைகள் முக்கிய காரணங்கள் நான்கு 1- தன் அடியார்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரித்தறிவதற்கான ஒரு வழிமுறை. துன்பங்களில்தான் உண்மையான உண்மையான முஸ்லிம் யார் நடிப்பவர் யார் என்பதைப் புரியலாம். 2- அல்லாஹ்வின் பாதையில் சிலருக்கு வீரமரணம் அடையும் பாக்கியத்தை வழங்குதல். 3- முஃமின்களைப் பாவங்களை விட்டும் பரிசுத்தப்படுத்துதலும் திருந்துவதற்கான வாய்ப்பை வழங்குவதும். முஃமின்களுக்கு ஏற்படும் இது போன்ற சிரமங்களைப் பார்த்து திருந்தும் எத்தனையோ மனிதர்கள் உண்டு. 4- காபிர்களைத் தண்டிப்பது. இவர்களின் அநியாயம் அதிகரித்துச் செல்லும் போது தண்டனைக்கு தம்மை அவர்கள் ஆளாக்குவதோடு மறுமையிலும் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள். மேற்கூறிய நான்கு விடயங்களும் பின்வரும் வசனங்களில் இடம்பெற்றுள்ளன. {إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ (140)} {وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ (141)} [آل عمران] நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறிமாறி வரும்படி நாம்தான் செய்கிறோம். ஏனென்றால், 1- உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், 2-உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்த(றிவிப்ப)தற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்). 3-நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், 4-காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான். 2. இன்று காஸாவிலே நடைபெறும் நிகழ்வைவிட பன்மடங்கு மோசமான சம்பவங்களை அல்லாஹ் நமக்குக் கூறியுள்ளான். பிர்அவ்ன் பச்சிளம் குழந்தைகள் பிறக்கும்போதே கதறக்கதறக் கொன்றொழித்தான். சில காலங்களுக்குப் பின்னர் அவர்களுக்கு வெற்றியை வழங்கியதாக தெளிவுபடுத்தியுள்ளான். 7:137. எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். அவ்வாறு வெற்றியை வழங்கியதற்கான காரணம் பொறுமையே என்பதாகவம் தெளிவுபடுத்தியுள்ளான். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம். ஆரம்பத்திலேயே கதை முடிந்துவிடுவதில்லை. இறுதி வரை எதிர்பார்க்க வேண்டும். 3. அநியாயக்காரர்களை விட்டுப்பிடிப்பது அல்லாஹ்வின் வழிமுறையில் உள்ளதாகும். இதில் ஒரு பகுதி அநியாயக்காரனோடும் அடுத்த பகுதி அநியாயம் இழகை்கப்பட்டவனோடும் சம்பந்தப்பட்டுள்ளது. 3:178. இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு. 19:84. எனவே, இவர்கள் மீது வேதனை இறங்க வேண்டுமென நீர் அவசரப்படாதீர். நாம் அவர்களுக்காக (நாட்களை) எண்ணிக் கொண்டிருக்கின்றோம். காபிர்களை அழிக்குமாறு அவசரப்பட வேண்டாம். அவர்களின் பாவங்கள் அதிகரிப்பதற்காக அவர்களை அழிக்காமல் விட்டுவைத்திருக்கின்றோம். அவர்களை அழிக்காமல் தாமதிப்பது அவர்களின் நலவுக்காக அல்ல. என இமாம் தபரீ விளக்கம் கூறுகின்றார்கள். எனவே அநியாயக்காரணைத் தண்டிக்காமலிருப்பது அவன் மீதுள்ள அன்பினாலல்ல மாறாக தண்டனையைக் கடுமையாக்கவே என்பதே இதன் கருத்தாகும்.
إظهار الكل...
நாளைய குத்பாவுக்கான சில குறிப்புகள் சோதனைகளைப் பார்த்து மிரண்டுபோயுள்ளோருக்கு குர்ஆன் சுன்னா கூறும் ஆறுதல்கள் முஸ்லிம்களுக்கு ஏற்படும் தொடர் சோதனைகளைப் பார்த்து சிலர் இஸ்லாத்திலேயே ஐயம் கொள்ளவும் வாய்ப்புள்ளது. அவ்வாறான சிந்தனை தமது ஜும்ஆவுக்கு வருவோருக்கு இருக்குமென்று கருதினால் கீழுள்ள குறிப்புக்களைப் பயன்படுத்தி உரை நிகழ்த்துவது பொருத்தமாக அமையும். கேள்வி அநியாயம் இழைக்கப்பட்டவன் காபிராக இருந்தாலும் அவனுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் எனும் போது ஏன் அப்பாவி முஸ்லிம் குழந்தைகளைக் கூட அல்லாஹ் பாதுகாக்கவில்லை. அல்லாஹ் எங்கே சென்றுவிட்டான்? அவனது பாதுகாப்பும் உதவியும் எங்கே? பதில் 1. துஆக்களை ஏற்றுக்கொள்வதாக வாக்களித்த அதே இறைவன்தான் சோதனைகளையும் ஏற்படுத்துவதாகத் தெளிவுபடுத்தியுள்ளான். இவ்வாறான சோதனையின்றி சுவனம் நுழைய முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளான். உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) 2:214. எனவே முதலாவதை மாத்திரம் எடுத்துக்கொண்டு இரண்டாவதை விடுவது பொருத்தமற்றதாகும். இதனை உணர்ந்த நபித்தோழர்கள் அஹ்ஸாப் அல்லது அகழ்ப்போரின் போது நாலா பக்கங்களாலும் எதிரிகள் சூழ்ந்துகொண்டு இயற்கைக் கடன் கழிப்பதற்குக் கூட வெளியே செல்ல அஞ்சிய சந்தர்ப்பத்தில் ஈமானில் உறுதியாக இருந்தோர் ”இதுதான் அல்லாஹ்வும் ரஸுலும் ஏற்கனவே நமக்கு (சோதனை ஏற்படும்) என அளித்திருந்த வாக்குறுதி” எனக் கூறினார்கள். நயவஞ்சகர்கள் அல்லாஹ்வும் ரஸுலும் நம்மை ஏமாற்றிவிட்டனர் எனக் கூறினார்கள். இது போன்ற சோதனைகளின் போது அவசரப்படுவதை விட்டும் அல்குர்ஆனும் சுன்னாவும் நம்மை எச்சரித்துள்ளது. கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்' என்றார்கள். ஸஹீஹ் புகாரி : 6943.
إظهار الكل...
إظهار الكل...
பைதுல் முகத்தஸ் மீட்கப்பட்ட வரலாறு

அப்துல்லாஹ் உவைஸ் மீஸானீ ِAbdullah Mohammadu Uwais Meezani

பலஸ்தீன் தூபானுல் அக்ஸா போராட்டமும் நாம் புரிந்துகொள்ள வேண்டியவையும் உரை அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி ஓடியோ அளவு 3 MB காலம் 15 நிமிடங்கள் உள்ளடக்கம் 1. தூபானுல் அக்ஸா போராட்டம் வழங்கும் முக்கிய படிப்பினை 2. சர்வதேச மீடியாக்கள் மற்றும் அரசுகளின் உண்மை முகம் 3. முழு மேற்குலகின் கோபத்தின் பின்னனி என்ன? 4. முஸ்லிம் மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தள பாவனையாளர்களின் கடமை என்ன? 5. அரபு மொழி தெரிந்தோரின் கடமை என்ன? 6. ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய கடமை
إظهار الكل...
Voice 208(3).mp33.63 MB
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.